• மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாட உள்ளது.இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்களை அறிவித்துள்ளது.
  • கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
  • மேலும் இத்தொடரில் கோலி, ரோகித் ஷர்மா, தவான், சுப்மண் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), கே. எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், முகமது சிராஜ்,புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள்.
  • இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும் பூனேவில் நடைபெற உள்ளது. தற்போது டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் அணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணியாக இந்த ஒருநாள் தொடரை இந்தியா விளையாட உள்ளது.
See also  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி த்ரில் வெற்றி