Homeசெய்திகள்அரபிக்கடலில் உருவானது காற்றழுத்தால் : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்தால் : தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

- Advertisement -

ஹைலைட்ஸ் :

  • தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது
  • நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாகவே ஒரு சில இடங்களில் மழை பெய்துவருகிறது தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கனமழை

சிலதினங்களாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசியில் கனமழை பெய்யக்கூடும் எனவும், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி,இது புயலாக மாரும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. புயல் உருவாக வாய்ப்பிருப்பதால் அரபிக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -
Exit mobile version