Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

தமிழகப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

  • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.
  • வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன.
  • கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
  • மேலும் தமிழக அரசு, 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
  • அதேநேரத்தில் பாடத்திட்டங்களை நடத்தி முடிக்க மாணவர்கள் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
  • இதற்கிடையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். மேலும் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மாவட்ட அளவில் அல்லது பள்ளி அளவில் பருவத்தேர்வுகளை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
  • அதற்குபிறகு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் 9 மற்றும் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும் ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவல் பரவியது.
  • ஆனால் தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவலை மறுத்து பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  • இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
  • இந்த சுற்றறிக்கையில், வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது . இதனால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை பள்ளிகள் திறந்திருக்க வேண்டும். இதனை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
Previous Post
postal vote

தபால் வாக்கு செலுத்த 2,44,922 பேர் விண்ணப்பம்

Next Post
election

தமிழகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் பரிசீலனை

Advertisement