Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
corona virus

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா….

  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இருவாரங்களுக்கு முன்பு 300 என்ற அளவில் குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து கடந்த 24 மணி நேரத்தில் 836 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 860563 ஆக அதிகரித்துள்ளது.
  • அதேநேரத்தில் ஒரே நாளில் 553 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை சுமார் 12 ஆயிரத்து 551 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டங்கள் அளவில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

corona

  • அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 317 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 81 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கோவை மாவட்டத்தில் நான்கு நாட்களில் ஒருநாள் பாதிப்பு வேகமாக அதிகரித்திருப்பது அப்பகுதி மக்களை அச்சமடைந்துள்ளனர்
  • கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக பரவினாலும் சில வாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • அதேபோன்று தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் ஏற்படுகிறதோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் மற்றொரு பொதுமுடக்கத்தை தவிர்க்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.