பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை படிப்படியாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைத்துள்ளது.

கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைத்துள்ளது. ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைத்துள்ளது. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைத்துள்ளது.

ஆனாலும், இணைப்பில் உள்ள பழைய வங்கிகளின் காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இணைப்பு செய்யப்பட்ட வங்கியின் பெயரில் உள்ள காசோலைகள் நாளடைவில் படிப்படியாக விலகல் செய்யப்பட்டு, புதிய வங்கியின் காசோலைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப் பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி, சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய, எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என அறிவித்து உள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெற்று உபயோகிக்கும் படி அறிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை, இனி யாரும் வாங்க வேண்டாம்.

See also  இன்று ஒரே நாளில் 24,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி