இன்று நள்ளிரவு முதல் சமையல் சிலிண்டர் விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில நாட்களாக சமையல் சிலிண்டர் விலையை மாதத்திற்கு இரண்டு முறை நிர்ணயம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் சமையல் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாடு முழுவதும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நாள்தோறும் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இந்த மாதமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ.10 குறைப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிலிண்டர் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படும். தற்போது சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.835 ஆக உள்ளது. சிலிண்டர் விலை குறைப்பின் மூலம் நாளை முதல் சிலிண்டர் விலை ரூ.825 ஆக விற்கப்படும்.

 

0 Shares:
You May Also Like
8pkAAAAASUVORK5CYII=
Read More

எஸ்பிஐ வங்கியின் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம்!

கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளுக்கு இடையே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஞாயிற்றுக்கிழமை கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளை அல்லாத…
Ola S1 launch
Read More

ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் கூட்டரின் சிறப்பம்சங்கள்

ஓலா ஸ்கூட்டர் முன்பதிவு கடந்த மாதம் திறக்கப்பட்டது மற்றும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இறுதியாக தனது முதல் பங்களிப்பை அறிமுகப்படுத்துகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதன்…
Read More

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து அதிக பணம் வசூலிக்கும் வங்கிகள்

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட…
Read More

எஸ்பிஐ யோனோ வழங்கும் சூப்பர் சலுகை

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றன. அண்மைக்காலமாக எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு…
Read More

ஏப்ரல் 18 ஆம் தேதி RTGS முறையில் பண பரிமாற்ற செய்ய 14 மணிநேரம் தடை

Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும். ரிசர்வ்…
Read More

போக்குவரத்து கழக பேருந்து சேவையில் புதிய மாற்றம்

ஹைலைட்ஸ் 70000 மேற்பட்ட பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் 300 முதல் 400 வரையிலான கூடுதல் பேருந்துகள் இயக்கம் கட்டாயம் முகக்கவசம், கையுறை…