Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

ஏப்ரல் 18 ஆம் தேதி RTGS முறையில் பண பரிமாற்ற செய்ய 14 மணிநேரம் தடை

Real-Time Gross Settlement (RTGS)என்பது பண பரிமாற்ற முறையை குறிக்கிறது. ஆர்டிஜிஎஸ் என்பது ஒரு தனிநபர் அடிப்படையில் பணம் செலுத்துவதற்கான தொடர்ச்சியான செயல்முறையாகும்.

ரிசர்வ் வங்கி ஏப்ரல் 18 ஆம் தேதி 14 மணி நேரம் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் பண பரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறியுள்ளது.

RTGS

Advertisement

தொழில்நுட்ப முறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுவதால் வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12 மணி முதல், பிற்பகல் 2 மணி வரை பணபரிவர்த்தனை செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து வாடிக்கையாளர்கள் முன்னதாகவே பரிவர்த்தனையை திட்டமிட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் என்.இ.எப்.டி(NEFT) முறையிலான பண பரிவர்த்தனை எந்த விதமான தடையுமின்றி செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே ஆர்டிஜிஎஸ் (RTGS) முறையில் செயல்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous Post
fine for mask

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி வசூல்

Next Post
rr

IPL 2021: பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

Advertisement