தமிழக்கத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் நலனைக் கருதி கொண்டு வார சந்தைககளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இதனை தொடர்ந்து மக்கள் தங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகின்ற நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தது. கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் உட்பட நெய்வேலி டவுன்ஷிப்பில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களின் நலன் கருதி அனைத்து வர சந்தைக்களும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு இடைங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

See also  சமூக வலைதளங்களில் வெளியாகிய மண்டேலா படத்தின் டீசர்