தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்த்தி பெற்றதாக தமிழக அரசு அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‛தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழக பள்ளிக்கல்வித் துறை 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து.

கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்,’ என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் மற்றும் ராமமூர்த்தி ஆகிய அமர்வு விசாரித்தது.

அப்போது, தேர்வுகள் ரத்து செய்வது குறித்து எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்றும் சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர், பொதுநல விஷயங்களில் அதிகாரிகள் உரிய கலந்தாய்வு செய்த பிறகே முடிவுகள் எடுப்பர் எனத் தெரிவித்தனர்.

பள்ளிகளில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்த அரசணையை ரத்து செய்ய நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் தகுதியை கண்டறிய அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம். இதற்க்கான வழிகாட்டு விதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

See also  தேர்தல் ஆணையத்திற்கு கள்ள ஓட்டு போடுவதை தடுக்க உத்தரவு

Categorized in: