- Advertisement -
SHOP
Home Blog Page 8

தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

0

தமிழ் ஒரு வரி கவிதைகள் என்பது சொற்களின் சுருக்கம் மூலம் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தும் சிறப்பு கவிதை வடிவம். இந்த கவிதைகள், எளிய வார்த்தைகளால் பேரிய நுணுக்கங்களை வெளிப்படுத்துவதோடு, ஒரே வரியிலேயே ஓர் வாழ்வின் உணர்ச்சிகளை, பார்வையை, சிந்தனையை தாக்குமாறு அமைந்துள்ளன. தமிழின் அழகியையும் மொழியின் செறிவையும் இவை பிரதிபலிக்கின்றன.

ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

  1. இதயம் வலித்தாலும் சிரி! அது உடைந்தாலும் சிரி!
  2. நேசிப்பது அழகு, நேசிக்கப்படுவது பேரழகு
  3. பேசும் வார்த்தையை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
  4. பயத்தின் முடிவே, வாழ்க்கையின் ஆரம்பம்.
  5. சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!
  6. அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல!
  7. ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்.
  8. அழுகை கூட அழகு தான்! குழந்தைகளிடம் மட்டும்.
  9. தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்.
  10. வாய்ப்புகளை தேடி அலையாதே! வாய்ப்புகளை உருவாக்கு!
  11. விடியல் என்பது கிழக்கிலல்ல! நம் உழைப்பில்.
  12. கற்றுத்தெளிவது கல்வி! அறிந்து தெளிவது அறிவு.
  13. போலியான புன்னகையை விட திமிரானக் கோபமே மேல்.
  14. தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை.
  15. சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்.
  16. இல்லாத போது தேடல் அதிகம். இருக்கின்ற போது அலட்சியம் அதிகம்.
  17. ஆயிரம் உறவுகள் தரமுடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்றுத் தரும்!
  18. கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே!
  19. நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்.
  20. அழகாய் பேசும் பல வரிகளை விட அன்பாய் பேசும் ஒற்றை வரிக்கே உணர்வுகள் அதிகம்!
  21. வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை – தனிமை.
  22. துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும், துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்.
  23. தேடலில் தொடங்கி, எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை!
  24. இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)
  25. அதிகமான ஆட்டம் குறுகிய காலமே என்று உணர்த்துகிறது சுற்றும் பம்பரம்.
  26. எதிர்பார்த்து வாழும் வாழ்க்கை ஏமாற்றத்திலே!
  27. நீயாக மாறுவதே..நிரந்தர மாற்றம்.
  28. எதையும் விட்டு விடாதே. கற்றுக் கொள்!
  29. காசு பேசுகிறது. மனிதன் ஊமையாகிறான்.
  30. உன்னை நீ நம்பு!
  31. பொறுமை பொக்கிஷம் போன்றது.
  32. வாழ்க்கை குறுகியது ஆனால் அழகானது.
  33. சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே.
  34. உழைப்பே உயர்வுக்கு வழி!
  35. நல்ல மனசாட்சி தான் கடவுளின் கண்.
  36. கோபம் ஆபத்தை தரும்.
  37. சிறந்த பாடத்தை சரியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்!
  38. ஆணவம் அழிவை தரும்!
  39. வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்.
  40. யாரோடும் பகை இல்லாமல் புன்னகைத்து வாழுங்கள்!
  41. நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு.
  42. செல்வாக்கு இருந்தாலும் சரியானதை செய்யுங்கள்!
  43. அதிக கோபம் உடல் நலத்திற்கு தீங்கானது.
  44. சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள்!
  45. நம்பிக்கையை கொண்டு மனிதனின் வீரத்தை நிர்ணயித்து விடலாம்.
  46. தீர்வை விரும்புங்கள். தர்க்கத்தை வளர்க்காதீர்கள்!
  47. எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது.
  48. உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்!
  49. அமைதியான கடலில் ஒவ்வொருவரும் சிறந்த மாலுமியாக இருக்கிறார்கள்.
  50. உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்!
  51. அதிக ஓய்வு அதிக வேதனையை தரும்.
  52. பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்!
  53. எல்லாம் உண்டு! ஆனால், எதுவும் நிரந்தமில்லை!
  54. லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது.
  55. நம்பிக்கையே சகல நோய்களுக்கும் செலவில்லாத ஒரே மருந்தாகும்.
  56. அளவான உணவு உடலுக்கு நலம். அளவோடு பழகு உறவுக்கு நலம்.
  57. அளவற்ற உழைப்பே மேன்மை தரும்.
  58. நாளை கனவு போன்றது.. இன்றைய நிஜத்தினை ரசித்திடு.
  59. நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்.
  60. ஊமையாகவே இருந்து விடாதே. வாழ்க்கை உன்னை ஊனமாக்கிவிடும்.
  61. அனுபவம் அன்பாக சொல்லி தருவதில்லை.
  62. வானிலையை விட அதிவேகமாக மாறுகின்றது மனிதனின் மனநிலை.
  63. வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்.
  64. விழுந்தால் அழாதே எழுந்திரு!
  65. குழந்தைகளின் அறியாமை மிக அழகு.
  66. எண்ணங்களே நம் வாழ்க்கையை வடிவமைக்கின்றது.
  67. சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.
  68. செய்து முடிக்கும் வரை எந்த செயலும் சாத்தியமற்றது தான்!
  69. வீழ்வது தவறில்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு!
  70. விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம் இல்லையேல் உரம்!
  71. இன்றைய வலி. நாளைய வெற்றி!
  72. “சவால்” என்ற வார்த்தைக்குள் “வாசல்” என்ற வார்த்தை ஒளிந்திருக்கின்றது.
  73. துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
  74. திறமைகளின் எல்லைக்குள் வெற்றி இருக்கிறது.
  75. பொறுமை வெற்றியாளர்க்கு மிகவும் அவசியமான மூலதனம்.
  76. சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்.
  77. போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
  78. அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.
  79. சோம்பேறித்தனமாக இருப்பது தற்கொலைக்குச் சமம்.
  80. லட்சியத்தை அடைவதில் நேர்மை வேண்டும்.
  81. அடிபணிந்து வாழ்வதைவிட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
  82. மனம் விட்டுப் பேசுவதைவிட சிறந்த அறிவு வேறில்லை.
  83. தாமதம் என்பது தவறுக்கு முன்னுரிமைக்குரியதாக உள்ளது.
  84. அதிகாரத்தை வெல்வது அன்பு. பயத்தை வெல்வது துணிவு.
  85. கல்லாமையே எல்லாத் துன்பங்களுக்கும் ஆணிவேர்.
  86. நிதானத்தை கடைபிடி. அதுவே வெற்றியின் முதற் படி.
  87. நேரமின்மை ஒரு நாகரீகமான புறக்கணிப்பு.
  88. பேசாத மௌனம் சொன்னதை விட மேலானது.
  89. உன்னை மறக்க நினைக்க என் மனம் மரணத்தையே நாடுகிறது
  90. ஒரு மனிதனின் நம்பிக்கை அவனது துணிச்சலை தீர்மானிக்கும்.
  91. பயத்தின் முடிவு வாழ்க்கையின் ஆரம்பம்.
  92. சேமிப்பு இல்லாவிட்டால் உழைப்பு பயனற்றது.
  93. நல்ல மனசாட்சியே கடவுளின் கண்.
  94. வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள்
  95. சில நேரங்களில் அதிக அன்பு கூட பயனற்றது!
  96. நீங்கள் இன்னொருவரை அழிக்க நினைத்தால் உங்களை அழிக்க ஒருவர் வருவார்.
  97. சிறந்த தருணத்தில் சிறந்த பாடத்தை வழங்கும் ஒரே பயிற்றுவிப்பாளர் நேரம்!
  98. நம்பிக்கை மட்டுமே அனைத்து நோய்களுக்கும் மலிவான தீர்வு.
  99. பெருமை என்பது மகத்தான உழைப்பில் இருந்து வருகிறது.
  100. நாம் நம்மை நம்பும் வரை வாழ்க்கை நம்முடன் இருக்கும்.
  101. அனுபவம் அன்பாக கற்பிக்காது.
  102. வலிகளை ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கை அழகாகும்.
  103. நீ விழித்த பிறகு எனக்கு பகல்.
  104. நீங்கள் ஒரு படம் போல இருட்டில் பிரகாசிக்கிறீர்கள்.
  105. இசையின் மீதான காதல் தனிமையைக் குறைக்கும்.
  106. தேவைப்படுபவர்கள் அருகில் இருந்தால் வேறு எதுவும் தேவையில்லை.
  107. இடைவெளி விரிவடைவதற்கு முன், வாழ்க்கை இழக்கப்படுகிறது.
  108. நீங்கள் விரும்பும் வாழ்க்கையை நீங்களே எழுதுங்கள், அது நிறைவேறும்.
  109. முந்தைய பாதை கடினமாக இருந்தது, புதியதாக மாற்றப்பட்டது.
  110. நீயே என் அமைதிக் கோயில்.
  111. தேவையற்ற உறவில் தன்னார்வ நட்பு மட்டுமே இருக்கும்.
  112. வலி இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியான ஒன்றல்ல.
  113. எதிரி நண்பன் என்று தெரிந்தால் கடைசி வரை போராடு.
  114. வார்த்தைகளைப் பயன்படுத்துவதை விட வாழ்வதே சிறந்தது.
  115. மகிழ்ச்சியாக இருங்கள், இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை
  116. நினைவுகள் தொடர்பாக மட்டுமே காலம் மாறுகிறது.
  117. ஒரு பயிற்சி இதழுடன் தொட்டது.
  118. நான் உன் அருகில் இருக்கிறேன், நீயே என் உலகம்.
  119. காதல் கேட்க இனியது! செய்ய கடியது!
  120. செய்வது துணிந்து செய்!
  121. பிறரை திருத்தமுடியாது. நீ திருந்திவிடு!
  122. வார்த்தைகள் அனைத்தும் மௌனமாகிறது, என் அருகில் நீ அமர்ந்தவுடன்
  123. ஆணவம் அழிவைத் தரும்.
  124. பயமும் கவலையும் உயிரைக் கொல்லும்.
  125. ஒதுக்கினால் ஒதுங்கு.
  126. உழைக்காதவன் உண்ணத் தகுதி இல்லாதவன்.
  127. என் இனிய தனிமையே…
  128. விடிவைக் காண, விரைந்து எழுவர்!
  129. நான் வாழ்ந்த முதல் அறை நீ!
  130. சிரிக்காத நாளெல்லாம் வீணான நாட்களே!
  131. கடந்து போவது கற்றுத் தராமல் போகாது!
  132. துணிவின்றி எப்பணியுமில்லை!!!
  133. குறையை தனிமையில் சொல், குணத்தை கூட்டத்தில் சொல்
  134. இசையால் வசமாகா இதயமேது?
  135. புன்னகைத்துப் பாருங்கள். வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்!
  136. அமைதியைத் தேடாதே! அமைதியாய் மாறி விடு.
  137. எண்ணம் போல் வாழ்க்கை!
  138. ஆசையே துன்பத்திற்கு காரணம்.
  139. தீதும் நன்றும் பிறர்தர வாரா.
  140. நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு.
  141. எதிர் பார்த்து வாழும் வாழ்க்கை ஏமாற்றத்திலே.
  142. சேமிப்புக்குப் பின் செலவு.
  143. மதிக்காத இடத்தில் செருப்பை கூட கழட்டாதீர்கள்.
  144. வீண் பகட்டு வேண்டாம்.
  145. சிக்கனமே சேமிப்பு!
  146. தகுதியற்றவன் தரங்கெட்ட செயலைத்தான் செய்வான்.
  147. முன்னேற்றம் என்பது சிறிதளவாயினும் தினமும் இருக்க வேண்டும்.
  148. உன் எண்ணமே உன் சொற்கள்.
  149. விழிப்புணர்வு உன்னை உயிர்ப்புடன் வைக்கும்!
  150. உன் நம்பிக்கையே உன் உயரம்.
  151. பழசை நினை!
  152. முட்டாளிடம் பேசுபவர் அடிமுட்டாள்.
  153. உழைப்பே பிழைப்பு!
  154. நீ வாழ் பிறரைக் கெடுக்காதே!
  155. மாறு… மாற்று.
  156. நாளின் ஒவ்வொரு நொடியும் உன்னுடையது.
  157. தேடல் தினம் செய்.
  158. ஒருவனைப்பற்றி நன்கு அறிய அவனை அதிகமாக பேசவிடு.
  159. மனங்கள் இன்னும் விடியட்டும்.
  160. ஆக வேண்டியதைப் பார்…
  161. புகழுரையில் மயங்காதே!
  162. நம்மை சரி செய்தல் நன்மை விளையும்.
  163. சிறுக வாழக் கற்றுக் கொள்!
  164. அவளும் நானும்.
  165. அச்சம் தவிர்!
  166. நெஞ்சே எழு!
  167. நீ யார் என்பதை. உன் செயல் சொல்லும்.
  168. வலி மறக்க வழி தேடு.
  169. காலம் காயங்களை ஆற்றும்.
  170. பணிந்தவன் எல்லாம் பயந்தவன் அல்ல.
  171. தனித்திரு. அதுவே உன் தனித்திமிர்.
  172. நான் வீழ்வேன்னொன்று நினைத்தாயோ!
  173. தவமின்றி கிடைத்த வரமே!
  174. எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும்.
  175. அகரம் இப்போ சிகரம் அச்சு.
  176. எண்ணம் ஒரு மலர், மொழி அதன் மொட்டு, செயல் அதன் கனி
  177. தாயின் இதயமே குழந்தையின் வகுப்பறை
  178. பணம் ஒரு சிறந்த வேலைக்காரன், மோசமான எஜமானன்
  179. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்
  180. கழ் நெருப்பைப் போன்றது, அதை அணைத்துவிட்டால் மூட்டுவது கடினம்
  181. பயத்தைப்போல் பயங்கரமானது வேறில்லை
  182. அன்பாகவும் விவேகமாகவும் இருக்க முயல்வது உண்மையில் சாத்தியமற்ற ஒன்று
  183. புகழை நோக்கி ஓடாதீர்கள், புகழை நீக்கியும் ஓடாதீர்கள்
  184. மோசமான மனிதர்களே பெரும்பாலும் சிறந்த ஆலோசனையை தருகிறார்கள்
  185. இன்பத்தை இரட்டிப்பாக்கி துன்பத்தைப் பாதியாகக் குறைப்பதுதான் நட்பு
  186. நீங்கள் செயல்படாதவரை எதுவும் தானாக இயங்காது
  187. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சிறந்த வழி, மற்றவரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிப்பதே
  188. பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு
  189. கதிரவனும் விரைந்து வந்தது, அவள் கண் விழிக்கும் அழகு காண
  190. தவறான வழியில் வரும் பணம், தவறாமல் துன்பத்தைத் தரும்
  191. சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்
  192. மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?
  193. ஒரு நண்பன் மாதா, பிதா, குரு, தெய்வம் அனைத்திற்கும் சமம்
  194. குறைகள் காணும் உலகில், நிறைகள் தெரிவதில்லை
  195. விதையோ வினையோ, விதைத்தவனுக்கு அதற்கான பலன் நிச்சயமுண்டு
  196. முடிவும் அழகானது என்பதற்கு, சூரிய அஸ்தமனமே சான்று
  197. பாசத்தைக் காட்டி காட்டி பைத்தியம் ஆனது தான் மிச்சம்
  198. அன்பு வைப்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பரிசு, ஏமாற்றம்
  199. முதல் காதலைக் கூட மற, முதுகில் குத்தியவர்களை மறவாதே
  200. உன்னிடம் காதலை சொல்லாமலே, என் இன்ப வாழ்க்கை துன்பமாகிறது
  201. இன்று நான் இருக்கும் இடம், நாளை உனக்கும் வரும்
  202. சிலரின் அன்பு, ஆழமான காயத்தை மட்டும் விட்டுச்செல்கிறது
  203. சேராமல் போய் விடுவாய் என்றால், வராமலே போய்விடு என் கை கோர்க்க
  204. காலங்கள் களவாடியா காவியமாய், நம் காதல் நினைவுகள்
  205. அழுகையும் சரி, சோகமும் சரி உன்னை ஏமாற்றியவர்களுக்காக சிந்தாதே
  206. அவளின் உள்ளத்துமொழி புரியாமல், புதிராகி போனது என் காதல்
  207. நீ உடனில்லாத போது, உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன்
  208. ஏழை பணத்தை நேசிப்பதில்லை பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை
  209. நீ யார் என்பதை நீ கூறுவதை விட, பிறர் கூறுவதே வெற்றி
  210. அன்பு உணரப்பட வேண்டியது உணர்த்தப்பட வேண்டியதல்ல
  211. எம் இருவர் இடையிலான மோதலில் வாழ்வது, காதலாகட்டும்
  212. வெற்றி என்ற கோட்டைக்கு, குறுக்குவழி கிடையாது.
  213. அதிகப்படியான அன்பு கூட, சில சமயங்களில் அர்த்தமில்லாமல் போகும்
  214. எல்லாம் உண்டு ஆனால், எதுவும் நிரந்தமில்லை
  215. ஒரு துளிஅன்பு பல வஞ்சகத்தை வெல்லும்
  216. தகுதிக்கு மீறியது ஆசையென்றால், அங்கு அன்பும் தேவையற்றது தான்
  217. சிறந்த பாடத்தை சதியான நேரத்தில் கற்பிக்க தவறாத ஒரே ஆசான் காலம்
  218. மனுசங்க தேவைனு பழகுங்க உங்க தேவைக்காக பழகாதிங்க
  219. நம் வாழ்க்கை எளிதல்ல நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்
  220. வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தரைக்கு தான் வரவேண்டும்
  221. ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்
  222. மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
  223. நீங்கள் நிறுத்தாத வரை எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் பரவாயில்லை
  224. தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது
  225. செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
  226. இன்று நீங்கள் உணரும் வலி நாளை நீங்கள் உணரும் பலமாக இருக்கும்.
  227. உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்
  228. ஒரு சிக்கல் உங்கள் சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாகும்
  229. வெற்றி இலக்கை அடைய தோல்விகள் படிகட்டுகள்
  230. பழைய பழக்கங்கள் புதிய பாதைகளைத் திறக்காது
  231. விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்கு அல்ல
  232. நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்
  233. உலகில் நீங்கள் காண விரும்பும் மாற்றமாக இருங்கள்
  234. வாழ நினைப்பவனுக்கு வானம் கூட வாயிற் படி தான்
  235. ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு
  236. நீங்கள் அதை கனவு காண முடிந்தால், நீங்கள் அதை அடைய முடியும்
  237. செயல் அனைத்து வெற்றிகளுக்கும் அடித்தளமாகும்
  238. வெற்றி என்பது கொடுத்து பெறுவது அல்ல முயன்று அடைவது
  239. லட்சியம் இருக்கும் இடத்தில் அலட்சியம் இருக்காது
  240. ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு
  241. தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பம் ஏற்படுவதில்லை
  242. தயக்கம் தடைகளை உருவாக்கும், இயக்கம் தடைகளை உடைக்கும்
  243. சவால்கள் மேல் சவாரி செய்வதே வெற்றிக்கு வழி
  244. உன்னைத் தவிர நீ வெற்றியடைவதை வேறு யவராலும் தடுக்க முடியாது
  245. பலனை எதிர்ப்பார்க்காதே, நன்மையைச் செய்
  246. மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
  247. மதி கொண்டு முயற்சித்தால் விதி என்று ஏதுமில்லை இங்கு
  248. முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை
  249. பேசுவது ஒரு திறமை,பேசாமல் இருப்பது பெரிய திறமை.
  250. உழைப்பாளன் வருத்தம் அடைந்தால் உலகம் அழிந்துவிடும்
  251. பேச்சுத் திறமைக்கு எந்த செல்வமும் இணையானது அல்ல
  252. கண்டிக்கத் தெரியாதவனுக்கு கருணை காட்டவும் தெரியாது
  253. நமது குறிக்கோள் என்பது காலக்கெடு கொண்ட கனவு தான்
  254. குழந்தையின் எதிர்காலம் எப்போதும் தாயின் செயலில் அடங்கி இருக்கிறது
  255. எதற்காகவும் காத்திருக்க வேண்டாம், இந்த நிமிடமே சரியான நேரம்
  256. உன் நம்பிக்கையே உன் உயரம்
  257. முதிர்ச்சியின் இதயம்…அனுபவம்!
  258. உழைப்பே துணை! உழைப்பு மட்டுமே உறுதுணை…
  259. நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது
  260. ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்
  261. சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்
  262. எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே
  263. கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை
  264. நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு
  265. அன்பெனப்படுவது யாதெனில் நீ!
  266. மவுனமும் பழகு…
  267. நீ வேண்டும்.. நான் வாழ!
  268. நச்சரிப்புகளைக் குறை!
  269. உன்னில் கடவுள் உள்ளார்!
  270. புது உலகைக் காண்!
  271. நல்லது போற்று!!!
  272. தீர யோசி…
  273. சேவையைப் போற்று!
  274. ஏமாற்றம் தரும் பெரும் மாற்றம்.
  275. ஏழைக்கு உதவு!
  276. கற்பது தொடர்.
  277. வாய்ப்புகள் தேடு!
  278. துரித உணவுகள் தவிர்.
  279. தீவினையார் அஞ்சார்
    விழுமியார் அஞ்சுவர்
  280. ஊரைப் போற்று!
  281. நேரம் தவறாதே!
  282. வருமானத்திற்குள் வாழப் பழகு.
  283. கடவுள் நமக்கு வழங்கியிருப்பது நேரம் மட்டுமே…
  284. வல்லமை வளர்!
  285. நன்றி சொல்லப் பழகு.
  286. தனக்குத்தானே எதிராய் திரும்பும் ஆயுதம்-கோபம்.
  287. எதிரியின் நோக்கம் அறி!
  288. முன்னேறிச் செல்…
  289. மேன்மை அடை.
  290. இனி உன் சொல் இனிய சொல்
  291. துவளாமல் துணிக!
  292. எதுவும் சில காலம் தான்.
  293. வேண்டாதவற்றை விலக்கு.
  294. முன்னேற்றம் காண்.
  295. காதலைப் போற்றுவோம்!
  296. உன்னைப் புதுப்பி!
  297. நன்றி கூறு…
  298. தன்னை அறிக!
  299. சிரிக்க மறக்காதே!
  300. கடவுளைத் தேடு!
  301. ஆற அமரச் செயலாற்று…
  302. ஊர் போற்ற வாழ்.
  303. வித்தையொன்று கற்றுக்கொள்!
  304. பெற்றோரின் வலி பிள்ளைக்குத் தெரியாது.
  305. காது கொடுத்துக் கேள்!
  306. ஆத்திரம் அழிக்க. சூத்திரம் பயில்.
  307. விரும்பு அல்லது விலகு.
  308. சேவை செய்!
  309. மனிதரில் மற்றவருக்குச் சமம் நீ.
  310. விழித்திரு விடியல் வரும்.
  311. வேண்டியதைச் செய். வேண்டாதவற்றைச் செய்யாதே!
  312. அமைதி உத்தமம்.
  313. ஊதாரியாய் இராதே!
  314. கல்லாமை பின்னிழழுத்துச் செல்லும்.
  315. கடவுளை நம்புகிறவன் தவறு செய்யத் துணிவதில்லை.
  316. வெற்றி இறுதியுமில்லை. தோல்வி முடிவுமில்லை..
  317. தட்டிக் கேள்!
  318. முன்னேறாதவர்கள், அறிவாய் உழைக்காதவர்கள்.
  319. காணாத போது கண்களுக்குள் வாழ்கின்றாய்
  320. சிறைக்குள்ளேயே சிறகடிக்கும் அவளும் ஆசைகளும்
  321. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன
  322. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது
  323. மோசமான தனிமை என்பது உண்மையான நண்பர்களைக் கொண்டிருக்காததே
  324. ஆதரவு கொடு!
  325. மகிழ்ச்சியாக இரு
  326. உற்சாக மிழக்காதே
  327. அடி பட்டவன். அடி கொடுப்பான்
  328. நிழல் தேடாதே. நிழலாக இரு
  329. உண்மை பேசினால் நீ ஒருமையில் இருப்பாய்
  330. உன்னுயரம் உனக்குத் தெரியும்
  331. சோகம் விடு
  332. நல்லதை நாடு
  333. சாகும் வரை வாழ்
  334. மனதைப் பழக்கு
  335. சிக்கனம் இக்கணம்
  336. இடிவிழுந்த வீட்டில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே
  337. இன்றை உனதாக்கு
  338. சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
  339. இதுவும் கடந்து போகும்
  340. பாதங்கள் இரண்டும் பறவையானது
  341. வேஷங்களில் பொய்யில்லை
  342. இதயம் பேசுகிறது
  343. இன்றை இழக்காதே
  344. கண்ணெல்லாம் நீயே தான் நிற்கின்றாய்
  345. மகிழ்வே ஆயுள்
  346. நீ மட்டும் என விட்டு நீங்காதடி
  347. உளறல்கள் உள்ள(த்)தைச் சொல்லும்
  348. காதலடி நீ எனக்கு
  349. அறிவை நாடு
  350. நட்பை நன்மையால் வளர்
  351. வெளியே வா
  352. அறம் வளர்
  353. நோக்கம் அறி
  354. தடம் விட்டுச் செல்
  355. முன்னோர்கள் வகுத்துத் தந்த பாதையில் முள் இராது
  356. பிறர் நலமும் விரும்பு
  357. கை கொடு
  358. உண்மைக்கு அண்மையாயிரு பொய்க்கு சேய்மையாயிரு
  359. தியாகத்தை மதி
  360. வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்கையில் இறுதி வரை நிலைக்கும்
  361. எதையும் விட்டு விடாதே, கற்றுக்கொள்
  362. சம்பாதிப்பவனைவிட சேமிப்பவனே சிறந்தவன்
  363. கனவை மீட்டித் தாருங்கள்
  364. வலி மறக்க வழி தேடு
  365. ஆணவத்தின் அடையாளம் ஆடம்பரம்
  366. ஒளியாக நீயிருப்பதால் இருளைப்பற்றிய கவலை எனக்கில்லை
  367. மதியும் மனமும் விளையாடுகிறது விதி எனும் நூல் கொண்டு
  368. நீயே உனக்கு என்றும் நீங்கா துணை
  369. மன நிம்மதியின் மாளிகை.. தனிமை
  370. அஞ்சியும் வாழாதே, கெஞ்சியும் வாழாதே
  371. தூங்கினால் காதிலே ஞாபகம் பேசுதோ
  372. பிடித்ததும் ஒரு நாள் பிடிக்காமலும் போகலாம்
  373. இன்றைய உலகில் யாதும் யாவரும் சில காலம் தான்
  374. வலிகளுக்குள்ளேயும் வழியைத் தேடி வாழ்பவள் தான் பெண்
  375. காலம் சிலரின் முகத்திரைகளை கிழிக்கும்
  376. முகமூடி கிழியும் வரை அனைவரும் நல்லவர்களே
  377. பலமும் அன்புதான் பலவீனமும் அன்புதான்
  378. எதையும் மறக்காது மறந்தது போல் நடிப்பவள் பெண்
  379. உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்
  380. எல்லாம் சில காலம்
  381. அமைதியைத் தேடாதே அமைதியாய் மாறி விடு

வாழ்க்கை பற்றிய கவிதைகள் – life quotes in tamil

0

வாழ்க்கை கவிதைகள் தமிழ்

அழுகின்ற வினாடியும்
சிரிக்கின்ற நிமிடங்களும்
வாழ்க்கை சக்கரத்தில்
நிரந்தரமில்லை

முழுமையாக தெரிந்து
கொள்ளாமல் எதையும்
மதிப்பிடாதே

தீர்க்க முடியாத துன்பம்
எதுவும் இல்லை துன்பத்துக்கு
சரியான தீர்வை கண்டு
பிடிக்காதவர்கள் தான் அதிகம்

அணை உடைத்த நீர் அழிவையே தரும்
மணம் உடைத்தவார்த்தை
இழிவையே தரும்

வாழ்க்கையில் நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும் வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து நீ நடந்தால்
தடுக்கிவிட பலரும் இருப்பார்கள்

வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

ஆயிரம் ஆசிரியர்கள்
கற்றுக்கொடுக்க முடியாத
வாழ்க்கைப் பாடத்தை
ஒரு சில தோல்விகள்
நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள்
எப்போதும் சிறந்ததாகவே இருக்கும்

இறுதி வரை வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
வாழ்க்கை இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு

நேசிக்க யாரும் இல்லை என
யோசிக்க வைக்கிறது வாழ்க்கை
நேசிக்க அன்பு வரும்பொழுது
அதை நினைக்க மறந்துவிடுகிறது

போராடி வாழ்வதற்கு
வாழ்க்கை ஒன்றும் போர்க்களமல்ல
அது பூ வனம்
ரசித்து வாழ்வோம்

யாரும் அறியாத முகம் அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே

இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது
இருளில் தான்

வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும்
இருப்பது கரை என்னும் நம்பிக்கை
அதில் பீறிட்டு ஓடுகிறது
விதி என்னும் வேடிக்கை

தனக்கு உண்மையாக இருக்கும்
ஒருவனுக்கு யாருடைய உபதேசமும்
தேவையில்லை

தளராத இதயம் உள்ளவனுக்கு
இவ்வுலகில் முடியாதது என்று
எதுவும் இல்லை

அன்பை தருபவர்களை விட
அநுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்

காணாமல் போனவர்களை தேடலாம்
அதில் சிறிதும் தவறு இல்லை
கண்டும் காணாமல் போனவர்களை மட்டும்
உன் வாழ்க்கையில் நீ தேடி விடாதே

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை
மட்டுமே கேட்டால்

வாழ்க்கை வாழ்வதில் இல்லை,
நம் விருப்பத்தில் இருக்கிறது

வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்
தோல்வி கண்டவர்கள் வெற்றிக்காக காத்திருக்கிறார்கள்
இதுதான் வாழ்க்கை

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு

நம்மை நாம் கேள்வி கேட்காதவரை
நம் தவறுகளை நாம் உணரபோவதில்லை

நிறைய பேர் செல்வதால்,
அது நல்வழி என்று பொருளல்ல.

ஒருவனின் தெளிவான குறிக்கோளே
வெற்றியின் முதல் ஆரம்பம்

நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்

நமக்கு தெரிந்தது மிகவும்
குறைவு என்பதை புரிந்து
கொள்ள பலரை நாம்
கடந்து செல்ல வேண்டும்

விரும்பியதைப்
பெற காசிருந்தால்
மட்டும் போதாது
பொறுமையும் வேண்டும்

தவறு செய்ய யாரும் பயப்படுவதில்லை
செய்யும் தவறு வெளியே தெரிய கூடாது
என்றே பயப்படுகிறார்கள்

புரிந்து கொள்ளவில்லை
என்றாலும் பரவாயில்லை
எதையும் தவறாகப்
புரிந்து கொள்ளாதீர்கள்

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

சூழ்நிலை எதுவாயினும்
உன்னை நம்பி வந்தவரை
ஒரு நாளும் ஏமாற்றாதே

விருப்பம் இருந்தால்
ஆயிரம் வழிகள்
விருப்பம் இல்லாவிட்டால்
ஆயிரம் காரணங்கள்
இவை தான்
மனிதனின் எண்ணங்கள்

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே
உனக்காக தன்னையே மாற்றிக் கொள்ளும் ஒருவரை
என்றும் கைவிடாதே

உன்னை மதிக்காத
இடத்தில்
பிணமாக கூட
இருக்காதே

வாழ்க்கையில் வெற்றி
அடைய முக்கியமான
மந்திரம் உனது
ரகசியங்களை
யாரிடமும் பகிராதே

நமக்கு பிடித்ததை தான்
நாம் செய்ய வேண்டுமே தவிர
அது மற்றவர்களுக்கு பிடிக்குமா
என்று யோசிக்க கூடாது

உண்மையும் நேர்மையும்
பயம் கொள்ளாது
மாறாக மரியாதை
தந்து பழகும்

பிடித்ததைப் பறித்துப்
பிடிக்காததை கொடுத்து
சந்தோஷமாக வாழ்
என்று சொல்லி சிரிக்கிறது
வாழ்க்கை

வாழ்க்கையில்
பல வலிகளும் உண்டு
பல வழிகளும் உண்டு
வலியை மறந்து
புது வழியை கண்டுபிடியுங்கள்
வாழ்க்கை சுகமாகும்

விதியை நம்பிக்கொண்டு இருப்பவன்
என்றும் விழிக்க மாட்டான்
தன்நம்பிக்கையோடு இருப்பவன்
என்றும் தோற்க மாட்டான்

தேவை இல்லாமல் பேசுவதை விட
மெளனமாக இருப்பதே சிறந்தது
நம் மனதை புரிந்துகொள்ளாத ஒருவர்க்கு
நாம் பேசும் வார்த்தைகளும் புரியாது

எல்லா தத்துவங்களும் இளமையிலே வாசிக்கக் கிடைக்கிறது
ஆனால், அதை பின்பற்ற முதுமை வரை போராட வேண்டியிருக்கிறது.

வலிகளை மறக்க வழி கிடைத்தால்
விழி திறந்து அந்த வழியில் செல்
வலிகளால் என்றும் வாழ்க்கை இனிக்காது

சிரிக்கும் போது
வாழ்கையை வாழ
முடியும் ஆனால்
அழும் போது மட்டுமே
வாழ்கையை புரிந்து
கொள்ள முடியும்

குணத்தைப் பற்றி சொல்ல ஆள் இல்லை
குறை சொல்ல ஊரே உள்ளது

நம் பயம்
எதிரிக்கு தைரியம்
நம் அமைதி அவனுக்கு குழப்பம்
குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் ஜெயித்ததில்லை

எண்ணங்கள் அழகானால்
எல்லாமே அழகாக மாறும்

வாழ்க்கையில் வென்றவனுக்கும்
தோற்றவனுக்கும் வரலாறு உண்டு
ஆனால் வேடிக்கை மட்டும் பார்த்தவனுக்கு
ஒரு வரி கூட கிடையாது
எனவே, பேசுவதை விட செயலில் காட்டுங்கள்

அதிக வலிகளை கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல வழிகாட்டியாக இருக்கும்

உழைத்த காசிற்க்கு
மட்டும் கையேந்து
மற்ற எதற்கும்
எவரிடமும் கையேந்தாதே

கற்பனை என்ற
போர்வையில்
ஒளிந்திருக்கின்றன
நம் நிறைவேறா
ஆசைகள்

வலிமை உள்ளபோதே
சேமிக்க பழகு
கடைசியில் யாரும்
கொடுத்து உதவமாட்டார்கள்

துணியாத வரை வாழ்க்கை பயங்காட்டும்,
துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்

என்ன நடந்தது
என்பதை விட
அதை நாம்
எப்படி எடுத்துக்கொள்ளுகிறோம்
என்பதே வாழ்க்கை

தூய எண்ணம்
கொண்டிருங்கள்
ஏனெனில் எண்ணத்தின்
பிரதிபலிப்பே வாழ்க்கை

அலட்சியம் என்பது எவ்வளவு பெரிய தவறு
என்று இழப்பு ஏற்படும் வரை தெரிவதில்லை

உன்னைத் தாழ்த்துபவர்
முன் உயர்ந்து நில்
உன்னை வாழ்த்துபவர்
முன் பணிந்து நில்

வாழ்க்கை என்றுமே அழகானது தான்
உங்கள் மனம் சொல்வதை மட்டுமே கேட்டால்

வலி தாங்கும்
மனமிருந்தாலே போதும்
வாழ்க்கை முழுவதும்
சிரித்து மகிழலாம்

வாழ்வின் அர்த்தமும்
நோக்கமும் மகிழ்ச்சி
ஒன்றுதான்

அதிக வலிகளை
கண்ட உள்ளம்
வாழ்க்கையில் நல்ல
வழிகாட்டியாக இருக்கும்

தனக்கு வலிக்கும்
வரை மற்றவர்களின்
வலி என்பது நமக்கு
ஒரு தகவலே

வாழ்க்கையை
வாழும் போதே
இரசித்து வாழுங்கள்

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை
சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை

அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்..

சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் உண்டு
அவற்றை மறந்து வாழவேண்டுமே தவிர
மறைத்து வாழக்கூடாது

அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது

அடுத்தவரை ஈர்ப்பதற்காகவும்!!
அடுத்தவரின் எண்ணங்களுக்காகவுமே
இங்கு பலரின் வாழ்க்கை நகருகிறது !!!

ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்

இரு பக்கமும் கூர்மையான கத்தியை
கவனமாக பிடிக்க வேண்டும்..
அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு
கவனமாக பழக வேண்டும்..!

கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்..

வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது

நம்மை யார் என்று நமக்கே தெரியப்படுத்த
தேவைப்படும் ஒன்று தான்.. அவமானம்.

உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா?
யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்

வாழ்க்கை என்பது
உனக்காக இடத்தை தேடுவது அல்ல
உனக்கான உலகத்தை உருவாக்குவது

மனமும் கண்ணாடியை போல்தான்
உடையும் வரை யாரையும்
காயப்படுத்துவதில்லை

யாருக்காகவும் காத்திருக்காதே
நீ காத்திருப்பதால்
உன் ஆயுள்
அதிகரிக்கபோவதில்லை

பயணம் முடிவில்
கிடைக்கும் இருக்கை
போன்றது வாழ்க்கை

கடினமான பாதைகளே
மிக அழகான இடங்களுக்கு
கொண்டு செல்கின்றன

நீங்கள் எதன் மீது அதிக
கவனம் செலுத்துகிறீர்களோ
அது அதிகரிக்கும்
கவலையாக இருந்தாலும்
மகிழ்ச்சியாக இருந்தாலும்

மகிழ்ச்சியான முகம்
தான் எப்போதுமே
அழகான முகம்

எதிர்பார்க்கும் போது
நடக்காததும் எதிர்பார்க்காத
போது பல அதிசயங்கள்
நிகழ்வதுமே வாழ்க்கையின்
சுவாரஸ்யம்

நமக்கு குழி பறிக்க
யாரும் தேவையில்லை
நாம் விட்டுச் செல்லும்
கவனபிழைகள் போதும்

நம்மை பற்றி அடுத்தவர்
அறிந்து கொள்ளாத வரை
நாம் சுவாரஸ்யம் தான்
அறிந்து கொண்டால்
நாம் சாதாரணம் தான்

எல்லாத்தையும் ஏற்றுக்க
பழகிக்கோங்க வாழ்க்கை
எப்போ வேணாலும்
எப்படி வேனும்னாலும் மாறிடும்

உன்னை செதுக்கி கொள்ள
உளி தேவை இல்லை
பலரது அவமானங்களும்
சிலரது துரோகங்களும்
போதும்

இன்பமும் துன்பமும்
ஆற்று வெள்ளம்
போன்றது நிலையாக
நிற்காது ஓடி விடும்

வெற்றியை நினைத்து மகிழ்வதை விட
கடந்து வந்த தோல்விகளை
நினைவில் வைத்து செயல்பட்டால்
வாழ்க்கையை என்றும்
மகிழ்ச்சியாக வாழலாம்

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

வாழ்வின் சில
தருணங்களையெல்லாம்
மீண்டும் உருவாக்க
முடியாது நடக்கும்போதே
இரசித்துக் கொள்ளுங்கள்

எத்தனை பெரிய
துன்பத்தில் இருந்தும்
உன்னை காக்கும்
ஆயுதம் உண்மையும்
பொறுமையுமே

கலங்கிய நீரில்
தெளிவான பிம்பங்களும்
கலங்கிய மனதில் தெளிவான
சிந்தனைகளும் பிறப்பதில்லை

இழப்பதற்கு எதுவும்
இல்லாதவர்களிடம்
உங்கள் பெருமையை
காட்டாதீர்கள் அவர்கள்
பெருமை கொள்ளும்
அளவிற்கு உதவுங்கள்

நமக்கு தெரிந்தது மிகவும் குறைவு
என்பதை புரிந்து கொள்ள
பலரை நாம் கடந்து செல்ல வேண்டும்

வாழ்க்கையில் சம்பாதிக்க
வேண்டிய மிகப்பெரிய
விஷயம் பொறுமை

உன்னை நீ புரிந்துகொள்ளவும்
தெளிவு கொள்ளவும் பயணம்
ஒரு அற்புதமான வழி

வயிற்றை எளிதில் நிரப்பிவிடலாம்
ஆனால் கண்ணையும் மனதையும்
திருப்தி செய்வது மிகவும் கடினம்

ஒருத்தருக்காக இன்னொருத்தர
இழக்காதீங்க அந்த ஒருத்தர்
உங்க வாழ்க்கையில நிரந்தரமா
இருப்பாங்கனு யாரும்
உத்திரவாதம் தர முடியாது

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

மகிழ்ச்சி என்பது சிரித்துக்
கொண்டு இருப்பது அல்ல
தனிமையில் இருக்கும்
போதும் எந்த வித
கவலையுமின்றி இருப்பது

எதிர்மறை சிந்தனை
உள்ளவனை மருந்தால்
கூட காப்பாற்ற முடியாது

அழகாய் அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை அழகாய்
மாற்றுவதே வாழ்க்கை

பிடித்ததை வைத்துக்
கொள்ளுங்கள்
ஆனால் எதையும்
பிடித்து வைத்து
கொள்ளாதீர்கள்

உன்னிடம் இருக்கும்
அன்பும் நன்றியும்
யாரிடமும் இருப்பதில்லை

தர்மம் ஒரு போதும்
உங்கள் செல்வத்தை
குறைப்பதில்லை

பிடித்தமானவர்களை
புகழாதீர்கள் விரும்புங்கள்

தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும்
எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ
அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும்
நிம்மதியும் கிடைக்கும்

வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும்
ஆனால்.. ஒரே நாளில் எதுவுமே மாறாது
மனவுறுதியுடன் வாழ்வில் பயணிப்போம்

குனிவதால் எழுத்துகள்
நிமிரும் பணிவதால்
வாழ்க்கையும் உயரும்

கற்கையில் கல்வி
கசப்பு கற்றபின்
அதுவே இனிப்பு

மனிதன் தன்னுடைய
தோல்விகளுக்கு வைத்த
மறுபெயர்தான் விதி

உயர்ந்த இடத்தில்
ஆளில்ல உயர்த்தி
விடவும் ஆளில்லை
உன்னை நம்பு உன்
உழைப்பை நம்பு

பயன்படுத்தாத திறமை
அதன் ஆற்றலை
இழந்து கொண்டே இருக்கும்

வாழ்க்கையில் திரும்ப
பெற முடியாதவை
உயிர், நேரம்
பேசிய வார்த்தை

இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதும்,
ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும்
துணிச்சல் வேண்டும்

வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கணும்
யாரையும் நம்பித்தான்
இருக்கக் கூடாது

நிகழ்காலத்தை நினைத்து
பெறுமையும் கொள்ளாதே
சிறுமையும் கொள்ளாதே

வலிகள் நிறைந்தது தான்
வாழ்க்கை வெற்றியோ
தோல்வியோ நிற்காமல்
சென்று கொண்டே இருங்கள்

இருந்தால் உறவு
பிரிந்தால் நினைவு
அவ்வளவு தான்
வாழ்க்கை

அவரவருக்கு
நிகழாத வரை
நிகழ்வது எல்லாம்
வெறும் செய்தி தான்

மதித்தால்
மலராக இரு
மிதித்தால்
முள்ளாக இரு

நாம் உதிர்க்கும்
வார்த்தையில் ஒருவர்
நிம்மதி அடைந்தால்
அதுவும் தர்மமே

பக்குவம் வேண்டும்
என்றால் வாழ்க்கையில்
நொந்து தான் ஆகணும்

அளவான உணவு
உடலுக்கு நலம்
அளவோடு பழகு
உறவுக்கு நலம்

உதவத் தொடங்கு
உதவிகள் தானாய் வரும்

பணமும் மகிழ்ச்சியும்
பரம எதிரிகள்
ஒன்றிருக்கும் இடத்தில்
மற்றொன்று இருப்பதில்லை

நாம் வாழ்வதற்கு பணம்
குறைவாகத்தான் தேவை
ஆனால் அடுத்தவர் போல
வாழத்தான் பணம்
அதிகம் தேவைப்படுகிறது

கலங்கிய நீரும்
குழம்பிய மனமம்
ஒருநாள் தெளியும்
கவலைகளை கடந்து செல்லுங்கள்

ஒவ்வொரு மகிழ்ச்சியும்
வரம் என்பது துன்பங்களை
கடந்தவனுக்கே தெரியும்

கோபப்பட வேண்டிய
இடத்திலும் கதறி அழ
வேண்டிய இடத்திலும்
புன்னகையுடன் கடந்து
செல்வது தான் பக்குவம்

உன் வயதைக் காட்டிலும்
உன் குணம் தான்
மற்றவர்களுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும்

நீங்கள் பொருளீட்டுவது
நலமாய் வாழ்வதற்கு
மன அழுத்தத்தினால்
உங்களை நீங்களே
அழிப்பதற்கு அல்ல

வாழ்க்கையில்
எவ்வளவுதான் கஷ்டங்கள் வந்தாலும்
உங்களுக்கான நேரத்தை ரசிக்க மறக்காதீர்கள்

எதிர்பார்ப்பில்லாமல்
வாழ கற்றுக்கொள்
ஏமாற்றம் இருக்காது

வெறும் கருத்துக்களாலும்
அறிவுரைகளாலும் எவன்
வாழ்க்கையும் மாற
போவது இல்லை

புரிதல் இல்லாத
வாழ்க்கையில் புதையலே
கிடைத்தாலும் பயனில்லை

ஆணவத்தின்
அடையாளம்
ஆடம்பரம்

அன்பை ஆயுதமாக
ஏந்தியவனுக்கு
தோல்விகள் இல்லை

பயத்தை வெல்லாதவன்
வாழ்வின் முதல்
பாடத்தை கல்லாதவன்

காலம் காரணமின்றி
யாரையும் யாரோடும்
சேர்ப்பதில்லை

பிறரைச் சீர்திருத்துவதை விட
தன்னைச் சீர்திருத்துவதே
முதல் கடமை

புரிந்து கொண்டால்
கோவம் கூட அன்பு தான்
புரியாவிட்டால் பாசம்
கூட வேஷம் தான்

செலவழிக்க சில்லறை
கூட இல்லாத போது
தான் தெரியும் வீணாக
நாம் செலவழித்த
பணத்தின் அருமை

ஆசை வளர்ப்பதும்
ஆணவம் பெருகுவதும்
மனிதனது அழிவுக்கே அறிகுறி

உறுதியான மனிதருக்கு
தோல்வி என்று எதுவுமில்லை
போகும் பாதையில் கற்றுக்கொள்ள
பாடங்கள் மட்டுமே உள்ளன

காரணங்கள் சொல்பவர்கள்
காரியங்கள் செய்வதில்லை
காரியங்கள் செய்பவர்கள்
காரணங்கள் சொல்வதில்லை

கொஞ்சம் அனுசரித்து
வாழ்வது நல்ல வாழ்க்கை
எல்லாவற்றையும் அனுசரித்து
வாழ்வது நரக வாழ்க்கை

விதி என்பது உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது
உங்கள் விதியை நீங்களே
உருவாக்கத் தவறும்போது
அது தலைவிதியாகிறது

கடவுளிடம் ஏதாவது வரம்
வேண்டும் என்று கேட்டுக்
கொண்டே இருக்கிறோம்
ஆனால் வாழ்க்கை என்பதே
மிகப்பெரிய வரம் தான்

சிலருக்கு வேண்டும் போது
வேம்பும் இனிக்கும்
வேலை முடிந்து விட்டால்
வெல்லமும் கசக்கும்

நரிகளுக்கு மத்தியில் வாழும்
போது சில சமயம் கர்ஜனை
செய்து தான் சிங்கமென
நிரூபிக்க வேண்டியுள்ளது

பிறருக்கு கொடுப்பதற்கு
எதுவும் இல்லை எனில்
கனிவான வார்த்தைகளை
பேசுங்கள் அதுவே
சிறந்த ஆறுதல் தான்

வறுமையை விட
சிறந்த பள்ளிக்கூடம்
வேற எதுவும் கிடையாது

எந்த உறவுமே உங்களை
ஏமாற்றியதில்லை எனில்
நீங்கள் இன்னும் யாரிடமும்
உண்மையாக பழகவில்லை
என்று அர்த்தம்

நம்மிடம் ஏதுமில்லை என்று
நினைப்பது ஞானம் நம்மை
தவிர ஏதும் இல்லை
என்று நினைப்பது ஆணவம்

நமக்கு நாமே சுமை
தேவையற்ற சில
நினைவுகளை சுமப்பதால்

தன்னையும் பிறரையும் சரியாக
உணரும் திறன் படைத்தவர்கள்
தான் வாழ்க்கையில் மிகவும்
எளிதாக முன்னேற முடியும்

அடுத்தவர்களுக்கு கெடுதல்
நினைக்காத எல்லா
நேரமும் நல்ல நேரமே

அறிவாளிகளுக்கு அறிவு
அதிகம் ஆனால்
முட்டாள்களுக்கு
அனுபவம் அதிகம்

வானிலையை விட அதிக
வேகமாக மாறுகிறது
மனிதனின் மனநிலை

செய்ய முடியாததை நீங்கள்
செய்யாவிட்டால் பரவாயில்லை
ஆனால் உங்களால் செய்யமுடிந்ததை
நீங்கள் செய்யாவிட்டால் வாழ்க்கை
பரிதாபத்திற்குரியதாய் ஆகிவிடும்

நேற்றைய தோல்விகளுக்கான
காரணங்களை நீங்கள் கண்டறியா
விட்டால் நாளைய வெற்றியை
நோக்கி உங்களால் ஓர் அடி
கூட எடுத்துவைக்க முடியாது

வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்

வாழ்க்கை ஒரு கேள்வி
யாராலும் பதில் தர முடியாது
மரணம் ஒரு விடை யாராலும்
கேள்வி கேட்க முடியாது

பயன்படாத உண்மையை
விட தேவைக்கு பயன்படும்
பொய்யே கொண்டாடப்படுகிறது

கடந்தவை கசப்பான
நிகழ்வுகளென்றால்
அதை மீண்டும்
ருசிக்க நினைக்காதே

வாழ்க்கையில் கசப்பான
விஷயங்கள் நிகழ்ந்திருந்தால்
நீங்கள் விவேகமானவராக மாற
வேண்டும் காயப்பட்டவராக அல்ல

வாய்ப்புகளை உருவாக்க
தெரியாதவர்களை விட
வாய்ப்புகளை பயன்படுத்தத்
தெரியாதவர்கள் தான் அதிகம்

எதுவுமே செய்யாமல் வீணாகும்
வாழ்க்கையை விட எதையாவது
செய்யும் போது ஏற்படும்
தவறுகள் மிகவும் பயனுள்ளது
கண்ணியமானதும் கூட

சந்தோசம் என்பது மற்றவர்கள்
முன் சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும்
போதும் அழாமல் இருப்பதே

மன அழுத்தம் என்பது ஒரு
குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக ஏற்படுவதில்லை
உங்களை நீங்களே நிர்வகிக்க
முடியாததன் விளைவாக ஏற்படுகிறது

துன்பத்தில் கிடைக்கும்
அனுபவம் துணிச்சல் தரும்

வாழ்வில் அற்புத மாற்றங்களை
கொண்டு வரும் யோசனைகள்
புத்தகங்களிலிருந்து வந்தவையே

சிலருக்கு மாற்றம்
பழகிவிடுகிறது
சிலரை மாற்றம்
பழக்கிவிடுகிறது

பலரை சில காலமும்
சிலரை பல காலமும்
ஏமாற்றலாம் ஆனால்
எல்லோரையும் எப்போதும்
ஏமாற்ற முடியாது

அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி

வாழ்க்கை என்பது நீ
சாகும் வரை அல்ல
நீ மற்றவர்கள்
மனதில் வாழும் வரை

கோபத்தில் நாக்கு வேலை
செய்யும் அளவிற்கு மூளை
வேலை செய்வதில்லை

எத்தகைய சூழ்நிலைக்கு
வெளிப்படுத்தப் பட்டாலும்
ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும்
நல்ல நல்ல விஷயங்களை
எடுத்துக் கொள்ளுங்கள்

தவறு செய்ய
வாய்ப்பு கிடைத்தவன்
கெட்டவன் வாய்ப்பு
கிடைக்காதவன் நல்லவன்

ஆனந்தமாகவோ துக்கமாகவோ
இருப்பதை வேறொருவரால்
முடிவுசெய்ய இயன்றால்
அதுவல்லவா இருப்பதிலேயே
மோசமான அடிமைத்தனம்?

நமக்கு புடிச்சவங்க
அழ வைப்பாங்க
நம்மள புடிச்சவங்க
சிரிக்க வைப்பாங்க

நீ எப்படி யோசிக்கிறாயோ
அப்படித் தான் உன்
வாழ்வும் அமையும்

சிலர் பட்டம் போல்
உயரத்தில் பறக்கின்றோம்
என்ற ஆணவத்தில் உள்ளார்
கயிர் போல் சிலர் தாங்கிப்
பிடிப்பதை மறந்து

வாழ்க்கையில் துன்பங்கள்
இலவசம் போன்றவை
தானாகவே நம்மை தேடிவரும்
ஆனால் சந்தோசம் என்பது
நாம் கடுமையாக போராடி
வாங்க வேண்டியது

எது வேணாமோ
எது பிடிக்கலையோ
எதை ஏத்துக்க முடியாதோ
அது தான் வாழ்க்கை
முழுக்க நிறைஞ்சு இருக்கு

கொடுக்கும் கொடையை
விட கொடுப்பவனின்
மனநிலையே அவனை
அடையாளம் காட்டுகிறது

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

என்னவெல்லாமோ ஆகனும்னு
ஆசைப்பட்டு கடைசியில்
குழந்தையாகவே இருந்திருக்கலாம்
என்ற ஏக்கத்தில் முடிகிறது வாழ்க்கை

மனித நாக்கு எலும்புகள்
இல்லாததுதான் ஆனாலும்
அது ஒரு இதயத்தையே
உடைக்கும் அளவிற்கு
வலிமை கொண்டது

கருவறை இருளுக்கும்
கல்லறை இருளுக்கும்
நடுவில் இருக்கும்
வெளிச்சமே வாழ்க்கை

எதெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ
அதெல்லாம் வேண்டாம்
என்று நம்மையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்கை

கோபப்படும் இடங்களில்
துரோகம் இருப்பதில்லை
துரோகம் செய்யும் இடத்தில்
கோபம் இருப்பதில்லை

உங்கள் பாதையை நீங்களே
தேர்ந்தெடுங்கள் ஏனெனில்
வேறு எவராலும் உங்கள்
கால்களை கொண்டு
நடக்க முடியாது

ஆசை இல்லா மனம்
வேண்டும் நிம்மதியான
வாழ்க்கை வாழ

சாவு இல்லாத வீடும்
சலனமே இல்லாத
மனமும் இன்னும்
உருவாக்கப்படவே இல்லை

தொலைத்த பழைய
பொக்கிஷங்கள் ஒன்று
கூட திரும்பிக்
கிடைக்கப் போவதில்லை

யாரிடம் சண்டை போட்டுவிட்டு
நம்மால் இயல்பாக இருக்க
முடியவில்லையோ அவர்களை
நாம் நேசிக்கிறோம்
அல்லது வெறுக்கிறோம்

உண்மையான மகிழ்ச்சி
எதிர்காலத்தைப் பற்றிய
கவலையில்லாமல் நிகழ்
காலத்தை அனுபவிப்பதே

யாரும் கூட வரப்போறது
இல்ல யாரும் நமக்காக
நிற்க போறதும் இல்ல
வாழ்க்கைய தனியா
தான் நடந்து கடக்கனும்

உலகம் அதிசயமாகவே
இருந்தாலும் மனம்
விரும்பினால் தான்
ரசிக்க முடியும்

பிடிக்கும் வரை பொக்கிஷம்
வெறுக்கப்பட்டால் வெறும்
குப்பை பொருட்கள்
மட்டுமல்ல உறவுகளும் தான்

துரோகிகள் மீது நம்பிக்கை
வைத்ததற்காக வருத்தப்படாதே
நீ வைத்த நம்பிக்கைதான்
துரோகிகளை உனக்கு
அடையாளம் காட்டியிருக்கிறது

இந்த உலகில் மிகச்
சிறந்த மற்றும் அழகான
விஷயங்களைக் காணவோ
கேட்கவோ முடியாது ஆனால்
இதயத்திலிருந்து உணர முடியும்

வருங்காலத்தைப் பற்றி
கவலைப்படாதீர்கள்
நிகழ்காலத்தில் நல்லவிதமாக
செயல்பட்டால் உங்கள்
வருங்காலம் தன்னால் மலரும்

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட
போதிலும் புரிந்துகொள்ளாமல்
ஒதுக்கப்படுவது புத்தகங்கள்
மட்டும் அல்ல மனிதனின்
உணர்வுகளும் தான்

எதிர்பார்ப்புகள் பெரிதாக
இருந்தால் ஏமாற்றங்கள்
வலிக்கத்தான் செய்யும்

 

Minikki Minikki Song Lyrics – மினிக்கி மினிக்கி பாடல் வரிகள்

Minikki Minikki Song Lyrics in Tamil from Thangalaan tamil movie written by Uma Devi, Sung By Sinduri Vishal  And Music Composed By G. V. Prakash Kumar. Starring by Vikram , Parvathy Thiruvothu , Malavika Mohanan , Pasupathy , Daniel Caltagirone ,Hari Krishnan , Preeti Karan ,Vettai Muthukumar Directed by Pa. Ranjith

Minikki Minikki song Credits

Song name Minikki Minikki
Movie Thangalaan (2024)
Cast Vikram , Parvathy Thiruvothu , Malavika Mohanan , Pasupathy , Daniel Caltagirone ,Hari Krishnan , Preeti Karan ,Vettai Muthukumar.
Film Director Pa. Ranjith
Singers Sinduri Vishal
Lyrics Uma Devi
Music Director G. V. Prakash Kumar

Minikki Minikki Song Lyrics – Tamil

பெண் : அன்னக்கிளி
குழு : ஆ அன்னக்கிளி
பெண் : அன்னக்கிளி
குழு : அன்னக்கிளி
பெண் : சஞ்சாடுறா
குழு : சாயகிளி
பெண் : அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண் : பாலாத்து தண்ணி இப்போ
குழு : பவுசா ஜொலிக்குது
பெண் : பாசங்கு பார்வையில
குழு : அயிர குளிக்குது…

பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளியுது
தவுலோண்டு தந்திடிடலானு
தழும்பு கொழையுது

பெண் : பேரணங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
குழு : பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால

பெண் : எகே எகே எகே
எகே எகே

குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண் : எகே எகே எகே
எகே எகே

பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு
குழு : ஜலிச்சு சிரிக்குது
பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு
குழு : தெகச்சி மொரைக்குது
பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம்
குழு : சோக்கா திரியுது…

பெண் : சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம்
மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரஞ்சி போவதோ

குழு : கொட்டும் பனையா
வந்து கொண்டாடு கொண்டாடு

குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா

பெண் : எகே எகே எகே
எகே எகே

பெண் : அன்னக்கிளி
குழு : 
ஆ அன்னக்கிளி

பெண் : அன்னக்கிளி
குழு : அன்னக்கிளி
பெண் : சஞ்சாடுறா
குழு : சாயகிளி
பெண் : அன்னநட மின்னலிட
முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே

குழு : முனங்கல்

Minikki Minikki Song Lyrics – English

Female : Annakili
Chorus : Aaaa…. annakili
Female : Annakili
Chorus : Annakili
Female : Saanjaadura
Chorus : Saayakili
Female : Annanada minnalida
Munna vandhaale
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnane

Chorus : Minikki minikki
Mena minikki
Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha dhinnakutha

Female : Paalathu thanni ippo
Chorus : Pavusaa jolikkudhu
Female : Paasangu paarvaiyila
Chorus : Iyira kulikkudhu

Female : Kaathottam pannura maman
Thalappaa neliyudhu
Thavulondu thandhidalaanu
Thazhunbu kozhaiyudhu

Female : Peranangu ippo vandhaa munnaala
Peyaaduthu kannnu edhukku thannaala
Chorus : Piththam pudhichi ippo vandhaane pinnaala

Female : Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Chorus : Minikki minikki
Mena minikki
Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha dhinnakutha

Female : Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Female : Anjaaru jalldda kannu
Chorus : Jalichu sirikkudhu
Female : Aadu maadu thalli ninnu
Chorus : Thegachi moraikkudhu
Female : Solakaattu bomma yellam
Chorus : Sokka thiriyudhu

Female : Sokka potta akka paathu
Kaka meraludhu
Kumbal koodum megam
Mazhaya peyyadho

Female : Katti vacha sogam
Karainji povaadho

Chorus : Kottum panaiyaa
Vandhu kondaadu kondaadu

Chorus : Minikki minikki
Mena minikki
Minukka nadantha dhinnakutha
Siluppi siluppi jiguna siluppi
Silukka jolicha dhinnakutha

Female : Heyhe heyhe heyhe
Heyhe heyhe

Female : Annakili
Chorus : Aaaa…. annakili
Female : Annakili
Chorus : Annakili
Female : Saanjaadura
Chorus : Saayakili
Female : Annanada minnalida
Munna vandhaale
Pudhu vekkam vandhu
Maman ippo sokki ninnane
Chorus : Humming………………….

Minikki Minikki Song Lyrics – Lyrics Video

 

Halena song lyrics – ஹெலனா பாடல் வரிகள்

Halena song lyrics in Tamil from Iru Mugam tamil movie written by Ujjain Rai, Sung By Abhay Jodhpurkar, Ujjayinee Roy, Christoper Stanely  And Music Composed By Harris Jayaraj. Starring by Vikram, Nayanthara, Nithya Menen, Nassar, Thambi Ramaiah and Karunakaran Directed by Anand Shankar

Halena song Credits

Song name Helena
Movie Iru Mugam
Cast Vikram, Nayanthara, Nithya Menen, Nassar, Thambi Ramaiah and Karunakaran
Film Director Anand Shankar
Singers Abhay Jodhpurkar, Ujjayinee Roy, Christoper Stanely
Lyrics Ujjain Rai
Music Director Harris Jayaraj

Halena Song Lyrics – Tamil

பெண் : திஸ் இஸ் த பா்சன் ஹனி
வி ஆா் கெட்டிங் டுகெதா்
ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ
யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோி
அண்ட் தட் சென்ட் மீ பேக் நோ மேட்டா்
விஷ் ஐ குட் வி ஸா த சன்ஸ் அண்ட் மூன்
டுகெதா் இட் ட்ரூ தட் யூ ஆா் மை ஒன்லி வெதா்
ஐ வான்னா பாத்தே இன் யுவா் லவ் அண்ட் சவா்
நெவா் தாட் ஐ வில் கிஸ் இன் மை லைஃப் ஃபாா்எவா் எவா் எவா்

ஆண் : துகிரே வென் துகிரே
என் இதயம் துளைத்த துகிரே
துளிரே இளம் துளிரே எந்தன்
நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிா் புதிரே என்
இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே நின்று
கிரக்கம் கிளப்பும் கதிரே

ஆண் : அழகே ஓவியமே
என்னை விழுங்க துடிக்கும்
விழியே கனவே காவியமே
என்னை கவிஞன் ஆக்கும் தமிழே

ஆண் : { ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான } (2)

ஆண் : காதல் விடுமுறையே
நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடு திரையே என்
விரல்கள் தடவ படரு வெயிலில்
குளிக்கையிலே நான் உனது மேனி
திரையே கடலில் குளிக்கையிலே
நான் உனது உடலில் நுரையே

ஆண் : உலகின் காதல்
எல்லாம் உன் ஒருத்தி
மீது பொழிவேன் உலகின்
முத்தமெல்லாம் உன் ஒருத்தி
இதழில் குடிப்பேன்

ஆண் : { ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான } (2)

ஆண் : செல்பிக்குள் சிக்கி
கொண்டு சுழளுது பூமி
செல்போனுக்குள்ளே வாழ
வழி என்ன காமி ஹாா்ட்டுக்குள்
பேசிட ஹாா்மோன்கள் துாண்டிட
அப் ஒன்னு இருக்குதா காமி காமி

பெண் : சிலந்தி வலைக்குள்ளே
சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லாமை கொஞ்சும் போது
செல்பி எல்லாம் வேண்டாம்
பேஸ்புக்-ஐ வீசிடு பேஸ் பாா்த்து
பேசிடு மோசமாய் நீ கொஞ்சம்
மாறிடு மாறிடு

ஆண் : காதலை வேறெங்கோ
வேண்டாம் இங்கே வேண்டும்

பெண் : காதலா தேன் நிலவுக்கும்
முன்னோட்டம் வேண்டும்

பெண் : { ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான } (2)

ஆண் : ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசான கசான
கசா கசா கசான

ஆண் : ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
ஹாலே ஹாலென ஹாலென
ஹாலே ஹாலே ஹாலென
கசான கசா கசா கசான
கசா கசா கசா கசா கசா கசான

Halena Song Lyrics – English

Female : This is the person honey
We’re getting together
Oh baby I have to secure you
You never told me want to marry
And that send me back
No matter wish I could
We saw the suns and moon together
It true that you are my only weather
I wanna bathe in your love and shower
Never thought I’ll kiss in my life forever ever ever..

Male : Thugire ven thugire
En idhayam thulaitha thugire
Thulire ilam thulire
Endhan nilavil mulaitha thulire
Pudhire uyir pudhire
En ilamai kuzhappum pudhire
Edhire edhiredhire
Nindru kirakkam kilappum kadhire

Male : Azhage oviyame
Ennai vizhunga thudikkum vizhiye
Kanave kaaviyame
Ennai kavingnan aakkum thamizhe

Male : {Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana} (2)

Male : Kaadhal vidumuraiye
Nee varudam muzhudhum thodaru
Aasai thoduthiraiye
En viralkal thadava padaru
Veyilil kulikkaiyile
Naan unadhu meni thiraye
Kadalil kulikkaiyile
Naan unadhu udalil nuraiye

Male : Ulagin kaadhal ellam
Un oruthi meedhu pozhiven
Ulagin muthamellam
Un oruthi idhazhil kudippen….

Male : {Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana} (2)

Male : Selfie kul sikkikondu
Suzhaludhu bhoomi
Cellphonukkulle vaazha
Vazhi enna kaami
Heartukkul pesida
Hormonegal thoondida
App onnu irukkudhaa
Kaami kaami

Female : Silandhi valaikkulle
Sikkikkolla vendaam
Sellamaay konjum podhu
Selfie ellam vendaam
Facebookai veesidu
Face paarthu pesidu
Mosamaai nee konjam
Maaridu maaridu

Male : Kaadhale verengo vendaam
Inge vendum

Female : Kaadhala thennilavukkum
Munnottam vendum

Female : {Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana} (2)

Male : Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gazana gazana
Gaza gaza gazana

Male : Halena
Hale hale halena
Hale halena halena
Hale hale halena
Gazana
Gaza gaza gazana
Gaza gaza gaza gaza
Gaza gaza gazana

Halena Song Lyrics – Lyrics Video

வாட்டர் பாக்கெட் – Water Packet Video song & Lyrics

0

தனுஷ் நடித்த “ராயன்” தமிழ் திரைப்படத்தின் “வாட்டர் பாக்கெட்” என்ற பிரபலமான பாடல். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர். கானா காதரின் பாடல் வரிகளுடன் ரஹ்மான்.

பாடல்: வாட்டர் பாக்கெட்

பாடகர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடல் ஆசிரியர் : கானா காதர்

திரைப்படம்: ராயன்

தமிழ்English

ஆண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா

ஆண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..
மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..

ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி

பெண் : ஏய்.. காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி
நீ மீனா போல ஆஞ்சி

ஆண் : ஹா.ஆ..ஆ..ஆ..

ஆண் : உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு ..ஹே
உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு …
நீ தாண்டி மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு

பெண் : உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு …
நான் தானே மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு

ஆண் : சீன போடவா நானும்
சீலர போல
பலபலன்னு ஜொலிக்குறியே
வார்னிஷ்-ஆ போல
சீன போடவா நானும்
சீலர போல
பலபலன்னு ஜொலிக்குறியே
வார்னிஷ்-ஆ போல
ஹையோ வார்னிஷ்-ஆ போல
ஏ வார்னிஷ்-ஆ போலா

பெண் : ஹா.ஆ..ஆ..ஆ..

ஆண் : கியா போலே அம்மா போலே
உன்ன தூக்கினு ஜாவா போல
செல்லக்குட்டி ஓடி வாடி வாட்சை மேல
பெண் : ஹையோ கஹான் வாலே
கிதர் வாலே
தாகம் எடுத்த பாணி பீலே
கமக்கமா படுத்துக்கோ மைமா மேலே

ஆண் : உன் வாயில போட்டு மெல்லும்
பீடா ஜர்த்தாமா
ஐயோ ஹிந்தி ல சொன்னா
நான் பியார் கருத்தாம்மா
உன்ன பியார் கருத்தாம்மா

பெண் : நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
வச்சாலே என்னோட மனச தொட்டாயா
அலேக்கா ஹல்வா போல சாப்பிட்டு போயா

பெண் : மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா..
அய்யோ பஞ்சுமிட்டாயா..

ஆண் : சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி

பெண் : காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி

Male : Nee irukkuriye ola kottaaya
Summa nadakkuriyae thavala kottaaya
Nee irukkuriye ola kottaaya
Summa nadakkuriyae thavala kottaaya

Male : Majavaa inikkuriye panjumittaaya
Aama panjumittaaya
Haiyo panjumittaaya
Majavaa inikkuriye panjumittaaya
Aama panjumittaaya
Haiyo panjumittaaya

Male : Sojaa va paduthukuven un madila saanji
Summa vattama irukkuriye water packet moonji

Female : Kaanja molagaa pola
Naan irukkurene kaanji
En manasa usuppuriye
Nee meena pola aanji
Nee meena pola aanji
Nee meena pola aanji
Nee meena pola aanji
Nee meena pola aanji

Male : Haa..aaa..aaa..aaa…

Male : Unna paarthathum enakku
Yerudhu kickku..heyyy
Unna paarthathum enakku
Yerudhu kickku
Neethaandi maamanukkuyetha
Thakkali thokku

Female : Unna paarthathum enakku
Yerudhu kickku..
Naanthaane maamanukkuyetha
Thakkali thokku

Male : Scene-u podava naanum
Seelara pola
Ye palapalannu jolikkuriye
Warnisha pola
Ye scene-u podava naanum
Seelara pola
Ye palapalannu jolikkuriye
Warnisha pola
Haiyoo warnisha pola
Ye warnisha pola

Female : Haa..aaa..aaa..aaa…

Male : Kiaa pole amma pole
Unna thookkinnu jaava pola
Chellakutty odi vaadi vaatcha mela
Female : Haiyoo kahaan waale
Kidhar waale
Thaagam edutha paani pele
Gamakkama paduthukoo maimaa mele

Male : Un vaayila pottu mellum
Beeda jarthaamaa
Aiyoo hindiyila sonna
Naann pyaar karuthaamma
Un vaayila pottu mellum
Beeda jarthaamaa
Aiyoo hindiyila sonna
Naann pyaar karuthaam ma
Unna pyaar karuthaam ma

Female : Nee irukkuriye ola kottaaya
Summa nadakkuriyae thavala kottaaya
Vaachale ennodaya manasa thottaaya
Alekka halwa pola sappitu poyaa

Female : Majavaa inikkuriye panjumittaaya
Aama panjumittaaya
Haiyo panjumittaaya

Male : Sojaa va paduthukuven un madila saanji
Summa vattama irukkuriye water packet moonji

Female : Kaanja molagaa pola
Naan irukkurene kaanji
En manasa usuppuriye
Nee meena pola aanji

Water Packet song Lyrics

Pandian Stores 2 | 5th to 10th August 2024 – Vijay tv Promo

“Pandian Stores 2” விஜய் டிவி தொடர் – இந்த வாரம் புதிய புரமோ 5th to 1oth August விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தமிழ் தொடரான “Pandian Stores 2” இந்த வாரம் மின்மின் புரமோ மூலம் புதிய திருப்பங்களை உடையதாகக் காணப்படுகிறது. இந்த வாரத்தின் புரமோ, பாண்டியன் குடும்பத்தின் வாழ்க்கையில் முக்கியமான மாறுதல்களை சுட்டிக்காட்டுகிறது, இது கவர்ச்சியான கதைவிளக்கத்துடன் இணைந்து கொண்டுள்ளது.

புரமோவில், கதாபாத்திரங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு புதிய சவால்களை எதிர்கொள்கிறார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வெவ்வேறு இடர்ப்பாடுகள் மற்றும் மாறுதல்களால் கதையின் தீவிரம் அதிகரிக்கும் எனத் தெரியவருகிறது. அந்தவகையில், உணர்ச்சி ரீதியான மோதல்கள் மற்றும் சமாதானங்களைப் பற்றிய காட்சிகள் நம்மை பரபரப்பாகக் காக்கின்றன.

இந்த வாரம், பாண்டியன் குடும்பத்தின் உறவுகளைப் பற்றிய புதிய விவரங்கள் வெளிப்படுவது உறுதியாகும். அதற்கான விசிறியான மேடை, நிகரான நகைகளைப் போல், ரசிகர்களுக்கு மன்னிப்பும், மாறுபட்ட உணர்வுகளையும் அளிக்க இருக்கிறது.

இந்த வாரம் விஜய் டிவியில் “Pandian Stores 2” தொடரை மிஸ் செய்யாமல் பார்க்கவும். கதை, நடிகர்களின் திறமையான நடிப்பு மற்றும் காட்சிகள் அனைத்தும், நம்மை தொடர்ந்து இந்த தொடரில் ஈடுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Baakiyalakshmi | 5th to 10th August 2024 – Vijay Tv Promo

0

Baakiyalakshmi This week promo | 5th to 10th August “பாகலக்ஷ்மி” என்ற தொடர் விஜய் தொலைக்காட்சியில் பெரும் பிரபலத்தினைப் பெற்றது. இந்த நிகழ்ச்சி, ஒரு சாதாரண வீட்டின் பாகலக்ஷ்மி என்ற பாத்திரத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதல், குடும்ப உறவுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இந்த தொடரில், அதன் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களின் உரையாடல்கள், சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கக்கூடியவையாக அமைந்துள்ளன. “பாகலக்ஷ்மி” என்னும் தொடர், அதன் எளிய கதையை கொண்டு தூர்வாரமான வாழ்க்கை மற்றும் அதன் மகிழ்ச்சியோடு அண்மையான அனுபவங்களை பகிர்ந்து தருகிறது.

உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

1

uyir natpu kavithai in tamil – நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முறையும், நட்பின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகிறது. நட்பு என்பது நம்மை ஒருவருக்கொருவர் இணைக்கும் ஒரு மதிப்புமிக்க உறவு. மனித நேயத்தின் மேன்மையை உணர்த்தும் இந்த நட்பு, பல்வேறு காலங்களில், பல்வேறு சூழல்களில் நம்மை வாழ்வின் முழுமையை அனுபவிக்கச் செய்கிறது. இதேபோல, உயிர் நட்பு கவிதைகள் நாம் வாழும் ஒவ்வொரு நொடியிலும், நம்மிடையே உள்ள காதல், பரிவு, ஆதரவு, அன்பு, நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.

இந்த கவிதைகள், உங்களின் உள்ளத்தை உருக்கி, நண்பனின் ஆழ்மனதை தொட்டு, உண்மையான உறவின் அழகை உணர்த்துகின்றன. ஒரு நட்பு, எளிதில் வாராமல் இருந்தாலும், வந்தால் அது நம்மை எப்போதும் உற்சாகத்திலும், உறுதியிலும் தாங்கும் உறவாக மாறுகிறது. மனிதன் ஒருவரின் மனதின் ஆழம், எண்ணங்களின் உள் நிழல்கள், எதையும் இவையெல்லாம் உயிர் நட்பு கவிதைகள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

இனி வரும் கவிதைகளில், நம்மை நாமாகத் தரும் இந்த உயிர் நட்பின் அழகை அனுபவிக்கலாம். வாழ்வின் சுக, துக்கங்களில் ஒவ்வொரு நிலையிலும், நண்பனின் கைபிடித்து நம்மை உயர்த்தும் உணர்வுகளை காணலாம். இதன் மூலம், நட்பின் ஆழத்தை, அதன் பேரழகை உணர்ந்து மகிழலாம்.

உயிர் நட்பு கவிதைகள் – uyir natpu kavithai in tamil:

  1. வாழ்க்கை பாதை நெடுக, நட்பே என் துணை. அன்பு மழையில் நனைந்த, ஆறாத ஆனந்தம்.
  2. கண்ணீர் சிந்தும் கணத்தில், கை பிடிக்கும் நட்பே. உயிர் துடிக்கும் இதழில், புன்னகை பூக்கும்.
  3. அலை மோதும் கடலில், ஆறாத ஆறுதலாய். நட்பின் வலையில் நான், நெஞ்சமாய் வாழ்ந்தேன்.
  4. தூண்டில் போன்ற துன்பத்தில், தேடி வரும் நட்பு. தீவிர ஆசையில் மூழ்க, நெஞ்சில் நிதர்சனமாகும்.
  5. இருள் சூழும் இரவில், ஒளியேனும் நண்பா. துயரங்கள் துடைக்கும், தெய்வ மழையே நீ.
  6. நட்பின் நேசம் நிறைந்த, மனசில் மகிழ்ச்சியாய். உன்னுடன் நான் கூடும், உன்னத வாழ்வாய்.
  7. துயரங்கள் துளிர்க்கும் போது, தூய நட்பின் தேவை. உயிரின் உறவாட, ஊர்வலம் போகும் உறவு.
  8. சோதனை வலையிலும், சோதிடம் போல நட்பு. நேர்மை நிலவிய நிலம், நிதர்சன நலமாய்.
  9. பலபட்ட பாசம் நீ, பரிந்துண்டு வாழும் உறவு. உயிரின் உறவாட, உலகையே வென்றது.
  10. மறக்க முடியாதது, மருந்தான நட்பு. மாறாத நேசம், மாயா உலகில் நிலைக்கும்.
  1. அடிமானம் தாண்டிய, ஆதரிக்கும்தானே நட்பு. மனம் துள்ளி மகிழும், மழலை மழையே.
  1. உன்னில் எனை காண, ஒவ்வொரு நொடியும். உயிர் துடிக்கும் உனது, உன்னத நட்பு.
  1. கண்ணின் ஈரத்தில், காதலின் நிழலாய். தோழமையில் தோய்ந்த, தூய்மையான உறவு.
  1. வேரின் ஆழத்தில், வேர்ப்பாடு நட்பாகும். மழலையின் மலர்வாகும், வாழ்வின் அன்பு மழையாகும்.
  1. இரு இதழ் மலர் போல, எங்கும் இருக்கும் உன் நட்பு. ஒளியாய் மனதில், ஊர்வலமாகும் உன்னதம்.
  1. வாழ்வின் வழியில், வலியாய் வரும் உறவு. நீந்தும் நதியில், நீர் சுவையாகும் நட்பு.
  1. உயர்ந்தது உன்னது, உறவின் பெருமை. உயிரின் துணை நீ, உன்னத தோழமை.
  1. பகலாய் இரவாய், பாசமாய் இருக்கும் உன் நட்பு. உறவின் உடன்படிக்கையில், உயிர் உயிரை உரைக்கும்.
  1. கனவிலும் கன்னியாய், காதலில் கூடும் உறவு. நட்பின் நிழலில், நிழலாடும் உன்னதம்.
  1. தோல்வி வெற்றியில், தோழமையே துணை. வாழ்வின் சிகரத்தில், வானவில் சித்திரம்.

திருவெம்பாவை பாடல் வரிகள் | Thiruvempavai lyrics in Tamil

Thiruvempavai lyrics –  திருவெம்பாவை பாடல் வரிகள் – திருவெம்பாவை என்பது தமிழில் மிகப் பிரபலமான பக்தி பாடல்களின் தொகுப்பாகும். இது மெய்யாகவே பரம சிவபக்தர்களின் நெஞ்சில் சிவனின் திருவருளைப் பெற்றுத் தரும் முக்கியமான நூலாகும். திருவெம்பாவை பாடல்கள் முப்பத்து பாடல்களைக் கொண்டவை.

திருவெம்பாவையின் வரலாறு

திருவெம்பாவை பாடல்கள் மானிக்கவாசகர் எனப்படும் புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் மானிக்கவாசகரால் பாடப்பட்டவை. மானிக்கவாசகரின் இறை பக்தியும் ஞானமும் இந்தப் பாடல்களில் பிரதிபலிக்கின்றன. திருவெம்பாவை திருவாசகம் என்னும் மிகப் புகழ்பெற்ற நூலின் ஒரு பகுதியாகும்.

திருவெம்பாவையின் முக்கியத்துவம்

திருவெம்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில் அதிகாலையில் பாடுவதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது. இந்தப் பாடல்கள் பக்தர்களின் மனதுக்கு அமைதியையும் ஆன்மீக வளர்ச்சியையும் தருகின்றன.

பாடல் வரிகள் – Thiruvempavai lyrics

திருவெம்பாவை முப்பத்து பாடல்கள் கொண்டது. ஒவ்வொரு பாடலும் தனது சொற்களாலும் இசையாலும் மக்களை ஈர்க்கின்றன. சில முக்கியமான பாடல்களின் வரிகளை இங்கே பார்க்கலாம்:

Thiruvempavai lyrics in Tamil – திருவெம்பாவை பாடல்:

திருவெம்பாவை பாடல் – 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 2

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 5

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 6

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 7

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 8

கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 10

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 11

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 12

ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 13

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 15

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 16

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை பாடல் – 17

செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 18

அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை பாடல் – 20

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

Thiruvempavai lyrics in Tamil – திருவெம்பாவை பாடல் – Video:

திருவெம்பாவை பாடல்களின் சிறப்பம்சங்கள்

  1. இசையால் ஆனந்தம்: இந்தப் பாடல்கள் இசைக்கப்பட்டபோது ஒரு உன்னதமான ஆனந்த உணர்வை கொடுக்கும்.
  2. பகவானின் பெருமை: ஒவ்வொரு பாடலும் இறைவனின் திருக்குணங்களைச் சொல்கின்றது.
  3. நாளாந்த ஆனந்தம்: மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் இந்தப் பாடல்களைப் பாடுவதன் மூலம் பக்தர்கள் ஆனந்தத்தில் மூழ்கிவிடுகிறார்கள்.

துவங்கும் வழிகள்

திருவெம்பாவை பாடல்களை முழுமையாகக் கேட்க, திருவாசகத்தைப் படிக்கவும், அதன் பொருள்களை விளக்கவும் சில நல்ல வலைதளங்கள் உள்ளன.

  1. திவ்யப்ரபந்தம் – இந்த இணையதளம் பக்தி பாடல்களின் தொகுப்புகளை வழங்குகிறது.
  2. தமிழ் முரசு – தமிழ் இலக்கியங்களை விரிவாக விளக்கும் இணையதளம்.

முடிவு

திருவெம்பாவை பாடல்கள் தமிழ்ச் சமுதாயத்தில் மிக முக்கியமானவை. இவை ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் பரவலாகப் பாடப்படுகின்றன. இந்தப் பாடல்களைப் பாடுவதன் மூலம், பக்தர்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தங்கள் ஆன்மீக வளர்ச்சியை முன்னேற்றுகின்றனர்.

திருவெம்பாவையின் ஒவ்வொரு பாடலும் அதன் சொற்களாலும், இசையாலும் ஒரு தூய்மையான ஆன்மீக அனுபவத்தை அளிக்கின்றன. எனவே, இந்த மார்கழி மாதத்தில், திருவெம்பாவையை பாடுவதன் மூலம் இறைவனின் அருளைப் பெறுங்கள்.

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பிரம்மாண்டம்

இந்தியன் 2 ஓடிடி ரிலீஸ் – ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம், கமல்ஹாசன் திரும்பவும் இந்தியா தாத்தாவாக வந்து ரசிகர்களை மகிழ்விப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்த படம், தியேட்டர்களில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம், நீளத்தை குறைத்து மறு வெளியீடு செய்யப்பட்டும் கூட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ராயன் படத்தின் வெற்றி இந்தியன் 2-க்கு பின்னடைவு

சமீபத்தில் வெளியான ராயன் படம் பெரும் வெற்றியடைந்ததால், இந்தியன் 2 படம் திரையரங்குகளில் இருந்து மெல்ல மெல்ல ஒதுங்கி வருகிறது. சென்னையில் உள்ள சிங்கிள் தியேட்டர்களில் இந்த படத்திற்கான காட்சிகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மல்டிப்ளெக்ஸ்களில் மட்டுமே சில காட்சிகள் தற்போது போடப்பட்டு வருகின்றன.

ஓடிடி ரிலீஸ் எப்போது?

இந்த நிலையில், இந்தியன் 2 படம் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நெட்பிலிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் ஓடிடி உரிமையை பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர்களில் படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால், ஓடிடி ரிலீஸ் தேதி முன்பே வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக, ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகும். ஆனால் இந்தியன் 2 படம், இந்த நடைமுறையை மீறி முன்பே ஓடிடி தளத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளது. இருப்பினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் உறுதியாக தெரியவரும்.

முடிவு

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2 படம், எதிர்பார்த்த வெற்றியை திரையரங்குகளில் பெறாதது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஓடிடி தளத்தில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான பாடலுக்கு இசைஞானி ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும், பாடலின் கவிதை வரிகளைப் படைத்து, தனது செந்தமிழ் குரலால் உயிர்ப்பித்தவர் “பால் தாஸ்” என்பது குறிப்பிடத்தக்கது.

Makkamishi Song Lyrics – Tamil

பாடகர் : பால் டப்பா

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பாடல் ஆசிரியர் : பால் டப்பா ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற

ஆண் : போடே

ஆண் : அதேதான் அதேதான்

ஆண் : அப்புடியே புடிச்சிக்கோ

ஆண் : உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற

ஆண் : நாலு வால்சுக்குள்ள மட்டும் ரூல்ஸ்
பேசி நடிக்கிற
நா அதே ரூல்ஸ்ச ரோட்ல பேசுனா
ஏண்டா வந்து கொலைக்குற

குழு : சிக்கான் சிக்கான் அச்சுக்கு சக்கான் சக்கான் சக்கான் சக்கான் (2)

ஆண் : நான் முட்டா ஊதியா
எனக்கு ரத்தம் வந்தா உனக்கு இன்னா
தக்காளி சட்டினியா
என்னோட ரைம்ஸ் இஸ்க்கீம் பார்த்து இன்னா கிண்டல் பன்றியா
இன்னாடா சுண்டல் தரியா

ஆண் : ஹே ஆடுதொட்டியில ரோடு முக்குல
ஒலிஞ்சு நிக்குற வைட் கய்
ஜோபில வஞ்சுஇருந்த டைம் லிமிட்டில்ல
காசு அடிச்சது நைஸ் ட்ரை
நைஸ் ட்ரை நைஸ் ட்ரை

ஆண் மற்றும் குழு : மக்காமிஷி …..
{பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி (2)

ஆண் : இன்ஸ்டால்மெண்ட்ல ஹெட்போன் வாங்க
கூட உனக்கு காசு இல்ல
இன்ஸ்டாக்ராம்ல எஸ்சிட்மென்ட் பார்க்க
ஓடி வாரான் மாப்ள

ஆண் : நான் சம்மர் டைம்ல
உள்ளன கோட் போட்டு சுத்துற புலி
எப்பா லேட் நைட்ல வாக்கிங் போய்
நாய் கடிச்சு வலி

ஆண் : வீட்ல ரொம்ப கண்டிசன்
என் பேர்ல நறிய பெட்டிஷன்
நான் ரூல்ஸ்ச மதிக்கும் மனிஷன்
நீ பண்ற தப்பெல்லாம் மன்னிச்சேன்
நம்ம சிட்டி புல்லா பொலுசன்
செய்யுற வேளைக்கு எதுக்கு கமிசன்
நான் கேப்பேன் ஏன்னா சிட்டீஸன்
நம்ம விரல்ல இருக்கு சொலுசன்

ஆண் மற்றும் குழு : மக்காமிஷி …..
பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி

ஆண் : ஹையோ ஹையோ

ஆண் : அடிச்ச மழைல சிட்டி புல்லா வெள்ளம் ஆறா கோயிங்
அதா ஸேவ் பண்ணாம மக்கள் இப்போ பெயின்
மேட்ச் டிக்கெட் வாங்க நிப்போம் கோவில் லைன்ல நிக்க யோசிப்போம்
கிரௌண்ட் வெளியில அட்டி போட்டு டோனி ஜெர்ஸஸி போட்டுப்போம்

ஆண் : உளூர் வெயில்ல ஊர்கயா நாக்கினு
அட்டோம் பாம்அஹ சேர்ந்து குச்சினு
சார்ப்பு புல்லிங்கா காடிய பெர்ட்டினு
வைபுக்கு ஏத்த பாட்ட பாட்டினு
டாடி காசுல பாடி வச்சுனு
மாடி மேல லைலா மஜுன்னு
நைட் புல்லா கொசுவை அடிச்சுனு
லூப்பு மோடுல லைப் ஓடினு

ஆண் : எப்பா டா டாய்….குந்துறா எப்பா

ஆண் : மச்சான் இட்ஸ் எ லோங் வே டு கோ…அடிச்சு தூக்கு

ஆண் மற்றும் குழு : மக்காமிஷி …..
பிரச்னையை லேப்ட் ஹண்ட்ல ஹாண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ்ஸ்டாப்பில பால்மைன் டி ஷர்ட் போட்ட கூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி

ஆண் : மக்காமிஷி …..

Makkamishi Song Lyrics – English

Male : Unn side-la fault vechinnu
Enna parthu muraikkira
Naan full speed-la peasa vandha
Yeanda oodi oliyura

Male : Podey…

Male : Adhey dhaan adhey dhaan

Male : Appdiyeaa pudichikoo

Male : Unn side-la fault vechinnu
Enna parthu muraikkira
Naan full speed-la peasa vandha
Yeanda oodi oliyura

Male : 4-wallskulla mattum rules pesi nadikira
Naan adhey rule-ah roadla pesina yean da vanthu kolaikira

Chorus : Chikkan chikkan aachikku chakkan chakkan chakkan chakkan..(2)

Male : Naan mutta oothiya
Enakku ratham vandha unakku inna
Thakkali chattuniyaa
Ennoda rhyms scheme parthu inna kindal panriyaa
Innada sundal thariyaa

Male : Eyy..aaatu thottiyula road mukkula
Olinju nikkura white guy
Jobula vechiruntha time limitila
Kaasu adichathu nice try
Nice try nice try

Chorus : {Makkamishi..
Pirachaniya left handla handle panra michealsi
Namma ooru bommer talks
Yenna siru rombha busy
Bus-stopila balmain t shirt potta kooda asi
Ippo rombha kushi} – (2)

Male : Installment headphone vanga
Kooda unakku kaasu illa
Instagramla excitment parkka
Oodi varan mappla

Male : Naan summer timela
Wollen coat pottu suthura puli
Yabba..late nightla walking poi
Naai kadichu vali

Male : Veetla rombha condition
En perula neriya pettition
Naan rules ah mathikkum manishan
Nee pannra thappellam manichen
Namma citty fulla pollution
Seiyura velaiku yeathuku commision
Naan keppen yenna citizen
Namma viral la irukku solution

Chorus : Makkamishi..
Pirachaniya left handla handle panra michealsi
Namma ooru bommer talks
Yenna siru rombha busy
Bus-stopila balmain t shirt potta kooda asi
Ippo rombha kushi

Male : Haiyoo haiyoo

Male : Adicha mazhaila city fulla vellam aara going
Adha save pannama appo vittu makkal ippo pain
Match ticket vanga nippom kovil line la nikka yosipom
Ground veliyila adi pottu dhoni jersy pottupom

Male : Ullur veiyil oorgaiaya nakkinu
Atom bombaa sernthu kudichinu
Sharpu pullainga gaadiya pertinu
Vibeketha paatta paadinu
Daddy kaasula body vechunu
Maadi mela lailah majunu
Night fulla kosuva adichunu
Loopu mode la life oodinu

Male : Yeppaa da dai….kundhura yeppa

Male : Machan its a long way to go…
Adichu thooku…

Chorus : Makkamishi..
Pirachaniya left handla handle panra michealsi
Namma ooru bommer talks
Yenna siru rombha busy
Bus-stopila balmain t shirt potta kooda asi
Ippo rombha kushi

Male : Makkamishi..

 

திருப்பாவை 30 பாடல் வரிகள் | Thiruppavai Lyrics in Tamil

திருப்பாவை 30 பாடல் வரிகள் தமிழின் இனிமையான இசை, ஆண்டாளின் பக்தியின் பரிசு! பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய திருப்பாவை, தமிழ் இலக்கியத்தின் ஒரு அழகிய மணிமகுடம். 30 பாடல்களால் ஆன இந்த நூல், தன் காதலான கண்ணனை வழிபட்டுப் பாடி, நம் உள்ளத்தை கவர்ந்திழுக்கிறது திருப்பாவை பற்றி இப்பதிவில் முழுமையாக பார்ப்போம் .

மார்கழி மாதத்தின் மகிமையை பறைசாற்றுகிறது திருப்பாவை!

தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வந்தால் போதும், கன்னிப் பெண்களின் குரலில் திருப்பாவை பாடல்கள் இனிமையாக ஒலிக்கத் தொடங்கிவிடும். விடியற்காலையில் எழுந்து, ஆற்றில் நீராடி, கண்ணனை நினைத்துப் பாடுவது என்பது ஒரு அற்புதமான அனுபவம்.

திருப்பாவை பாடல்கள் நமக்குக் கற்றுத் தருவது என்ன?

  • பக்தியின் உண்மையான அர்த்தம்: ஆண்டாள் தன் பாடல்களில் கண்ணனைப் பற்றிய தன் அன்பை எவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்! நாம் அனைவரும் நம் இறைவனை இப்படிப்பட்ட பக்தியுடன் வழிபட வேண்டும்.
  • காலத்தை மதிப்பது: மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் திருப்பாவையில் விழா. இது நமக்கு காலத்தை மதித்து, ஒவ்வொரு நாளையும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
  • இயற்கையை நேசிப்பது: ஆண்டாள் தன் பாடல்களில் இயற்கையைப் பற்றி எவ்வளவு அழகாகப் பாடியிருக்கிறார்! இயற்கையை நேசித்து, அதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
  • ஒற்றுமை: கன்னிப் பெண்கள் கூட்டமாகச் சென்று ஆற்றில் நீராடி, பாடல்களைப் பாடுவது ஒற்றுமையின் அடையாளம். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

இப்போது ஆண்டாள் பாடிய திருப்பாவை 30 பாடல் வரிகள், அதன் இனிமையை உணர்வோமா!

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். (1)

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்

செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். (2)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். (3)

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (4)

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். (5)

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (6)

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். (7)

கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (8)

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய். (9)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய். (10)

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய். (11)

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். (12)

புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய். (13)

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின காண்;
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்,
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். (14)

எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;
‘வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!’
‘வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!’
‘ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?’
‘எல்லோரும் போந்தாரோ?’ ‘போந்தார், போந்து எண்ணிக்கொள்’
வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய். (15)

நாயக னாய்நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்;
ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். (16)

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய். (17)

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;
வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (18)

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய். (19)

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய். (20)

ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாதுவந்து உன்னடிபணியு மாபோலே,
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய். (21)

அங்கண் மாஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்,
அங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். (22)

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து,
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,
மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,
போதருமா போலேநீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங் காசனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய். (23)

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய். (24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். (25)

மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய். (26)

கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடு புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். (27)

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்
பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய். (29)

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய். (30)

 

திருப்பாவை 30 பாடல் வரிகள் Vido

 

 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

#திருப்பாவை #ஆண்டாள் #மார்கழி #பக்தி #தமிழ்இலக்கியம்

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், மிகவும் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. மத்திய படஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் கடத்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவை கண்டு வந்தது இந்த நிலையில் தற்போது தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து இருக்கிறது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.6,465 க்கும் ஒரு சவரன் ரூ.51,720 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.89 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

படஜெட் தாக்களுக்கு பிறகு கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து இருக்கிறது.

லிங்காஷ்டகம் பாடல் வரிகள் | lingashtakam lyrics in tamil

 lingashtakam lyrics in tamil – வாழ்க்கை என்பது சின்ன சின்ன சண்டைகளை வென்று முன்னேறுவதுதான். இந்த சண்டைகளை எதிர்கொள்ள நமக்கு இறைவனின் அருள் மிகவும் அவசியம். அந்த மிகப்பெரிய அருளாளர்களில் ஒருவர் சிவபெருமான். நம்மைக் கஷ்டப்பட விடாமல் எப்போதும் நம்மை காப்பாற்றுபவர் அவர்.

இறைவனின் அருள் கிடைத்தால் நம்மில் இருக்கும் எல்லா கவலையும், பயமும் மறைந்துவிடும். நம்மைச் சுற்றி நடக்கும் கெட்ட எண்ணங்கள், பிரச்சனைகள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும்.

இந்த பிரச்சனைகள் எல்லாம் நம்மை விட்டு போகவேண்டுமென்றால், தினமும் லிங்காஷ்டகம் என்ற இந்த அற்புதமான பாடலைப் பாடி வந்தால் நம்மால் எல்லா கஷ்டங்களையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

வாங்க நண்பர்களே, லிங்காஷ்டகம் பாடலைப் படித்து இறைவனின் அருளைப் பெறுவோம்.”

லிங்காஷ்டகம் தமிழ் பாடல் | லிங்காஷ்டகம் தமிழ் வரிகள் | lingashtakam lyrics in tamil

1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

4. கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

5. குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

lingashtakam lyrics in tamil Video

 

 

நன்றி!

மேலும் ஏதேனும் மாற்றங்கள் வேண்டுமென்றால் சொல்லுங்கள்.