ரயில்களில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் ரயில் சேவை படிப்படியாக இயக்கப்பட்டது.பழைய அட்டவணை படி ரயில்கள் இயக்கப்படவில்லை. ஆனால் அனைத்து பகுதிகளிலும் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் மீண்டும் பொது முடக்கம் ஏற்படுமா, கட்டுப்பாடுகள் விதிகப்படுமா என்ற பயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. டெல்லியில் இருந்து டேராடூன் சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து உயர் மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது போன்ற தீ விபத்தை தடுக்க ரயில்களில் செல்போன் சார்ஜ் செய்வதை தடை செய்துள்ளது. பயணிகள் இரவில் பயணிக்கும் போது செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் போட்டபடி வைத்து விட்டு தூங்கி விடுகிறார்கள் இதன் காரணமாக சூடாகி மீன் அழுத்தம் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படுகிறது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ரயில் பெட்டிகளில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடுவதை ரயில் துறை தடை செய்துள்ளது.

இரவு நேரங்களில் சார்ஜ் பயனீடுகளை ஆப் செய்ய ரயில் பெட்டிகளில் உள்ள ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த உத்தரவு போடப்பட்டது ஆனால் சரியாக அமல் படுத்தப்படவில்லை. இப்போது இந்த உத்தரவை சரிவர பின்பற்ற ரயில்வே துறை மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

ரயில்வே துறை இதைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து ரயில் நிலையங்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…