10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு – தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

  • கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
  • 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை உயர்த்த விரும்பபினால் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.
  • அதாவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு மதிப்பெண்கள் 35 விட கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
  • அந்தந்த பள்ளி அளவில் நடைபெறும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான தேர்வு ஜூன் , ஜூலை மாதங்களில் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.
  • மேலும் இதற்கிடையே, அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறது. மேலும் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
0 Shares:
You May Also Like
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…