அம்மா கவிதை | Amma kavithaigal in Tamil

தாய்மட்டுமே

காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே
அவளை என்றும்
மனதில் சுமப்போம்

அம்மா சமயலறை

ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை

அருகில்

இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை

இன்னும் குழந்தையாக

வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்
இன்னும் குழந்தையாக

உலகம்

அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது

தாய்மை

வலி நிறைந்தது
என்பதற்காக
யாரும் விட்டுவிடுவதில்லை
தாய்மை

சுவை அதிகம்

அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்

தரிசனம்

நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா

அறிமுகம்

இன்று என்னை
இவ்வுலகுக்கு
அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்

பிரச்சனை

நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
அம்மா….

சொர்க்கமே

எதுவும்
அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும்
கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே

அன்பு தெய்வம்

உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை

அன்னையர் தின வாழ்த்துக்கள்

கடல் நீரை
கடன் வாங்கி
கண்கொண்டு அழுதாலும்
நான் சொல்லும்
நன்றிக்கு போதாதம்மா
அன்னையர் தின வாழ்த்துக்கள்

கவலை

ஒவ்வொரு நாளும்
கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை பட மாட்டாள்
அம்மா….

 

தாலாட்டு

ஆழ்ந்த உறக்கத்தின்
அஸ்திவாரம்
அம்மாவின் தாலாட்டு

ஈடாகாது

ஆயிரம் உணவுகள்
வித விதமாக சாப்பிட்டாலும்
அன்னை சமைத்த
உணவுக்கு ஈடாகாது

ஆயிரம் உறவுகள்

உன் மீது அன்பாக
இருந்தாலும்
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது

amma kavithaigal tamil

முதல் குரு

உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து
கூறும் முதல்
குருவாக இருப்பவர்
அம்மா மட்டுமே

உலகில் இல்லை

தாய் மடியைக்
காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை

kavithai tamil amma

தாய்மை

அம்மா
இந்த நேரத்திலும்
தன்னை பற்றி
கவலைகொள்ளாமல்
நமது ஆரோக்கியத்தில்
அக்கறை கொள்ளும்
அந்த உணர்வு
பாசம் தான்
தாய்மை

உலகம் என் கையில்

உன்னை அணைத்து
பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம்
என் கையில் என்று

tamil amma kavithikal

0 Shares:
You May Also Like
Read More

ஒரு வரி தத்துவம் – Inspirational quotes in Tamil language

ஒரு வரி தமிழ் கவிதை என்பது ஒரு வரியில் முழுமையாக உள்ளடக்கம் கொண்ட கவிதையாகும். இது அழகியல் உணர்ச்சியுடன், ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை…
Tamil Life Quotes
Read More

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள்

Tamil Life Quotes – வாழ்க்கை கவிதைகள் : வாழ்க்கை என்பது ஒரு பயணமாகும், இதில் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அனுபவங்கள் இருக்கும். வாழ்க்கையின் பொருள்,…
uyir natpu kavithai in tamil
Read More

உயிர் நட்பு கவிதைகள் | uyir natpu kavithai in tamil

uyir natpu kavithai in tamil – நம் வாழ்க்கையின் ஒவ்வொரு முறையும், நட்பின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகிறது. நட்பு என்பது நம்மை ஒருவருக்கொருவர்…
தமிழ் ஒரு வரி கவிதைகள்
Read More

தமிழ் ஒரு வரி கவிதைகள் – Tamil One Line Quotes

தமிழ் ஒரு வரி கவிதைகள் என்பது சொற்களின் சுருக்கம் மூலம் உணர்ச்சிகளை ஆழமாக வெளிப்படுத்தும் சிறப்பு கவிதை வடிவம். இந்த கவிதைகள், எளிய வார்த்தைகளால்…