Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

தமிழ் அம்மா கவிதைகள்

அம்மா

  • முதலில் நான் பேசி பழகியதும்
    உன் பெயர் தான்…!
    முதலில் நான் எழுதி பழகியதும்
    உன் பெயர் தான்…!
    …::அம்மா::…

பொக்கிஷம்

  • அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள்.
    தொலைந்து போன பின் தேடாதே.
    அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.
    அன்னையின் அன்பு…!

உறவுகள்

  • பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
    பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
    கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
    கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.

அன்புக்கு இணை ஏதும் இல்லை

  • தன் உடல் மூலம் உடல் தந்து,
    உதிரத்தை உணவாக தந்து,
    உயிருக்கு உணர்வுகளையும்
    தந்தவள் தாய்…!
    உன் போல் யாரும் இல்லை.
    உன் அன்புக்கு இணை ஏதும் இல்லை.

தாய்க்கு மகிழ்ச்சி

  • கேட்டதை வாங்கிக் கொடுத்துவிட்டால்
    மனைவிக்கு மகிழ்ச்சி…!
    என்ன வேண்டும் என்று கேட்டாலே
    போதும் தாய்க்கு மகிழ்ச்சி…!

அகிலமே போற்றும்

  • அள்ள அள்ள குறையாதது எது..?
    அமுதசுரபியா..?
    இல்லை, அகிலமே போற்றும்
    “அம்மாவின் அன்பு”.

அன்பு என்றாலே

  • ஆயிரம் முறை காயப்படுத்தினாலும்
    திரும்பி ஒரு முறை கூட
    காயப்படுத்தாத உறவு அம்மா…!
    அன்பு என்றாலே அம்மா தான்…!

ஒரே கடவுள்

  • செய்த குற்றங்கள் அனைத்தையும்
    மன்னிக்கும் ஒரே கடவுள்.
    அம்மா…!

மூன்றெழுத்தே

  • அம்மாவுக்கு என்று
    தனியாக கவிதை வேண்டாம்.
    அம்மா என்ற மூன்றெழுத்தே கவிதை தான்.
    அன்பாக பழகிப்பார் அம்மாவும் கவிதை தான்.!

தமிழ் தாய்

  • கவிதை எழுதுவது
    பெண்ணுக்காக அல்ல.
    என் தமிழுக்காக,
    என் தமிழ் தாய்க்காக
    ”தமிழ் தாய்”
    அவளும் பெண் தானே…!
Previous Post
amma kavithai 2

அம்மா கவிதை | Amma kavithaigal in Tamil

Next Post
gk

பொது அறிவு கேள்விகள் மற்றும் பதில்கள்

Advertisement