தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர்

ஒலிம்பிக் தொடரை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒலிம்பிக் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை பற்றி பார்ப்போம். அந்த வகையில் இந்தியாவின் மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ள தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பற்றி பார்ப்போம்.

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு அடுத்தபடியாக தங்கம் வென்ற போட்டின்னு பார்த்தா துப்பாக்கி சுடுதல் போட்டி. 2008 ஆம் ஆண்டு நடத்தைப்பெற்ற பீஜிங் ஒலிம்பிக் தொடரில் அபினோ பிந்த்ட்ரா தங்கப்பதக்கம் வென்றார். இந்த தடவை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உடைய மிக பெரிய பலம் துப்பாக்கி சுடுதல் அணி.

இளவேனில் வாலறிவன்

துப்பாக்கி சுடுதலில் மட்டும் மொத்தம் 15 பேர் இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். அதில் இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்மங்கை இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பதால் மறுபடியும் இந்தியாவுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு பிறந்தவர் இளவேனில் வாலறிவன். முனைவர் பட்டம் பெற்ற இவரது பெற்றோர் வேலைகாக குஜராத் சென்றனர். இரண்டு வயதில் இருந்து குஜராத்தில் வளர்ந்தார். அவருக்கு படிப்பில் விருப்பம் இல்லாததால் உனக்கு என்ன விருப்பமோ அதில் கவனம் செலுத்து என்று கூறிய அவருடைய பெற்றோர் அவருக்கு உறுதுணையாக இருந்ததால் தங்கத்தை வேட்டையாட தயாராக இருக்கிறார் இளவேனில் வாலறிவன்.

குறிப்பாக தாய்மார்கள் தினத்தன்று தன்னுடைய தாய் சரோஜாவை பெருமைப்படுத்த விரும்பிய இளவேனில் ஒலிம்பிக் கமிட்டி வளைத்தளத்தில் கட்டுரை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய வெற்றியில் அவருடைய தாயார் பங்கை சுட்டிக்காட்டி உள்ளார். இளவேனில் வாலறிவன் தாயார் ஒரு காலேஜ் ப்ரின்சிபிள். 10 வருடங்களாக பயிற்சிக்காக தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் கூட்டிட்டு போய் பயிற்சி முடிந்த பிறகு தன்னுடைய வேலைக்காக 150 கிலோ மீட்டர் தூரம் பயணம் பண்ணிட்டு இருந்து இருக்காங்க சரோஜா.

இளவேனில் வாலறிவன்2

 

2018 ஆம் ஆண்டு சிர்நீல நடந்த ஜூனியர் உலக கோப்பையில் தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்பினர். தங்க பதக்கத்தை தன்னுடைய பெற்றோருக்கு சமர்ப்பித்து பெருமைப்படுத்தினர் இளவேனில். 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையில் தங்கம் வென்றார். அதே ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற சீனியர் உலக கோப்பையில் தங்கம் வென்றார். இப்படி உலக அளவிலான போட்டிகளில் மட்டும் மூன்று தங்கப் பதக்கம் வாங்கிய இளவேனில் இந்த தொடர் வெற்றிகளால் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார். இதனால் உலக நாடுகளை உற்றுநோக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். மற்ற நாட்டு போட்டியாளர்களுக்கு சிம்மசொப்பனமாக மாறிய தமிழ் மங்கை இளவேனில் வாலறிவன்.

0 Shares:
You May Also Like
Read More 1

எளிதான தமிழ் விடுகதைகள்

பழங்கால நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சூப்பர் ஹீரோ சாகாக்களின் அடித்தளமாக புதிர்கள் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் புராணக் கதாநாயகர்களிடம்…
GG vs DC WPL 2025 Match 17
Read More

GG vs DC WPL 2025 Match 17 Result: நேற்றைய WPL போட்டியில் யார் வென்றார்கள்? ஸ்கோர்கள், முக்கிய நிகழ்வுகள் & விருது பெற்றவர்கள்

ஹார்லின் டியோல் அபாரமாக ஆடி, அரைசதத்துடன் அபார இன்னிங்ஸ் வெளிப்படுத்தியதால், குஜராத் ஜயன்ட்ஸ் (GG) டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில்…
Read More

இன்று அகமதாபாத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான 3 ஆவது டெஸ்ட் போட்டி தொடக்கம்

அகமதாபாத்தில் 63 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று இந்திய…
MkAATYTYAsAAAAASUVORK5CYII=
Read More

கிரிக்கெட் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசிய சச்சின் டெண்டுல்கர்

ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக…
Olympic Athletes
Read More

வெற்றிபெற்ற வீரர்கள் தங்களது ஒலிம்பிக் பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள்?

ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைக் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் பெலப்ஸ், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ்…