தமிழக ரேசன் கடைகளுக்கு அதிரடி அறிவிப்பு..!

- Advertisement -

தமிழக ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது.

கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான ரூ.2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் இந்த நிவாரணம் வழங்கும் பணிகள் தாமதமாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், அனைத்து ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான ரூ.2,000-மும் வருகின்ற ஜூன் 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மாநில உணவுப்பொருள் வழங்கல் துறையானது, அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளது.

- Advertisement -

Recent Articles

Related Stories

Stay on op - Ge the daily news in your inbox