Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

தமிழ் மொக்க ஜோக்ஸ்

பொதுவாகவே அனைவருக்கும் ஜோக் என்றால் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருக்க நகைச்சுவை பிடிக்காமல் எவருமில்லை.. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற சொல்வார்கள்..

அதன் வகையில் இந்த மொக்கை ஜோக்கை தினமும் படித்து மகிழ்வோம்… 😊

கணவன்: வெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி ஒருவன் சோறு கேட்குறான். போட்டுட்டு வா!!

Advertisement

மனைவி: அவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு எதை வச்சு சொல்றீங்க நீங்க..

கணவன்: உன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே அதான்..

********************************

அமைச்சர்: மன்னா நீங்கள் பதவியேற்ற பின்னர் மக்களுக்கு பக்தி அதிகமாகி விட்டது

மன்னன்: எதனால் அப்படி?

அமைச்சர்: ஆம் மன்னா, இனி கடவுள் தான் தங்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்

********************************
கணவன்: என்ன இருந்தாலும் சமையலில் எங்க அம்மாவின் கை மணமே தனி தான்

மனைவி: ஆமா!! உங்க அம்மா வருஷத்திற்கு ஒருமுறை தானே கையை நல்லா கழுவுவாங்க

********************************

பல்லு : நாக்க பார்த்து சொல்லுச்சா நாங்க 32 பேரும் சேர்ந்தா ஒரு தடவை இருக்கி அழுத்தினாள் நீ காலி….

நாக்கு: சிரிச்சிட்டே சொல்லுச்சா நாக்கு நான் தனி ஆளுதான் ஆனால் நான் ஒரு வார்த்தையை மாற்றி பேசினா நீங்க 32 பேரும் காலி….

********************************

மனைவி : ஏங்க நான் வரும்போது மட்டும் நீங்க எதுக்கு கண்ணாடி போடுறீங்க

கணவன் : டாக்டர் தான் தலைவலி வரும்போது மட்டும் போடுங்க ன்னு சொன்னாரு..!🤣

********************************

இந்த உலகத்தில் 2 பேரை மட்டும் தான் முறைச்சு பார்க்க முடியாது.. என்ன தெரியுமா அது?

முதலாவது சூரியனும் இரண்டாவது மனைவி..

********************************

கல்யாண வீட்டுக்கு மாட்டையும் கன்று குட்டியை ஏன் கூட்டிட்டு வரமாட்றாங்க..

ஏன்னா கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிறு அத மாடும் கன்றுக்குட்டியும் அத மேஞ்சிடும்🤣🤣🤣

********************************

ரெண்டு பேரு ஒரு ஓட்டலுக்கு போறாங்க ஆளுக்கு நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க இந்த இட்லி சாப்பிட்டு தான் புட் பாய்சன் ஆயிடுச்சு ஏன்?

ஏன்னா அது நாலு நாள் இட்லி 🤣🤣

********************************

ஒரு பையன் 200 ரூபாய் நோட்டையும் 500 ரூபாய் நோட்டையும் சாக்கடையில போட்டுட்டான் first அவன் எதை எடுப்பான்?

அவன் first வாந்தி எடுப்பான்.😂

********************************

ரோட்ல போற நிறைய பேரு ஒருத்தர் கிட்ட மட்டும் அடிக்கடி time கேக்குறாங்க ஏன்?

ஏன்னா அவர் தான் watchman

********************************

புயல் அடிக்கும் போது ஒருத்தன் மட்டும் அழுக்கு சட்டையை கையில் வெச்சுகிட்டு நின்னானா… ஏன்?

அப்பத்தான் புயல் கரையை கடக்கும்…. 🤣

********************************

நோயாளி: டாக்டர் எனக்கும் 4 மாதமாக கடுமையான இருமல்…!

மருத்துவர்: அப்படியா..? சும்மாவா இருந்தீங்க..

நோயாளி: இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்..😇

********************************

ஆசிரியர் : நான் இன்னும் ஒரு வருஷத்துல ரீடைர் ஆக போறேன் ‘ பையன் அழுகிறான் ‘

ஆசிரியர்: அழுகாத அப்பா நான் இன்னும் ஒரு வருஷம் இருப்பேன்..

பையன் : நான் அழுகிறது அதுக்கு தான் சார்.. 😇

Previous Post
Flowers name in Tamil

பூக்கள் பெயர்கள் | Flowers name in Tamil

Next Post
tnpsc recruitment 2022 various chemis

TNPSC RECRUITMENT 2022 – VARIOUS CHEMIST POST ஆன்லைனில் விண்ணப்பிக்க

Advertisement