கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020-21 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட வில்லை என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து இருக்கிறது. கொரோனா காலத்திலும் ரிசர்வ் வங்கி 2020-21-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில் கடந்த நிதியாண்டைப் போலவே, இந்த 2020 – 2021 நிதியாண்டிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்படவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே புதிய 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது. ஏனெனில் இதுவரை கணக்கெடுத்த மொத்த மதிப்பீட்டின் அடிப்படையில், 2020 மார்ச் 31 நிலவரப்படி, ரூ.500, ரூ.2,000 நோட்டுகளில் 83.4% புழக்கத்தில் இருந்தது. இது, 2021 மார்ச்சில் 85.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணமதிப்பு அடிப்படையில், மார்ச் 2020 ஆம் ஆண்டு 5.48 லட்சம் கோடியாக இருந்த 2,000 நோட்டு புழக்கம், மார்ச் 2021ஆம் ஆண்டில் 4.9 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. எக்காரணத்துக்காக…
Author: gpkumar
இந்தியாவில் கொரோனோவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனோவின் இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில், மக்கள் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், மருந்து வாங்கும்போது நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும். நாம் முடிந்தவரை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மருந்துகளை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. நம் உடலில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கு நாம் மருத்துவரிடம் செல்வதில்லை. மருந்துக் கடைக்குச் சென்று உடலில் உள்ள பிரச்சனையைச் சொல்லி மருந்தை வாங்கி சாப்பிடுகிறோம் இவ்வாறு செய்வது தவறு. மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்ளுங்கள். கொரோனா சமயத்தில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, பசியின்மை, செரிமான பிரச்சினை போன்ற அறிகுறிகள் தோன்றினால் எது கொரோனா தொற்று நோய், எது சாதாரண பிரச்சினை என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள். மாறிக்கொண்டு வரும் உணவுமுறையாலும், வாழ்க்கைமுறையாலும் நம்மில் பலருக்கு…
இந்தியாவில் கருப்பு, வெள்ளை பூஞ்சை அடுத்து தற்போது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மஞ்சை பூஞ்சை பரவி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது மக்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று இந்தியாவில் பரவி வருவதாகவும், இந்த பூஞ்சை உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக முதலைகள், பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களிடம் மட்டுமே மஞ்சள் பூஞ்சை காணப்படும். தற்போது முதன்முறையாக மனிதர்களிடம் இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவு பொருட்கள் மூலம் இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. பூஞ்சை தடுப்பு மருந்துகளினால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டெராய்டை அதிகமாக பயன்படுத்தினால் இந்நோய் தொற்று…
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தற்போது முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதங்களில் செலுத்த வேண்டிய மின்கட்டணத்தை மே 31ஆம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வெளியிட்டுள்ள அறிக்கையில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்களின் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் மே 31ம் தேதி வரை இருந்தது. தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். 2021 ஆண்டு ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின்னழுத்த மின் இணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன், மின் துண்டிப்பின்றி காலநீட்டிப்பு…
இந்திய அரசாங்கத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி, அனைத்து சமூக ஊடக நிறுவனங்களுக்கும் புதிய விதிகளை பிறப்பித்தது. மேலும் அவற்றை பின்பற்ற மூன்று மாத கால அவகாசம் அளித்து இருந்தது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்கத் தயார் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கான ஒரு அதிகாரியை நியமித்து, அந்த அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு முகவரியை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதன் மூலம் புகார் அளித்தல், ஆட்சேபிக்கத்தக்க உள்ளடக்கத்தை கண்காணித்தல், இணக்க அறிக்கை மற்றும் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை நீக்குதல் ஆகியவற்றை செய்ய மத்திய அரசு நோக்கமாக கொண்டு உள்ளது. மத்திய அரசின் இந்த புதிய…
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு பூஞ்சை நோய் தொற்றை தொடர்ந்து வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் அதிக அளவு ஸ்டிராய்டு மருந்தை பயன்படுத்துவது, சுத்தப்படுத்தாமல் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்துவது, ஒரே முகக்கவசத்தை நீண்ட காலம் பயன்படுத்துவது, படுக்கையை நீண்ட காலம் பயன்படுத்துவது போன்றவற்றால் இவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் பரவுவதாக நிபுணர்கள் எச்சரித்து இருக்கிறார்கள். இதுவரை இந்தியாவில் 11,517 பேர் கறுப்பு பூஞ்சை நோய் தொற்று பாதிப்பு கண்றியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. தமிழகத்தில் 236 பேர் கறுப்பு பூஞ்சை நோய் தொற்றால்…
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 3.11 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள். கொரோனாவால் உறவினர்களையும் பெற்றோர்களையும் இழந்து மக்கள் பரிதவிப்பது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த நிலையில், நாட்டில் கொரோனாவால் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வந்து இருக்கிறது. தற்போது அனைத்துக் குழந்தைகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்களது தேவைகள் ஆராயப்பட்டு, அவர்களது பாதுகாப்பும், நலமும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 577 குழந்தைகள் குறித்த தகவல்கள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. இதுபோல் பதிவாகாத தகவல்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் தகவல் கிடைத்துள்ள…
ஹைலைட்ஸ்: கொய்யா கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. கொய்யா குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொய்யா இலையில் தேநீர் தயாரித்து குடித்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். கொய்யாப்பழத்தில் ‘வைட்டமின் சி’ அதிக அளவு உள்ளது. ஆரஞ்சுபழத்தில் உள்ள வைட்டமின் சி அளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. நாம் எல்லோரும் விரும்பி உண்ணக்கூடிய பழங்களில் ஒன்று கொய்யா. இது மிகவும் சுவையான பழம். கொய்யாப்பழம் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொய்யாபழம் மட்டுமல்ல, அதன் இலைகளும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். மேலும் நம் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்த கொய்யாப்பழம் மிகவும் உதவி புரிகிறது. கொய்யாவில் தான் ஆரஞ்சைவிட 4 மடங்கு அதிக விட்டமின் சி உள்ளது. கொய்யாவின் சில அற்புதமான…
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கொரோனா தொற்று தீவிரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது உள்ள முழு ஊரடங்கு காரணமாக தொற்றின் வேகம் சற்று குறைந்துள்ளது. மேலும் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்து பணி தொடங்கிப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பணிகளில் ஈடுப்பட்டுள்ள 18-44 வயதினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். தடுப்பூசி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நோய் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநிலம் முழுவதும் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி…
பொதுவாக மனிதர்களுக்கு கவலை, மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற காரணங்களால் தூக்கமின்மை உண்டாகும். அதேபோல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் உடலளவில் மட்டுமன்றி மனதளவிலும் பாதிப்பு அடைக்கிறார்கள், இதனால் அவர்கள் தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக தன்னைப் பற்றியும், தன் அன்புக்குறியவர்களைப் பற்றியுமான பயம் மற்றும் பதற்றமே இதற்க்கு காரணம். பயம், பதற்றம் போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, இதிலிருந்து மீண்டவர்கள் பலர் மனச்சோர்வு, மனப்பதற்றம் ஆகிவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். தூக்கமின்மை அறிகுறிகள் தூக்கமின்மையால் நாம் உடல் ரீதியாகி பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை என்றால் நீங்கள் இன்சோம்னியா ( Insomnia ) என்னும் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கீர்கள் என்று அர்த்தம். இந்த பிரச்சனை உள்ளவர்க்கு தூக்கம் வந்தாலும் எழும்போது ஃபிரெஷான…
ஹைலைட்ஸ்: உலகளவு கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி, மக்களை பாடாய்படுத்தி விட்டது. தற்போது தொற்று பரவல் சற்று குறைந்து ஓரளவு பரவாயில்லை என்ற நிலைமைக்கு வந்திருக்கிறது. சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து கொண்டே இருந்தது. இந்நிலையில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைக்காமல், படுக்கைகள் கிடைக்காமல் பலர் உயிரிழப்பு என்ற மோசமான நிலையும் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் 3,741 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துவிட்டது. கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளது.…
பொதுவாக குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். இதை மனதில் கொண்டு பெற்றோர்கள் குழந்தைகளை எந்தவித நோய் தொற்றும் பாதிக்காதவாறு வளர்க்கவேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் முதலில் குழந்தையின் வெப்பநிலையையும், பல்ஸ் ஆக்ஸிமீட்டரையும் 6 மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைக்கு100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமால் மருந்துகள் எவ்வளவு அளவு என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்து சரியான அளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணிக்க கூடிய உணவுகளை, திரவ ஆகாரங்களாக கொடுக்க வேண்டும். இது குளிர்ச்சியாக இல்லாமல் வெதுவெதுப்பாக இருக்க வேண்டும். மேலும் குழந்தைகளை சுத்தமாக, சுகாதாரமாக வைத்து கொள்ளவேண்டும். குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி, ஜிங்க் மருந்துகளை பாதுகாப்பாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகளை கொடுக்கலாமா? பெரியவர்கள் “அஸித்ரோமைஸின்” என்ற ஆன்டி பயாடிக் மாத்திரையை பயன்படுத்தி வருகிறார்கள். இதை குழந்தைக்கு பயன்படுத்தலாமா? என்று கேட்கலாம். இதுவரை இதற்கு…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தபோதும் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது மட்டுமே ஒரே வழி என மருத்துவர்கள் தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. இந்த முழுமுடக்கத்தை நீட்டிக்கலாமா அல்லது தொடர்ந்து அமல்படுத்தலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த எந்த வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1. இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதி. 2. நாளை அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.…
மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். மாங்காய் விலை மலிவாகவும், மிக எளிதாகவும் கிடைக்க கூடியது. இதில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள். பொதுவாக மாங்காய் ஊறுகாயை விரும்பாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். மாங்காயில் இனிப்பு ஊறுகாய் செய்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும். இந்த ஊறுகாய் எப்படி செய்வது என்று பார்ப்போம். இனிப்பு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் மாங்காய் – 1 கிலோ, உப்பு – 50 கிராம், மிளகாய்த்தூள் – 3 ஸ்பூன், வெல்லம் – 200 கிராம், நல்லெண்ணெய் – 100 கிராம், சிறிதளவு பெருங்காயம், வெந்தயம் தூள், கடுகு தலா – 1 ஸ்பூன். செய்முறை: மாங்காயை சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி, உப்பு சேர்த்து 3 நாட்கள் ஊற வைக்கவேண்டும். பிறகு வெயிலில் நீர் சுண்டும் வரை உலர்த்தி எடுக்கவும். வாணலியில் எண்ணெய்…
