Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

Black Fungus

இந்தியாவில் தற்போது கொரோனாவை தொடர்ந்து மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று மற்றொரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ‘மியூகோர்மைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை நோய் ஆகும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கருப்புப் பூஞ்சை நோய் தொற்றை கண்டறிதல், சிகிச்சை முறை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கருப்புப் பூஞ்சைக்கு முகம் வீக்கம், கண் கீழ் பகுதியில் வீக்கம், மூக்கடைப்பு, ஈறுகளில் புண் உள்ளிட்டவை அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கு, கண் பகுதியில் CT – PNS (சிடி-பிஎன்எஸ்) ஸ்கேன், அல்லது முகம் முழுவதும்…

Read More

இந்திய தொழில்நுட்ப நிறுவனமான மண்டியில் கற்பித்தல் அல்லாத காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IITMandi/F/Recruit/NTS/2021/01 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.06.2021 பணியின் பெயர் : Junior Engineer (Civil) காலிபணியிடங்கள்: 03 கல்வி தகுதி: பொறியியல் பிரிவில் சிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கணினி பிரிவில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதச் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400 பணியின் பெயர் : Junior Laboratory Assistant (Technical) காலிபணியிடங்கள்: 14 வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி: , எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினி பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.…

Read More

சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தேசிய நெடுஞ்சாலை (NATIONAL HIGHWAYS AUTHORITY OF INDIA) அதிகாரப் பிரிவில் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை பணியின் பெயர் : Deputy Manager (Technical) காலி பணியிடங்கள்: 41 வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.15,600 – 39.100 கல்வி தகுதி: Degree in Civil Engineering தேர்வு செய்யப்படும் முறை: GATE-2021 தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: http://vacancy.nhai.org/vacancy/DMApplicationForm.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2021 மேலும் முழுவிவரங்களை www.nhai.gov.in or https://nhai.gov.in/#/vacancies/current என்ற லிங்க் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Read More

ஹைலைட்ஸ்: தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. ஓட்டுனர் பேருந்தை பேருந்து நிறுத்தத்தில் தான் நிறுத்த வேண்டும். பேருந்து நிறுத்தத்திற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. வயது முதிர்ந்த பெண்கள் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர, மாநகரப் பேருந்துகளில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த மே 8 ஆம் தேதியிலிருந்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணித்து வருகின்றார்கள். மேலும் பெண்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில், தமிழக அரசின் அனைத்து சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் “மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. மேலும் தற்போது நகரம் மற்றும்…

Read More

ஹைலைட்ஸ்: நாளை சேலம், ஈரோடு, கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலமைச்சர் கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு சென்று, அங்குள்ள கொரேனா சிறப்பு சிகிச்சை மையத்தை நாளை திறந்து வைக்கிறார். நேரு விளையாட்டரங்கத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை நேரில்ஆய்வு மேற்கொள்ளவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உள்ளானவர்களுக்காக 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாளை காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வருவதாக தகவல் வெளியாகி…

Read More

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல சிறந்த முயற்சிகள் எடுத்தாலும், தற்போது மியூகோமிகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தொற்று காரணமாக மற்றொரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைபவர்கள் அல்லது குணமடைந்தவர்களிடம் இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. நிரிழிவு நோயாளிகளுக்கு, எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் இந்நோய் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்டிராய்டு என்ற மருந்தை எடுத்து கொள்கிறார்கள். இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிரிழிவு நோயாளிகள் உட்கொள்ளும் போது இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, இவர்களை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்கும் அபாயம் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். கருப்பு பூஞ்சை யாரை தாக்கும்? நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் கருப்பு பூஞ்சை தாக்கும். ஸ்டிராய்டை தவறான அல்லது அதிகமாக பயன்படுத்தினால் கருப்பு பூஞ்சை தாக்கும். கொரோனாவில் இருந்து மீண்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தாக்குகிறது. கருப்பு பூஞ்சை நோய் கண்களில்…

Read More

ஹைலைட்ஸ் : தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் முதல் முறை வெளியே வந்தால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம். இரண்டாம் முறை வெளியே வந்தால் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு…

Read More

ஹைலைட்ஸ்: பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத் தயாராகுவதுடன், மன ரீதியாகவும் தயாராக வேண்டும். கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் ஆட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விளையாட்டு வீரர்களின் மனநலம் குறித்த உரையாடலுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாக சில வீரர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் சில வீரர்கள் வீடு திரும்பியதும் நடந்துள்ளது. 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், சச்சின் பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாக கூறியிருக்கிறார். போட்டிக்கு முன் நான் செய்யும் விஷயங்கள் தான் முக்கியம் என்று பின்னர் உணர்ந்தேன் என்கிறார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆட்டத்தில் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசியதாவது, ” ஒரு ஆட்டத்துக்கு உடல் ரீதியாகத்…

Read More

ஹைலைட்ஸ்: சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தனபால் சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருக்கிறார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்க கூடாது கைதிகளை சிறையில் அடைப்பதற்கான நடைமுறையை தவிர, மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நீஷ் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த வாரம், கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காணொலியில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க கோரி தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ள நிலையில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மரணம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் சென்னை…

Read More

ஹைலைட்ஸ்: அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும். முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றார்கள். அதிமுக சார்பில் தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் அதிமுக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களின் ஒருமாத ஊதியம் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் அக்கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரத்தை மீண்டெழுவதற்கும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ளவும் தங்களால் முடிந்த உதவியை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்…

Read More

ஹைலைட்ஸ் : தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 247 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 706 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 33 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதுள்ளது. புதிய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.…

Read More

ஹைலைட்ஸ்: பொறியியல் மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது. அரியர் தேர்வு எழுதிய பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. முதலாமாண்டு பொறியியல் மாணவர்களின் முதல் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்திருக்க வேண்டிய கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இந்த தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணைய வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் நான்கு லட்சத்துக்கும் அதிகமான பொறியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் கூட போனது. இதற்கிடையே கடந்த ஏப்ரல் 11-ஆம்…

Read More

ஹைலைட்ஸ்: பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. பூண்டு ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயன பொருளுக்கு, இரத்த உறைதல் தன்மையை தடுக்கும் குணம் உள்ளது. இது இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாதை தடுக்கிறது. நம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்து கொள்ளவது மிகவும் நல்லது. பூண்டு ஒரு சிறந்த உணவாகவும், மருந்தாகவும், வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. பூண்டை நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் நம் உணவில் சேர்த்து கொள்கிறோம். ஆனால் பூண்டில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. அதை பற்றி பார்ப்போம். பூண்டில் தாதுக்களும், வைட்டமின்களும், சல்பர், குளோரின், அயோடின் போன்ற சத்துக்களும் அதிகளவு உள்ளது. இத்தாலி, ஸ்பெயின், சீனா ஆகிய நாடுகளிலும் எல்லா வகை உணவுகளிலும் பூண்டை சேர்த்து கொள்கிறார்கள். தினமும் பூண்டை பயன்படுத்தி வந்தால், சளி குறைந்துவிடும். மேலும் பூண்டில் உள்ள பக்டீரியா…

Read More

ஹைலைட்ஸ்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிக்கிறது. ரூ.6 லட்சமாக இருந்த இழப்பீடு தொகை, கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியிலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஊழியர் குறைந்தது ஒரு வருடமாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்திருக்கவேண்டும். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ரூ.7 லட்சம் வரை நிவாரணம் அளிப்பதாக உறுதி அளித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் மாத சம்பளத்திற்கு வேலைப்பார்ப்பவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருந்தால், இவர்களுடைய குடும்பத்துக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு வழங்குகிறது. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் PF கணக்கு வைத்திருந்தால் மட்டுமே,…

Read More