ஹைலைட்ஸ்: சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு. மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியின் சார்பில் தலைவர் மு.க. ஸ்டாலின் சட்ட மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தமிழகத்தில் ஆட்சி செய்ய ஆளுநரிடம் உரிமை கோரினார். மு.க. ஸ்டாலின் இன்று (மே 5)காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அப்போது 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி உரிமை கோரினார். இதை தொடர்ந்து தமிழகத்தில் புதிய முதல்வராக பதவியேற்க மு.க.ஸ்டாலினுக்கு முறைப்படி ஆளுநர் பன்வாரில் லால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராம் பட்டேல் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி உள்ளார். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் வரும்…
Author: gpkumar
ஹைலைட்ஸ்: கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும். தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக கல்லூரி மாணவர்களால் பருவ தேர்வு எழுத முடியாமல் போனது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மாா்ச் 4ஆம் வரை இணையவழித் தேர்வு நடைபெறுவதாக இருந்த மாணவா்களுக்கு மட்டுமே இந்தத் தேர்வு அட்டவணை பொருந்தும். அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மாணவா்களுக்கான மறுதேர்வுகள் மே 17ஆம் தேதிலிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தவிர, பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி (எம்ஐடி), கட்டடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி ஆகிய 4 வளாகக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு நவம்பா்- டிசம்பர் மாதங்களில் நடத்த…
ஹைலைட்ஸ்: சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செல்ப் சிடி-ஸ்கேன் எடுப்பது ஆபத்தானது. குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிடி ஸ்கேன் எடுப்பதால், அவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் பலரும் சிடி ஸ்கேன் எடுத்துள்ளார்கள். இந்நிலையில் குலேரியாவின் கருத்து அச்சத்தை ஏற்பட்டுள்ளது. சிடி ஸ்கேன் எடுத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று சொல்ல முடியாது என்கிறார் அமர்நாத். மேலும் புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு, அவர்களின் பாதிப்பு எவ்வளவு, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று கண்டறிய சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளது என்கிறார் அமர்நாத். பொதுவாக குழந்தைகளுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு சிடி-ஸ்கேன் எடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடனே தீவிரமான சிகிச்சை…
ஹைலைட்ஸ்: உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை நாடு முழுவதும் ஊரடங்கு,வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை. இளைஞர்களுக்கு மனஅழுத்தம் காரணமாக ஏற்படும் மாரடைப்பு. உலகளவில் கொரோனா நோய் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதையும் வேறு எந்த நோயும் கொரோனா அளவு தாக்கியதில்லை. 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான (COVID 19) இந்த நோய் தொற்றினால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கின் தொடக்கத்தில் பலருக்கும் ஒரு புதிய அனுபவமாகத்தான் இருந்தது. இது அனைவருக்கும் விடுமுறை காலம் போன்று மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் மாதக்கணக்கில் ஊரடங்கு நீடித்ததால் வேலை இழப்பு, பணநெருக்கடி, எதிர்காலம் பற்றிய கவலை போன்றவைகள் உருவானதும் பலரும் கடுமையான மனஅழுத்தத்திற்குஆளாகினார்கள். அது ஒரு சில மனிதர்களுக்கு உயர் ரத்த அழுத்தம்,…
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்க்கு “மிஷன் ஆக்சிஜன் ” என்ற நிறுவனம் அறிமுகம். மிஷன் ஆக்சிஜன் நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடி நிதியுதவி தொற்றுநோயை எதிர்த்து நிற்க கடுமையான போராட்டமும் உழைப்பும் தேவை. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டி சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் “மிஷன் ஆக்சிஜன்” என்ற நிறுவனம் உதவி வருகிறது. கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரும் சுகாதார சீரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் மிக அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால்,மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இதன் விளைவாக “மிஷன் ஆக்சிஜன்” என்னும் நிறுவனத்திற்கு, இந்தியா முழுவதும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை இறக்குமதி செய்வதற்கும், கொரோனாவுடன் போராடி வரும் மருத்துவமனைகளுக்கு அவற்றைக் கிடைக்கச் செய்வதற்கும் சச்சின் டெண்டுல்கர் ரூ.1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். இந்த சூழலில், மிஷன் ஆக்ஸிஜன் திட்டமானது, 250-க்கும் அதிகமான இளம் தொழில்முனைவோர் குழு, ஆக்சிஜன்…
ஹைலைட்ஸ்: தமிழ்நாடு அரசின் அனுமதியை பெற்றது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் ஆரம்பம். 2021 டி.என்.பி.எல். ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியீடு. தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது ஐந்தாவது சீசனாக ஜூன் 4-ம் தேதி முதல் ஜூலை 4 வரை சேலம், திருநெல்வேலி, திண்டுக்கல், கோவை என நான்கு நகரங்களில் நடைபெற இருக்கிறது. டி.என்.பி.எல்.போட்டியானது தமிழகத்தில் சேலம், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய எட்டு நகரங்களை மையமாக கொண்ட அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் 2016 ம் துவங்கப்பட்டது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் டி.என்.பி.எல். போட்டியை இதுவரை நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டநிலையில் கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக ஐந்தாவது சீசன் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் 2021 ஆம் தொடருக்கான போட்டியின் அட்டவணையை கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியை…
ஹைலைட்ஸ்: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம். தடுப்பூசி குறித்து வதந்தியை பரப்பக் கூடாது. அறிவியல் தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மன்சூர் அலிகானுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, அறிவியல் தொழில்நுட்பங்களை மதிக்க வேண்டும், கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே நடிகர் விவேகிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமணையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசியை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் நடிகர் விவேக்கைப் பார்க்க வந்து மருத்துவமனை வாசலில் இருந்த செய்தியாளர்களைச் சந்தித்த…
ஹைலைட்ஸ்: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் புதிதாக 3,79,257 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 15 கோடி பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மக்களை ஆட்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் தடுக்ககவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் வைரசால் பாதிக்கப்பட்டு 3,645 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் நோய் தொற்றுக்கு புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், சிகிச்சை பெறுவோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகிதம் ஆகியவற்றின் நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில்…
ஹைலைட்ஸ்: ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. அனைத்து பதவிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2021. அதேபோல் அனைத்து பதவிக்கும் 15.04.2021 அன்று முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம். 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ஐ.ஜி.சி.ஏ.ஆர் (IGCAR) Indira Gandhi Centre for Atomic Research நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் கடந்த ஏப்ரல் -15 அன்று வேலைக்கான அனைத்து விவரங்களையும் அறிவித்துள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டிற்கான மொத்தம் காலிபணியிடங்களை ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காலிபணியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் கீழே பார்ப்போம். இந்த பணிகளுக்கு https://www.igcar.gov.in/ என்ற ஐ.ஜி.சி.ஏ.ஆர்-ரின் அதிகார பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களை பார்ப்போம். ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை வெளியிட்டுள்ளது. வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம்.…
ஹைலைட்ஸ்: மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. மே 2ஆம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம், அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி, மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
ஹைலைட்ஸ்: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி. இன்று மாலை 4 மணி முதல் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம். ஒரு செல்போன் நம்பரை பயன்படுத்தி நான்கு பேருக்கு முன்பதிவு செய்யலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வரும் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இதைத்தெடர்ந்து தற்போது 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இன்று மாலை 4 மணி முதல் அரசின் இணைத்தளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி மையங்களில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூட்டம் கூட வாய்ப்புள்ளது. தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்க்காக மத்திய அரசு கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய COWIN என்ற இணைத்தளத்தையும், ஆரோக்ய சேது செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. 18 வயதிற்கு…
ஹைலைட்ஸ் : இந்தியாவில் கொரோனா நோய் தொற்று தினமும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம். தமிழகத்தில் கோவை, சென்னை,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா நோய் தொற்று பாதிப்பு. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டு வருவதால் தற்போது மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அடுத்த சில வாரங்களுக்கு அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மக்கள் பீதியில் உறைந்துள்ளார்கள். அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனை மக்கள்…
ஹைலைட்ஸ்: கீழாநெல்லியில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. கீழாநெல்லியின் இலையில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் உள்ளது. கீழாநெல்லி மஞ்சள் காமாலை, மாலைக் கண் நோய், கண் பார்வை மங்குதல் ஆகியவற்றை குணப்படுத்தும். பொதுவாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் தானாகவே வளரகூடிய செடிகளில், எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உள்ளது. இதை நாம் அலட்சியப்படுத்தி விடுகிறோம். இந்தவகையில் அற்புதமான மூலிகைக் கீரைதான் ‘கீழாநெல்லி’. கீழாநெல்லியை கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய் நெல்லி என்றும் அழைப்பார்கள். இந்த குறுச்செடி நீர்நிலைகள், வயல் வரப்புகள் மற்றும் பாழ் நிலங்களில் வளரக்கூடியது. இந்த செடியின் இலைகள் புளியமரத்தின் இலைகளைப் போலவே இருக்கும். இந்த செடியில் பூக்களும் காய்களும் இலைகளுக்குக்கீழ் காணப்படும். கீழாநெல்லியின் இலையில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருக்கும். மேலும் இதில் பொட்டாசியம் சத்து அதிகமாகக் காணப்படும். இந்த செடிகளின் இலைகளுக்குக் கீழே நெல்லிக்காய் வடிவத்தில் காய் இருப்பதால் இதை ‘கீழாநெல்லி’ என்று அழைக்கிறோம். இதேபோல் இலைகளுக்கு மேலே காய்…
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 நிபுணர்கள் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களுக்கு எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பதை பற்றிய விவரம் மத்திய அரசிடம் உள்ளது. அதனால் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் தமிழகமே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்தலாம் என்று யோசனை கூறியது. இதைத்தொடர்ந்து , நேற்று தமிழக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி…
