Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டதை  குறித்து  நடிகர் மன்சூர் அலிகான் பொய்யான தகவலை பரப்பி வருவதாக அவர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 அன்று உயிர் இழந்தார். நடிகர் விவேக்கிற்கு  தடுப்பூசி போட்டுக் கொண்ட மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தமிழக மக்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசி போட்டு கொண்டதால் தான் நடிகர் விவேக்  உடல் நிலை பாதிக்கப்பட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும் அவர் யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது  நடிகர் மன்சூல் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. நடிகர் மன்சூல்…

Read More

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், குடல் இறக்க அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சைக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஹெர்னியா எனப்படும் குடலிறக்க அறுவை சிகிச்சை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தால், இன்று தனியார் மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read More

திருச்சியில் உள்ள தேசிய தொழிநுட்பக் கழகத்தில் (NIT) வேலைவாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பணியின் விவரம் : Project linked Research Fellows, Project Associate, Project Assistant, Laboratory Mechanic, Project Staff மொத்த காலி பணியிடங்கள்: 30 கல்வித் தகுதி: Diploma, B.E/ B.Tech, M.E/ M.Tech மாத சம்பளம்: ரூ.18,000 – ரூ.31,000 தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 19 மேலும் முழு விவரங்களை இந்த லிங்க் https://www.nitt.edu/ மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

Read More

நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல், 17) காலை 4.35 மணிஅளவில் உயிர் இழந்தார். இவருடைய மரணம் சினிமா திரையுலகத்திற்கும், இவருடைய ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். இவருடைய மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமாவில் அனைவராலும் பாசத்தோடும், அன்போடும் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். இவருடைய இயற்பெயர் விவேகானந்தன். 1961ம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அங்கய்யா – மணியம்மாள் தம்பதியாருக்கு மகனாக பிறந்தார். இவருடைய பள்ளிப்படிப்பை சொந்த ஊரிலேயே முடித்தார். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.காம் பட்டம் பெற்றார். சினிமா உலகிற்கு வருவதற்கு முன் மதுரையில் டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்தவர். பிறகு சென்னைக்கு வந்து டிஎன்பிஎஸ்ஸி குரூப்-4 தேர்வு எழுதினார். இந்த தேர்வில் தேர்ச்சியும் பெற்றார். பிறகு தலைமைச்…

Read More

தேர்வு பற்றி அச்சம் நம்மில் தொற்றிக் கொண்ட உடனே, நம் நடவடிக்கைகளில் பல்வேறுமாறுதல் நிகழ்வதை நாம் பார்க்கலாம். அதில் முக்கியமான ஒன்று, உணவுப் பழக்க வழக்கம். தேர்வு நேரங்களில் உணவுப் பழக்கத்தில் பல்வேறு மாற்றங்களையும் சில கட்டுப்பாடுகளையும் கையாள்வது கட்டாயமாகிறது. சில மாணவர்கள் தேர்வுநேரங்களில் சாப்பிடாமல் படித்துக்கொண்டே இருப்பார்கள். பெற்றோர்களும் அதை பெரிதாக பொருட்படுத்துதாமல் விட்டுவிடுகின்றனர். தேர்வு நேரத்தில் நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுகள் பெரிதும் துணை புரிகின்றன. நினைவாற்றலை மேம்படுத்த குறிப்பிட்ட உணவுககளை உண்பதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குவதோடு, நல்ல நினைவாற்றலை தந்து, நினைத்த மதிப்பெண்களை பெற வழிவகை செய்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்காக காலை உணவை எடுத்துக்கொள்ளாமல், நேரடியாக தேர்வுகளை சமாளிக்க சென்று விடுவார்கள்.ஆனால் தேர்வு எழுதும்போது மூளையானது சோர்வடைந்து எழுத்தமுடியாமல் போய்விடும். எனவே மாணவர்கள் தேர்வுக்கு முன்னும் பின்னும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நீர் ஆதாரங்களை எடுத்துக்கொள்ளுவது மிகவும் நல்லது. தேர்வின் பொது தண்ணீரை எடுத்துக்கொண்டு…

Read More

அண்ணா பல்கலைக் கழக இணையவழி செமஸ்டர் தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடிகளால் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மிகுந்த மன அழுத்ததில் இருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வு முடிவுகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் இதுவரை முறையான விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் மீது பொறியியல் கல்லூரிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறது. பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் தள்ளி வைத்தது. இந்த செமஸ்டர் தேர்வுகள் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இணையவழி மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பிஇ, பிடெக், மற்றும் எம்இ, எம்டெக் படிப்புகளில் 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டது. இந்த…

Read More

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்று செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். பொதுவாக இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும் மே 5 -ஆம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மே 3-ஆம் தேதி நடக்க இருந்த மொழிப் பாடத் தேர்வு, மே 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான செய்முறை பயிற்சி வகுப்புகளும்…

Read More

இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வங்கியான ‘சிட்டி பேங்க்’ தெரிவித்துள்ளது. மேலும் சீனா, மலேசியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, ரஷ்யா, இந்தோனேசியா , போலந்து, பிலிப்பைன்ஸ் , வியட்நாம், கொரியா, தாய்லாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகளிலும் வங்கி சேவைகளை நிறுத்தப்போவதாக சிட்டி பேங்க் தெரிவித்து இருக்கிறது. அமெரிக்காவின் மூன்றாவது பெரியவங்கி ‘சிட்டி பேங்க்’ குழுமம் ஆகும். இந்த வங்கி இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 12 லட்சம் வங்கி சேவை பெறுவோர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்த வங்கியில் 22 லட்சம் கிரெடிட் கார்டுதாரர்கள், சுமார் 29 லட்சம் சில்லறை வாடிக்கையாளர்கள் உள்ளார்கள். இந்தியாவில் 35 கிளைகளுடன் சுமார் 4000 ஊழியர்களுடன் சிட்டி பேங்க் இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் தங்களது சேவைகளை நிறுத்திக் கொள்ளப்போவதாக ‘சிட்டி பேங்க்’ தெரிவித்து இருக்கிறது. இந்நிலையில் சிட்டி பேங்க் குழுமம் அமெரிக்காவை தவிர்த்து லண்டன்,சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம்…

Read More

சென்னையில் 15 நாட்களுக்கு பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை முயல் வேகத்தில் அதிகரித்து வந்தது. தற்போதுபெட்ரோல், டீசல் விலை ஆமை வேகத்தில் குறைந்தும் வருகிறது. அந்த வகையில் 15 நாட்களுக்குப் பிறகு சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 15 காசுகள் குறைந்து, 92 ரூபாய் 43 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 13 காசுகள் குறைந்து, 85 ரூபாய் 75 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், சுமார் நாளொன்றுக்கு 8,000 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், நியாயவிலைக் கடைகளில் பயன்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறையின் மூலமும் நோய்த் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மக்கள் அச்சப்படுகிறார்கள். இந்த பயோமெட்ரிக் முறையினால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடும், அதனால் இந்த முறையை மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தற்போது பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்று மக்கள் சக்தி இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொதுமக்கள் தங்களுடைய விரல் ரேகையைப் பதிவுசெய்வதின் மூலம் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.…

Read More

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்யமான உணவு வகைகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் பழவகைகளையும்,காய்கறிகளையும் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். இதில் பழங்களை உண்ணும்போது அதன் குணங்கள் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் நல்லது. அந்த வகையில் அன்னாசி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்க்கலாம். அன்னாசி பழத்தை அளவாக சாப்பிடுவதால் நமக்கு நிறைய பயன்கள் கிடைக்கும். இதில் பல உடல்நலத்திற்கு தேவையான பயன்கள் இருப்பது போல சில உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கிறது. இயற்கையாகவே அன்னாசி பழத்தில் சர்க்கரை அதிகமாக இருக்கும். எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பழம் நல்லது கிடையாது. இந்த பழம் நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு நமக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். மேலும் பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸாக செய்து சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும். இந்த பழத்தை அதிகமாக…

Read More

மத்திய அரசு 2015 ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோரை ஊக்குவிக்கும் வகையில் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்தை தொடங்கியது. இந்த கணக்கினை 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் தொடங்கலாம். இந்திய தபால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, ஒரு பெற்றோர் இரு பெண் குழந்தைகளின் பெயரில் இந்த திட்டத்தைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் ஓராண்டில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் முதலீடு செய்யும் பணத்திற்கான வட்டி விகிதம் ஏப்ரல் – ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆக இருந்தது. இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு நஷ்டமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு உதவியாக இருக்கும். இந்த சேமிப்புத் திட்டத்தை 14 ஆண்டுகள் வரை தொடர முடியும்.…

Read More

கோடைக் காலத்தில் வெயில்,வியர்வை சுரப்பதன் காரணமாக பலரும் சருமப் பிரச்னையால் அவதிப்படுவர். உடலில் டீஹைடிரேஷன் அதாவது நீர்ச்சத்து குறையும்போது சருமத்திற்குத் தேவையான நீர் கிடைக்காதபோது சருமம் வறண்டு காணப்படும். மேலும் வெயிலில் செல்வதால் அலர்ஜி, உடலில் தடிப்புகள், பருக்கள்,வியர்க்குரு போன்றவை ஏற்படும். இயற்கையாக இதனை சரிசெய்ய பல பொருள்கள்,வழிகள் இருக்கின்றன. இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடியில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பை பெரும். ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். ஒரு 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவவும். தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது. இதனைச் செய்யும்போது உங்கள் வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும்…

Read More

ஆர். பார்த்திபன் இயக்கி , நடித்த ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படம் 2019-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் விமர்சனங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் மத்திய அரசு இந்த படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளை அறிவித்தது. இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் ‘இரவில் நிழல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளார்கள். மேலும் இப்படத்தில் பார்த்திபனே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் இடம்பெறுமா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாக வில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருந்தார். அப்போது பார்த்திபன் இயக்கும் ‘இரவின் நிழல்’ படத்திற்கு இசையமைக்கும் தகவலை அவர் அங்கே உறுதி செய்தார். இதை தொடர்ந்து இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர்…

Read More