ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஏர்டெலிடமிருந்து ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கற்றை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட ரூ .1.497கோடி மதிப்பிலான அலைக்கறைகளை எங்களிடமிருந்து ரிலையன்ஸ் ஜியோ வாங்குவதாக ஒப்பந்தத்தில் இரு நிறுவனமும் கையெழுத்திட்டுளோம். அத்துடன் எதிர்கால பொறுப்பு ஒப்பந்தமான ரூ .1.459கோடிக்கு அலைக்கற்றை தொடர்பான பொறுப்புகளை ரிலையன்ஸ் ஜியோ ஒப்புக்கொண்டுள்ளது. தங்களின் அறிக்கைகளை ரிலையன்ஸ் ஜியோவானது தனியாக வெளியிட்டுள்ளது. ஏர்டெலுக்கு சொந்தமான 800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசை கொண்ட அலைக்கற்றையை ஆந்திரப்பிரதேசம், தில்லி, மும்பை பகுதிகளில் பயன்படுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
Author: gpkumar
சிறுநீரகமானது நம் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது பல வகைகளில் உடலின் ஆரோக்கியத்தைக் காக்க துணைபுரிகின்றன. சுகாதார துறை அமைச்சகம் இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில் 800 பேருக்காவது நாள்பட்ட சிறுநீரக நோய் பிரச்னை உள்ளது என தெரிவித்துள்ளது. இதில் பலருக்கு தங்களுக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது , என்பதே தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை தரும் செய்தியாக உள்ளது. நோயானது முதிர்ச்சியடைந்த நிலையில்தான் தெரிந்துகொள்கிறார்கள். இந்த நோயை வளரவிடுவது என்பது பிரச்னைக்குரிய விசயமாக உள்ளது . அப்படி அத்தகைய நோயை வளரவிட்டால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, டயாலிசிஸ் என பல பெரிய சிகிச்சைகளை சந்திக்க நேரிடும். சில அறிகுறிகளை வைத்து சிறுநீரகத்தில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளலாம். சிறுநீர் பிரச்னை நுரைபோன்ற சிறுநீர் வருவது, இயல்பைவிட குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது, சிறுநீர் தொற்று ஏற்படுவது ,சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர்…
கடத்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் டெக்னீஷியன்களில் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். இதையடுத்து தற்காலிகமாக மூன்று மாதங்கள் நடைபெறாமல் இருந்த படப்பிடிப்பு, சென்னையில் கடந்த மாதம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்காக படப்பிடிப்பு தளங்களில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தும் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஐதராபாத் சென்றுள்ளார். தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து அவர் ஐதராபாத் சென்றுள்ளார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என பல நடிகர்கள் அண்ணாத்த படத்தில் நடிக்கின்றனர். இந்தப்படத்தை டி இமான் அவர்கள் இசையமைக்கிறார். இப்படம் 2021 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு ஓட்டி வந்த சைக்கிளின் விலை ரூ. 22,500 மட்டும் தான். நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டு தற்போது ஜார்ஜியாவுக்கு பறந்துவிட்டார். விஜய் சைக்கிளில் ஓட்டு போட வந்ததை பார்த்தவர்கள் அதன் விலையையும் , சைக்கிளின் விபரங்களையும் கூகுளில் தேடி கொண்டு இருக்கிறார்கள். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. மக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டதை விட விஜய் தன் வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது தான் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. கருப்பு, சிவப்பு வண்ணத்தில் இருந்த அந்த சைக்கிளை பார்த்தவர்கள் அதன் விபரங்களை தெரிந்து கொள்ள கூகுள் செய்கிறார்கள். விஜய் ஓட்டி வந்த சைக்கிள் மான்ட்ரா நிறுவன தயாரித்தது. இந்த சைக்கிள் 16 கிலோ எடை கொண்டது. அதன் விலை ரூ. 22 ஆயிரத்து 500 ஆகும். பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தான் நடிகர் விஜய்…
பூம்புகார் தொகுதி வாக்குச்சாவடி ஒன்றில் மொத்தம் உள்ள வாக்குகளைவிட 50 வாக்குகள் அதிகமாக பதிவாகிள்ள நிலையில், அந்த பூத்துக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த முகவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். பூம்புகார் தொகுதியில் உள்ள திருவாவடுதுறை அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட 175 ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 578 வாக்குகள் உள்ளநிலையில் 50 வாக்குகள் கூடுதலாக பதிவாகி 628 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபற்றி சந்தேகம் எழுப்பி நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் இவர்கள் நேற்று விடிய விடிய போராட்டம் நடத்தினர். இவர்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பூம்புகார் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை பாதுகாப்பு அறையில் கொண்டு செல்ல முயற்சித்தபோது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து 175 ஆம் எண் பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேட்பாளர்களின் முகவர்கள் வலியுறுத்தினார்கள். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி நடப்பதாக அதிகாரிகள்…
காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார். கொரோனாவானது இந்தியாவில் இரண்டாவது கட்டமாக பரவிருக்கின்ற காரணத்தினால் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி ஒரு லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றுமட்டும் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இதனால் இரவு நேர ஊரடங்காக டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு தினசரி 5 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையால், இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு போடும் நிலையமை குறித்து…
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) வரும் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி எழுமலையான தரிசிக்க திருப்பதி தேவஸ்தானம் தரப்பில், கொரோனா தொற்று குறைந்த இருந்தபோது தினசரி சா்வதரிசன டோக்கன்கள் (இலவச தரிசனம்) வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பேர் வரை தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதும், கடந்த மாதம் இறுதியில், 22 ஆயிரம் டோக்கனாக குறைக்கப்பட்டது. மேலும் கடந்த வாரம் இது 15 ஆயிரமாக குறைத்தது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால், திருப்பதி தேவஸ்தானம் பக்தா்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து வரும் ஏப்ரல் 12ஆம் தேதி…
பிரதமர் மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தைப் போக்கவும், தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றியும், காணொலி காட்சி மூலம் ஆலோசனை வழங்கினார். ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் “பரிக்சா பே சர்ச்சா” எனும் தலைப்பில், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெற்றது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டு காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 81 நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்று பிரதமருடன் உரையாடினார்கள். மாணவர்கள் தேர்வுகளை எண்ணி பயப்படகூடாது எனவும், மாணவர்கள் அன்றாடம் படித்து வந்தால், தேர்வு எனும் மனஅழுத்ததை தவிர்க்க முடியும் என்றும் பிரமதர் மோடி கூறினார். பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெறும் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து மதிப்பீடு செய்யக்கூடாது எனவும், உங்கள் பிள்ளைகளிடம் உள்ள தனித்திறமைகளை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும், பிரதமர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு…
உலகில் முதல் பத்து இடத்தை பிடித்துள்ள கோடிஸ்வரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு கோடிஸ்வரர்களில் முதலிடத்தில் 177 பில்லியன் அமெரிக்க டாலரை வைத்துள்ள அமேசான் நிறுவர் ஜெப்பெசாஸ் இருக்கிறார். இவரை தொடர்ந்து 2வது இடத்தில் 151 பில்லியன் டாலர் வைத்துள்ள டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரி எலான்மஸ்க் இருக்கிறார். எலான்மஸ்க் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலில் 31வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் LVMH தலைமை செயல் அதிகாரி பெர்னார்ட் அர்னாலட் உள்ளார். இவர் 150 பில்லியன் டாலர் வைத்துள்ளார். அவரை தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அடுத்ததாக பேஸ்புக் நிறுவர்மார்க் ஜூக்கர்பெர்க் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரை தொடர்ந்து ஆறாவது இடத்தில் வாரன் பஃபெட் உள்ளார். ஏழாவது இடத்தில் லாரி எலிசனும், 8வது இடத்தில் லாரி பேஜ்-யும் , ஒன்பதாவது இடத்தில் சர்ஜிப்ரினனும் உள்ளார்கள். முகேஷ்…
தமிழக அரசு அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. கொரோனோ பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் , கல்லூரிகளின் இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. இதில் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும் தெரிவித்திருந்து. இது தொடர்ப்பாக, பல்கலைக்கழக மாணியக் குழுவுக்கு எதிராக இவ்வாறு தேர்வுகளை ரத்து செய்வது முரணானது என தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இதற்கான வழக்கு விசாரணையில் ஏற்கெனவே ஆஜராகியிருந்த யுஜிசி சார்பு செயலாளர் உமாகாந்த் பலுனி, தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். மேலும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என்றும், தேர்வு நடத்துவதை…
சட்டமன்ற தேர்தல் நேற்று ஒரே கட்டமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்திலும் , புதுச்சேரியிலும் நடைபெற்றது. தமிழகத்தில் அ.தி.மு.க வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி பலமாக இருந்தாலும் 5 முனைப்போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். மேலும் தமிழகத்தில் 6,28,69,955 பேர் மக்கள் வாக்களிக்க இருந்தார்கள். தமிழ்நாட்டில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆரம்ப கட்டத்திலே ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போடத் தொடங்கினார்கள். கடுமையான வெயிலிலும் மக்கள் உற்சாகமாக வாக்களிக்க வந்தார்கள். மேலும் அங்குள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களை முக கவசத்துடன் வாக்குச்சாவடி அருகே அனுமதித்தார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலையில் இருந்தே மிகவும் ஆர்வமாக வந்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதை பார்க்கமுடிந்தது. தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீத வாக்கும், காலை 11 நிலவரப்படி 26.90 சதவீத வாக்கும் பதிவாகியிருந்தது. மதியம் 1 மணி…
வாடிக்கையாளர்கள் தங்கள் சிலிண்டர்களை வாட்ஸ்அப் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை எரிவாயு முகவர் நிறுவனங்கள் அறிமுகபடுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, சமீபத்தில் பல ஆன்லைன் செயல்முறைகளைக எரிவாயு முகவர் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களின் கேஸ் புக் செய்ய, கேஸ் விநோயம் செய்பவரை தொடர்பு கொள்ளலாம், அல்லது இணையதளம் மூலமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். தற்போது எரிவாயு நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண்ணில் ஒரு மெசேஜ் மட்டும் செய்து கேஸ் புக் செய்து கொள்ளலாம் என்ற வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப்பில் எல்பிஜி முன்பதிவு தற்போது எண்ணெய் நிறுவனங்கள் WhatsApp மூலம் LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்து கொள்ள தங்கள் சொந்த எண்களை வெளியிட்டு உள்ளது. இந்த எண்ணிற்கு நீங்கள் வெறும் REFILL என்று டைப் செய்து அனுப்பினால் மட்டும் போதும் உங்கள் LPG சிலிண்டர் புக் ஆகிவிடும். மேலும் WhatsApp மூலம் முன்பதிவு செய்த…
எல்ஐசி-யின் புதிய ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு மட்டும், ஒரு நோக்கமற்ற லாப எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசிதாரர் குறைந்த பிரீமியத்தை செலுத்தினால் போதுமனது. இந்த பாலிசியில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால் ஒரு நாளைக்கு பிரீமியமாக 30 ரூபாய் செலுத்தினால் போதுமானது. குறைத்த மதிப்பான 30 ரூபாய் செலுத்தும்பட்சத்தில் பாலிசி முடிவடைந்த பிறகு கிட்டதட்ட 4 லட்சம் ரூபாய் வரையில் முதிர்வு தொகை கிடைக்கும். அது மட்டும் அல்லாமல் , இந்த சிறிய திட்டம் இறத்தபிறகு சலுகைகள் மற்றும் பிற வசதிகளையும் கொடுக்கிறது. ஆண்கள் மட்டுமே எடுக்க முடியும் எல் ஐ சியின் இந்த பாலிசி திட்டமானது சேமிப்பு பாதுகாப்பு மற்றும் இரண்டையும் கொடுக்கிறது. எனினும் இந்த திட்டத்தில் உள்ள நெகடிவ் பாயிண்ட் என்னவென்றால் இந்த பாலிசியானது ஆண்களுக்கு மட்டுமே. இந்த எல் ஐ சி திட்டத்தை…
வேர்க்கடலை உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது. இதற்கு பல பெயர்கள் உண்டு.அதாவது நிலக்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை,கடலை ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்களுக்கு அளித்துவரும் நொறுக்குதீனிகளான (ஜல்லி ,சிப்ஸ்,ஐஸ்) தவிர்த்து கடலைமிட்டாய்,எள்ளு மிட்டாய், பொறி உருண்டை போன்ற உடலுக்கு நம்மை தரும் பொருட்களை விரும்பி உண்ண ஊக்கம் அளிக்கவேண்டும். நிலக்கடைலையானது பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்த ஒன்றாகும் . ‘ஏழைகளின் பாதாம்’ என்று நிலக்கடலையைக் குறிப்பிடுவர் , பாதாம் பருப்பைவிட உடலுக்கு அதிக நன்மையும் ஆரோகியாமும் தரக்கூடியது என ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது. நாம் நாகரிக வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் பாரம்பரிய உணவுப் பொருள்கள் பலவற்றை நாம் அன்றாட வாழ்வில் மறந்து வருகிறோம். அந்த வரிசையில் வேர்க்கடலையையும் நாம் மறந்துவிட்டோம். தற்போது மறந்துபோன நம் பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்கும் முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் இந்தச் சூழலில், வேர்க்கடலை குறித்து பல ஆய்வுகள்…
