ஹைலைட்ஸ்: ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளது. சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். ரெம்டெசிவர் மருந்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்துள்ளதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இது தமிழக மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. சென்னை, தண்டையார் பேட்டையில் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியது , ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கால், கடந்த இரண்டு நாட்களாக கொரோனா ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துள்ளதாக கூறினார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். மாஸ்க் போடாமல் வெளியே வராதீர்கள் என்றும் கூறினார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்து கொள்ளவேண்டும். தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுககளை முழுமையாக கடைப்பிடித்தால் கொரோனாவை முழுமையாக குறைந்துவிடலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்.…
Author: gpkumar
ஹைலைட்ஸ்: இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் உங்கள் சருமம் வெளிரிய நிறத்தில் இருக்கும். இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம். கர்ப்பிணி பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு அதிகமானால், தாய்-சேய் இருவருக்கும் பாதிப்பு. இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்,பொதுவாக நாம் உண்ணும் உணவில் இரும்புச்சத்து குறைவாக இருப்பது தான். இரும்புச்சத்து உறிஞ்சுதலில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் 80 சதவிகிதம் பேருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு உள்ளதாம். இரும்புச் சத்துக் குறைபாடு அதிகரிக்கும்போது, அது ரத்தசோகை ஏற்படுகிறதாம். இரும்புச் சத்துக் குறைபாடு ஆண்களைவிட பெண்களுக்கு தான் அதிகம் இருக்கிறது. இருபாலரின் உடல் ஆற்றல் அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இரும்பு சத்து மிகவும் அவசியமானதாகும். தினசரி நாம் சரிவிகித உணவை எடுத்து கொள்வதன் மூலம் இரும்புச் சத்துக் குறைபாட்டை போக்கலாம். நம் உடலில் ஹீமோகுளோபின் குறைய காரணம் இரும்புச் சத்து தான். பொதுவாக இரும்பு…
ஹைலைட்ஸ்: தமிழகத்தில் திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமுலுக்கு வந்தது. ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சலுக்கு மட்டும் அனுமதி. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிறன்று முழுநேர ஊரடங்கும் அமுல்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசு இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்: ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடக்கூடாது, பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது. அதுவும் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், நற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு…
ஹைலைட்ஸ்: மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச தானியங்கள் 5 கிலோ இலவச உணவு தானியங்களுக்காக மத்திய அரசு 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. 80 கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவு தானியங்கள் இலவசம் என மத்திய அரசு அறிவிப்பு நாடு முழுவதும் இரண்டாம் அலை கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. அதேபோல் நேரக்கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.மேலும் உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனையும் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில அரசுகள் ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். மாநில முதல்வர்களுடன் நேற்று மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.…
ஹைலைட்ஸ்: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கருதி கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது போராட்டத்தின் உச்சக்கட்டமாக கிராம மக்கள் 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்தினார்கள். இந்த பேரணி கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது கிராம மக்கள் 13 பேர் காவல் துறைனரால் சுட்டு கொல்லப்பட்டார்கள். இதற்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்குச் சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் இரண்டாவது அலையாக கொரோனா வைரஸ் பரவிவருவதால், தற்போது மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு மேற்கொண்டு பல முயற்சிகளை வருகிறது.…
ஹைலைட்ஸ்: தினமும் இஞ்சி தேநீர் அருந்தி வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் இஞ்சி தேநீர். வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் இஞ்சி தேநீர். தினமும் ஒரு கப் இஞ்சி தேநீர் (இஞ்சி ஹெர்பல் டீ) குடித்து வந்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தேநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் இருக்கிறது. இந்த அமிலங்கள் நமது உடலில் புற்றுநோய் மற்றும் அலர்ஜிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமீனோ ஆசிட்கள் இஞ்சி தேநீரில் அதிகமாக இருக்கும். இவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து இதயக் கோளாறு பிரச்னைககள் வராமல் தடுக்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்புகளையும் கரைக்கிறது. மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிரச்சனைகளையும் வராமல் தடுக்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கிறது. கல்லீரல் பிரச்சனைகள்,வயிறு கோளாறு, குமட்டல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராமல்…
ஹைலைட்ஸ்: நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவு நன்மை தரும். நூக்கல் வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் தன்மைக் கொண்டது. நம் உடலில் நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை தவிர்க்கும். அன்றாட உணவில் நாம் காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பெரும்பாலான காய்கறிககளை நாம் சமைத்து சாப்பிடுவதே இல்லை. அந்தவகையில் இன்றைய காலகட்டத்தில் தாய்மார்கள் பலரும் நாட்டு காய்கறிகளை விரும்பி சமைப்பதில்லை. நாட்டு காய்கறி வகையில் நூக்கல் காய்கறியும் ஒன்றாகும். நூக்கல் என்ற பெயரையே கேள்விப்பட்டது இல்லை என்று சிலர் கூறுவதை நாம் கேள்வி பட்டுயிருப்போம். ஆனால் நூக்கலில் இருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு அதிக அளவில் நன்மைகளை தரக்கூடியது என்று பலருக்கும் தெரியாது ஒன்றாகும். நாம் தினமும் நூக்கலை சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்ப்போம். நூக்கலை அடிக்கடி நம் உணவில் சமைத்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் இதில் நீர்ச்சத்து…
ஹைலைட்ஸ்: ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் 2,104 பேர் உயிரிழப்பு. தற்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட இல்லாத சூழ்நிலை. நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தெற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கொரோ னா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் இந்தியாவில் மூன்று லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாவது இதுவே முதல்முறையாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தமாக எண்ணிக்கை 15,930,965 ஆக உயர்ந்துள்ளது. அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. நேற்று ஒரேநாளில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 62 ஆயிரத்து…
பொதுவாக ஏலக்காயில் நிறைய மருத்துவகுணங்கள் நிறைந்து இருக்கும். ஆனால் நாம் இதை ஒரு வாசனை பொருளாக மட்டும் தான் பயன்படுத்தி இருக்கிறோம். இனிப்பு பலகாரங்களில், பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காகயும், ருசிக்காகயும் ஏலக்காயை பயன்படுத்துவது மட்டும் தான் நமக்கு தெரியும். ஏலக்காய் நமக்கு மருந்தாக எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி பார்ப்போம். தினமும் சூடான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடியை தேன் சேர்த்து குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவளர்ச்சி குறைபாடுகள் நீங்கும். இதுமட்டுமில்லாமல் நெஞ்சில் சளி உள்ளவர்களுக்கும், இருமல் மற்றும் வயிற்று வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு ஏலக்காய் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. மேலும் ஏலக்காய் தூள் இவர்களுக்கு நல்ல பலனையும் தருகிறது. இந்த ஏலக்காய் ஹைடோஸ் மாத்திரையை போல ஒரு வீரியம் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது. அதனால் இதை நம்முடைய உணவில் சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். ஏலக்காயை நம் உணவில் அதிக அளவு சேர்த்து கொண்டால்…
சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் அதிகரித்து கொண்டே இருப்பதால் சாமன்ய மக்களின் பாக்கெட்டுகளில் பெரும் ஓட்டை விழுந்துள்ளது என்று கூறலாம். தற்போது 14.0 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 809 என்ற அளவில் உள்ளது. இந்தநிலையில், அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் பேடிஎம் (Paytm) ஒரு அசத்தலான ஆஃபரை கொண்டுவந்து இருக்கிறது. நீங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியான Paytm மூலம் முதல்முறையாக LPG சிலிண்டரை முன்பதிவு செய்யும் போது உங்களுக்கு 800 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இதன் மூலம் LPG சிலிண்டர் முன்பதிவின் கட்டணத்தை Paytm மூலம் செலுத்தும் போது, 809 ரூபாயாக இருக்கும் ஒரு சிலிண்டரை டெல்லியில் ரூ.9 என்ற விலைக்கு பெறலாம். இந்த சலுகை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த சிலிண்டர் முன்பதிவுக்கு Paytm வழங்கியுள்ள சலுகையில் சில நிபந்தனைகள் அடங்கி உள்ளது. முதன்முறையாக எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு…
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்ட நிலையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. 10-ஆம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்களை உயர்த்த விரும்பபினால் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில்லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. அதாவது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வு மதிப்பெண்கள் 35 விட கூடுதல் மதிப்பெண் பெற விரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்தந்த பள்ளி அளவில் நடைபெறும் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி அளவிலான தேர்வு ஜூன் , ஜூலை மாதங்களில் நடத்தப்படலாம் என…
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவாமனை தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை சில கொரோனா நோயாளிகள் மிகவும் அலட்சிய படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த கண்ணன் என்ற 32 வயது வாலிபர் நேற்று கொரோனா பரிசோதனை செய்து இருக்கிறார்.அவருக்கு காய்ச்சல் மற்றும் நோய் தொற்று அறிகுறி இருந்தததால் உடனடியாக அங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எனக்கு பரிசோதனை முடிவு வரும் முன்னரே ஏன் என்னை கொரோனா வார்டில் சேர்த்தீர்கள், என்று கூறி அந்த வாலிபர் மருத்துவமனை பணியாளர்களுடன் தகராறில் ஈடுப்பட்டு உள்ளார். இரவில் உணவு வழங்கிய போது உணவு வழங்கியவர்களுடன் தகராறு செய்துள்ளார். அதுமட்டுமின்றி அங்கு இருந்த கதவின் கண்ணாடியை…
கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் காரணமாக, தடுப்பூசி மையங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் எனவும், சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையம் இணை நிறுவனர் தொடர்ந்த வழக்கில், மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசிபோட வயது வரம்பை நிர்ணிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை தொடர்ந்த மனுதாரர் தரப்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதால், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து,சென்னை உயர்நீதிமன்றம் 18 வயது முதல் 45 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா என மருந்து தயாரிக்கும் நிறுவனத்துடன் கலந்து ஆலோசித்து மாற்றுத்திறனாளிகளுக்கான வயது வரம்பை நிர்ணயித்து மூன்று நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.…
மத்திய அரசானது, கொரோனா வைரஸ் முதல் அலையின் போது வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை பாதுகாக்கும் பணியில் இருக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ, சுகதாரப் பணியாளர்கள் திடீரென உயிரிழப்பு நேர்ந்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு தரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மத்திய அரசு மார்ச் மாதம் 24-ம் தேதி கொரோனா வைரஸ் காலத்தில் பணியாற்றும் மருத்துவ சுகாதரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 50 லட்சத்துக்கான காப்பீடு திட்டத்தை ரத்து செய்துள்ளது. அடுத்தகட்டமாக மத்திய அரசு, புதிய காப்பீடு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாகத் தகவல்களை வெளிட்டுள்ளனர். மத்திய அரசானது பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் வழங்கப்பட்ட இந்த காப்பீடு திட்டத்தில் ரூ.1.70 லட்சம் கோடியை 22 லட்சம் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு காப்பீடாக அறிவித்தது. இந்தத் திட்டத்தில் வார்ட் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பாராமெடிக்கல் பிரிவினர், தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் போன்றோருக்கு காப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில்…
