தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் +2 பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மே 3-ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மே 3-ஆம் தேதி நடைபெற இருந்த +2 தேர்வு மொழிப்பாடம் மட்டும் மே 31-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்தது. மே 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை. இதனால் முதல் தேர்வு மே 31-ஆம் தேதியும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில்…
Author: gpkumar
ஃப்ளிப்கார்ட் தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளது. ஃப்ளிப்கார்ட் உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான விளங்குகிறது. தற்போது இந்தியாவில் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இந்நிறுவனம் அனைத்து வகையான பொருட்களையும், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களையும் வர்த்தகம் செய்து வருகிறது. தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் கை கோர்த்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது. இதற்காக மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு முனையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மேற்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வழங்க இந்நிறுவனம் உத்தேசித்து இருக்கிறது. இந்த சரக்கு முனையம் வரும் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் நிதியாண்டு காலாண்டில் செயல்பட இருக்கிறது. மேலும் அதானி கனெக்ஸ் பி லிமிடெட் டேட்டா சேவை நிலையமும் சென்னையில்…
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட அலைவீச தொடங்கி தற்போது இது அதிவேகமாக பரவி வருகிறது. இதற்கு முன் ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. இது கடந்த சில நாட்களாக 1.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாம் அலை அசுர வேகத்தில் பரவிவருகிறது. தற்போது மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பீதியை கிளப்பிவருகிறது. மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது. இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதிரடியாக கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது . கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.68 லட்சம் பேருக்கு கொரோனா…
நாசா நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக், என்பவர் சந்திரனில் முதன் முதலில் பெண்ணை தரையிறைக்கினர். இது மட்டுமல்லாமல், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் முதல் நபராகவும் இருக்க முயன்றார். 2024 ஆம் ஆண்டில் ஆர்ட்டெமிஸ்-III பணி நடைபெற உள்ளது. அதில் முதலில் பெண்ணையும் அடுத்த ஆணையும் சந்திரனுக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022 நிதியாண்டுக்கான விருப்பத்தின் செலவினங்களை ஜோ பிடென் – கமலா ஹாரிஸ் நிர்வாகம் ஜனாதிபதியின் முன்னுரிமைகளை நேற்று சமர்ப்பித்தது. ஜனாதிபதியின் வேண்டுகோள்படி, பூமியின் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை கண்காணிப்பதற்கும், அதன் நிலவரத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும், கணிப்பதற்கும் நாசாவின் திறனை அதிகரிக்கிறது. அமெரிக்காவின் இரு கட்சி நிலவை செவ்வாய் கிரக விண்வெளி ஆய்வு திட்டத்திற்கு தொடர்ந்து முன்னேற்றுவதற்கு தேவையான ஆதாரங்களையும் இது வழங்குகிறது, இதில் முதல் பெண் மற்றும் முதல் நபரை தரையிறக்குவது உட்பட ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் கீழ் சந்திரனில் நிறம் உள்ளது, இதைப்பற்றி ஜூர்சிக் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார். இந்த…
தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த 80 பேருக்கு ரூ.1.19 கோடி திருப்பி வழங்கபட்டு இருக்கிறது . தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்து இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறையின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் 42 நிலை கண்காணிப்புக்குழுவினர், 75 தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தார்கள். தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லுதல், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்களை கொண்டு செல்லுதல் போன்றவைக்கு தடை விதித்திருந்த நிலையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட பணம், விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட பொருட்களை தேர்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்பு குழுவினரும்…
நீலநிற நிறம் கொண்ட, ஐஸ்கிரீம் சுவையில் ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் அதிக ஆரோக்கியம் மற்றும் சத்து நிறைந்த பிரபலமான பழங்களில் ஒன்று .அனைத்து மக்களாலும் உலகளவில் அதிகமாக விரும்பி சாப்பிடப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஒரு புதிய வகை வாழைப்பழத்தை பற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது. கற்பூரவள்ளி, மோரிஸ், பச்சை வாழை, பூம்பழம், ரஸ்தாளி, செவ்வாழை என்று பல வாழைப்பழ வகைகள் உள்ளது. ஒவ்வொரு பழமும் தனித்துவமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும்,செவ்வாழை மற்றும் பச்சை வாழை தவிர்த்து மற்ற அனைத்து வகைகளும் மஞ்சள் நிற தோலை கொண்டிருக்கும் என்பது அனைவர்க்கும் தெரித ஒன்றே . ஆனால், சமீபத்தில் நீலநிற நிறம் கொண்ட ப்ளூ ஜாவா வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தோல் மட்டுமல்லாமல் பழம் முழுவதுமே நீல நிறத்தில் இருப்பது தான் ஆச்சர்யம். தற்போது இணையத்தில் இந்த பழத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இது ஐஸ்கிரீம் போன்ற…
கோடைகாலம் என்றாலே மே மாதம் தான் அதாவது தமிழ் மாதம் சித்திரையில் தான் கோடைவெயிலானது கொளுத்து விட்டு எரியும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறோம்.ஆனால் இந்த காலத்தில் தாங்க முடியாத அளவிற்கு வெயிலானது மார்ச் மதமே தொடங்க ஆரபித்துவிடுகின்றது. வீட்டில் கூட இருக்க முடியாத அளவிற்கு வெயிலானது கொளுத்துகிறது,வெயிலின் அளவு அதிகரிக்க அதிகரிக்க நம் உடலில் வெப்பத்தின் அளவு அதிகமாகி, நமக்கு வியர்வையை மூலையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் சுரக்கச்செய்கிறது, இதனால் உடலில் நீர் குறைத்து மயக்கம் அடைய செய்கிறது. வெப்ப தளர்ச்சி சாதாரணமாக வெப்பமானது உடலில் 98.4 டிகிரி பாரன்ஹீட், ஆனால் கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாகும் போது நம் உடலின் வெப்பநிலை 106 டிகிரியாக உயர்ந்து உடல் சோர்வு,அதிகப்படியான தண்ணீர்தாகம், மயக்கம்,தலைசுற்றுதல் போன்றவை ஏற்படுவதோடு சோடியம், பொட்டாசியம் மற்றும் mg போன்ற உப்புகள் வெளியேறி அதன் மூலம் உடல் சோர்வு அடைகிறது இதை வெப்ப தளர்ச்சி என்கிறோம். வெப்ப மயக்கம் அதிக அளவு…
பொன்னியின் செல்வன் எனும் நாவல் , எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலாகவும் அனைவரும் விரும்பி படித்துவந்த நாவலாக இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கிவருகிறார். மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் சில காட்சிகளை மத்திய பிரதேசத்தில் படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையால், பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022-ல் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் என்று சுல்தான் புரமோஷனில் கலந்து…
ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு அணி ‘டாஸ் ‘ வென்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ யை தேர்வு செய்தார். மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன் எடுத்து சுமாரான துவக்கத்தை தந்தார். பின்னர் இணைந்த கிறிஸ் லின் 49 ரன்னும் , சூர்யகுமார் யாதவ் 31ரன்னும் எடுத்தைகள். இந்த ஜோடி மும்பை அணிக்கு நம்பிக்கை தந்தது. இவர்களுக்கு அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷான் 28 ரன்னும், குர்னால் பாண்ட்யா 7 ரன்னும், போலார்டு 7 ரன்னும் எடுத்தார்கள். மார்கோ ஜான்சென் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷல் படேல்…
தற்போது ‘சூர்யா 40 ‘ படத்தின் போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதை சூர்யா 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கிராமத்து படம் என்று கூறப்படுகிறது.இதைத் தவிர, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்கிறார். இந்த திரைப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தபடம் முழுக்க வாடிவாசல் நாவல் அல்ல, இந்த நாவலுக்கு மேலாக வெற்றிமாறன் கற்பனையாக சில பகுதிகளையும் சேர்த்து இருக்கிறாராம். பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40 ‘ படப்பிடிப்பு தற்போது முழு வீச்சாக நடந்து கொண்டுயிருக்கிறது. டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ரத்னவேலு. கிராமத்து கதையான இந்த படத்தில் சூர்யா வித்தியாசமான ஹேர் ஸ்டைலில்…
மத்திய அரசிற்கு உள்பட்ட ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ராணுவ பொறியாளர் சேவைகள் நிறுவனத்தில் Draughtsman மற்றும் Supervisor பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்த காலிபணி இடங்கள்: 572 நிர்வாகம் பெயர் : Military Engineer Services வேலையின் விவரம்: Draughtsman – 114 மாத சம்பளம்: ரூ.35,400 முதல் – ரூ.1,12,400 வரை கல்வி தகுதி: Architectural Assistantship துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலையின் விவரம்: Supervisor – 458 மாதச் சம்பளம்: ரூ.35,400 முதல் – ரூ .1,12,400 வரை கல்வித் தகுதி: பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல், பொது நிர்வாகவியல் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர் வயது 18 முதல் 30 குள் இருக்க வேண்டும். பணிக்கு தேர்வு…
தமிழகத்தில் இரண்டாம் கட்ட அலையாக கொரோனா வைரஸ் பரவரும் நிலையில் அதை தடுக்க, முதல் கட்டமாக 50 சதவீத கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்களுக்கு இ – பாஸ் கட்டாயமாகியுள்ளது. அவசியமற்ற கூட்டங்களுக்கு, முழு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் மற்றும் திருவிழாக்கள் சார்ந்த கூட்டங்களுக்கும்,சில்லரை வியாபார கடைகளுக்கும்,வணிக வளாகங்களுக்கும் நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாமல் இருப்பதாலும், வழிகாட்டு நெறிமுறைகளை பணியிடங்களில் பின்பற்ற தவறுவதாலும், கொரோனா நோய் தொற்று சமீபத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மார்ச் 28ல் கொரோனா காரணமாக 13,070 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இது 27 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தற்போது மறு உத்தரவு வரும் வரை, சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், பொது மக்கள்…
தமிழகத்தில் விரைவில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில்,கொரோனா நோய் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வின்போது பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் பற்றி தேர்வு துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் பெற்றோர் மத்தியில் எழுந்து உள்ளது. மேலும் பிளஸ் 2 மாணவர்களும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்கள். இச்சூழலில், விரைவில் நடைபெறவுள்ள 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, செய்முறைத் தேர்வில் போது ஆய்வகத்தில் எரியும் தன்மை…
விவசாயி ஒருவர் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அவருடைய நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்து இருக்கிறார். அந்த நிலத்தில் தற்போது 5 கிலோ எடையுள்ள தங்கப் புதையல் கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள பெம்பார்த்தி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தில் எந்த வருமானமும் வராததால் அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் நரசிங்காவிற்கு விற்பனை செய்து இருக்கிறார். நிலத்தை வாங்கிய நரசிங்கா ஒரு வாரத்திற்கு பிறகு நிலத்தை ஜேசிபி எந்திரம் வைத்து சமப்படுத்தி இருக்கிறார். அப்போது 5 கிலோ எடையுள்ள தங்கப் புதையல் அந்த நிலத்தில் கிடைத்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் அந்த புதையலை பார்ப்பதற்காக திரண்டு வந்தார்கள். மேலும் அதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கப் புதையலை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
