Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் கேமரா பொருத்தும் பணிகள் இருப்பதால் ஏப்ரல் 2 முதல் 5ஆம் தேதி வரை பள்ளிகளை திறந்திருக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு பெற்றோர்களிடம் கருத்து கேட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு, 9 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக…

Read More

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியாவும், இங்கிலாந்தும் விளையாட உள்ளது.இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பெயர்களை அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் ஷர்மா துணை கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரில் கோலி, ரோகித் ஷர்மா, தவான், சுப்மண் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), கே. எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், குர்னால் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், முகமது சிராஜ்,புவனேஸ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளார்கள். இந்த ஒருநாள் தொடரின் மூன்று போட்டிகளும் பூனேவில் நடைபெற உள்ளது. தற்போது டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் அணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அணியாக இந்த ஒருநாள் தொடரை இந்தியா விளையாட உள்ளது.

Read More

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் சிம்பு கைகோர்த்துள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர்,லாபம், மாமனிதன் ஆகிய திரைப் படங்கள் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் விவேக், மோகன்ராஜா, மகிழ்திருமேனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். தற்போது ‘முருகா’ என்ற பாடல் இத்திரைப்படத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முருகா என்ற பாடலை நடிகர் சிம்புதான் பாடியுள்ளார். இதன் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் சிம்பு இணைந்துள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதியும் , சிம்புயும் இணைந்து நடித்துள்ளார்கள். இவர்கள் இணைந்து நடித்து…

Read More

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது மூன்று பெண்கள் வந்த காரில் ரூ.6.50 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட இந்த ரூ.6.50 லட்சம் பணத்தை பூந்தமல்லி அருகே உள்ள காக்களூர் பால்பண்ணை பகுதியில்  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துயுள்ளார்கள். தமிழகத்தில்சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகளும் வெளியாகி இருக்கிறது.  இதனால் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளார்கள். குறிப்பாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் அனைத்து பகுதியிலும் வாகன சோதனைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு சேர்ந்த  திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூர் பால்பண்ணை அருகே வாகன சோதனை நடைபெற்றது.…

Read More

அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்புரத்தே இனி கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக புதிய கல்விக் கொள்கையில் புதிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. இது கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை அதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள் . மருத்துவப் படிப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று கூறியிருந்தார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு முதல் சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும், பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் உயிர் விலங்கியல், நுண்ணறிவியல்,உயிர் வேதியியல் போன்ற கலை அறிவியல் கல்லூரியில் உள்ள உயிர்…

Read More

இன்று தங்கம் விலை மீ்ண்டும் உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு பவுன் மீண்டும் 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள் . பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வருகிறது. இந்நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில வாரங்களாகத் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது . இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4258-க்கு விற்பனை…

Read More

பொன்ராம் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இதையடுத்து நேற்று விஜய் சேதுபதி நடிக்கவுள்ள திரைப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்று அதிகாரபூர்வ அறிவிப்பு ஓன்றும் வெளியாகியுள்ளது. தற்போது சன்பிக்சர்ஸ் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து கொண்டுயிருக்கிறது. அடுத்ததாக இந்நிறுவனம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன்பிக்ஸர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது .இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கவுள்ளார். தமிழ் திரையுலகில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், சூர்யா போன்ற பிரபல நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்ற செய்தி அனைவரும் தெரிந்ததே. தற்போது இந்த லிஸ்டில் விஜய்செதுபதியின் திரைப்படமும் இணைந்துள்ளது. தமிழ்…

Read More

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு பிளாட்பார்ம் டிக்கெட் விலையை தெற்கு ரயில்வே அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ரயில் நிலையங்களில் உள்ளே செல்வதற்கு பிளாட்பார்ம் டிக்கெட் எனப்படும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக வைத்திருக்கனும். ரயில்வே வாரியம் கடந்த 2015ஆம் ஆண்டில் ரூ.5ஆக இருந்த பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ரூ.10ஆக உயர்த்தியது. கூட்ட நெரிசல் உள்ளிட்ட ஏதேனும் குறிப்பிட்ட தேவை இருக்கும் போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10க்கும் அதிகமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அந்தந்த ரயில்வே பிரிவுகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலையை ரூ.10லிருந்து ரூ.15ஆக தெற்கு ரயில்வே உயர்த்தியது. இது இடைக்கால உத்தரவாக இருந்தது. அப்போது கோடை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே விளக்கம்…

Read More

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.இதனால் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை இந்த ஆண்டு மே மாதம் வரை ரத்து செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், பிசிசிஐ முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பைகான போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்கள். அப்போது கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் பயோ பபுள் சூழலுக்குள் வைத்து பிறகு போட்டியை நடத்தி முடித்தார்கள் . தற்போது பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லி,மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது . இதனால் மாநிலங்களுக்கு இடையே நடத்தப்படும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் இந்த ஆண்டு மே மாதம் இறுதிவரை ரத்து செய்ய வேண்டும் என்று பிசிசிஐ செயலாளர்…

Read More

இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளார்கள். உலகத்திலேயே மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருது சினிமா துறையில் வழங்கப்படுகிறது. தற்போது 93வது அக்கடமி அவார்ட்ஸ் வழங்கும் விழாவில் நாமினிகளை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவர் நிக் ஜோனசும் அறிவிக்க உள்ளார்கள். பொதுவாக பிப்ரவரி மாதம் நடக்கும் இந்த அகடமி விருது நிகழ்ச்சி கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் 25 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுயுள்ளது. இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் கொரோனா காரணமாக குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இருப்பினும் நேரடியாக சமூக ஊடகங்களின் மூலமாக இந்நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா சோப்ரா 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்டார் , இந்த ஆண்டு பிரியங்கா சோப்ரா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின்…

Read More

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சியின் தலைவர் அர்ஜூனமூர்த்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடபோவதில்லை என்று அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்த போது ரஜினிகாந்தின் நண்பர் அர்ஜூனமூர்த்தி பாஜகவில் இருந்து விலகி ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பிறகு ரஜினிகாந்த் அரசியலுக்கு குட் பை சொல்லிவிட்டார். இதனால் அர்ஜூனமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அக்கட்சியின் சின்னமாக ரோபோவை அறிவித்திருந்தார். மேலும் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்து உள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்க்காவும் , தமிழ் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்வதற்கும், ஒரு முற்போக்கான மற்றும் நேர்மையான அரசியல் கட்சியின் வலுவான தேவையும் தான், ஒரு புதிய அரசியல் கட்சியான நமது…

Read More

அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது, மேலும் அனைத்து வங்கி ஊழியர்களின் நலன்களும் கவனிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளார். அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார். மார்ச் 16ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று கூறினார். மேலும் வங்கிகள் தனியார் மயமாக்குவது என்ற முடிவு திட்டமிட்ட ஒன்று தான் என்றும், எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். தனியார் வசம் தரப்படும் வங்கிகளைப் பொறுத்தவரையில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் நலனும் காக்கப்படும் என்றும் எந்தச் சூழலிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி மத்திய அரசு…

Read More

அஜித்தின் ’வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதியை இன்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் போனி கபூருக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து வருகிறார்கள். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு போனி கபூர், அஜித்,ஹெச்.வினோத் கூட்டணி மறுபடியும் ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளார்கள். அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், தயாரிப்பாளர் போனிகபூர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் 50-வது பிறந்தநாள் மே 1 ஆம் தேதி ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் மிகுந்து இருக்கிறார்கள். நேர் கொண்ட பார்வை படம் இயக்குநர் வினோத்துக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது.…

Read More

பருவக்கால மாற்றங்கள் உருவாகும் போது உடல் ஆரோக்கியமும் மாறுப்படும். குறிப்பாக வளரும் குழந்தைகளுக்கு கோடைக்கால நோய்கள் தாக்கம் அதிகம் இருக்கும். நாம் தற்போது கோடையை எதிர்நோக்கி கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் உடல் ஆரோக்கியத்திற்காக வளரும் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மீது நாம் தனிகவனம் செலுத்த வேண்டும். பொதுவாக கோடைகால நோய்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் சில நோய்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளலாம்​. கொப்புளங்கள் வெப்ப கொப்புளங்கள் அதிக கஷ்டங்களை தரக்கூடியது. இந்த கொப்புளங்கள் பரவக்கூடியது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு தான் உடலில் கொப்புளங்கள் வரக்கூடும். குறிப்பாக குழந்தைகள் மண்ணில் விளையாடும் போது அவர்கள் வியர்வையோடு மண்ணும் சருமத்தில் ஒட்டிகொள்ளும். இதனால் கொப்புளங்கள் உருவாகிறது. உடலின் உள்வெப்பமும், வெளியில் படும் வெப்பமும் கொதித்து கொப்புளங்களாக உருவாகும். இதை சரியாக கவனிக்காவிட்டால் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இது மிகப்பெரிய கஷ்டங்களை தரக்கூடியது. சின்னம்மை வெயில்காலங்களில் குழந்தைகளுக்கு வரக்கூடிய பொதுவான நோய்களில் சின்னம்மையும் உண்டு. இது உடல்…

Read More