Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

2000 rupees

நாடாளுமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆயிரம் ரூபாய் நோட் அச்சடிக்கவில்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 2018 மார்ச் 30ம் தேதி நிலவரப்படி நம் நாட்டில் 336.2 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்தது. மேலும் 2021 பிப்ரவரி 26ஆம் தேதி நிலவரப்படி இது 249.9 கோடியாக குறைந்துள்ளது. மத்திய அரசு, குறிப்பிட்ட மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது பற்றி ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்கும். 2016-17ம் நிதியாண்டில் (2016 ஏப்ரல்- 2017 மார்ச்) 354.29 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது. மேலும் 11.15 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டுமே…

Read More

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை இப்போதைக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டு வர வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மக்களவையில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், சமையல் கியாஸ் சிலிண்டர்,இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை. பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் எப்போது கொண்டுவரலாம் என்ற தேதியை சட்டப்படி ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் பரிந்துரைக்க முடியும். ஆனால், இப்போதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரைக்கவில்லை என்று அதில் தெரிவித்து இருந்தார். மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் ”…

Read More

யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் மண்டேலா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக யோகி பாபு இருக்கிறார். யோகி பாபு நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் 30 படங்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், யோகி பாபு நடிப்பில் 9 படங்கள் மட்டுமே வெளியாகின. அண்மையில், யோகி பாபு நடிப்பில் டிரிப் என்ற படம் மட்டுமே வெளியாகி இருக்கிறது. தற்போது யோகி பாபு கிட்டத்தட்ட 20 படங்கள் வரை கைவசம் வைத்திருக்கிறார். இதில், மண்டேலா படமும் உள்ளது. புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மண்டேலா படத்தை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர் பாலாஜி மோகன் தயாரித்து உள்ளார். தற்போது வெளியான மண்டேலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Read More

இந்தியாவில் ரியல்மி 8 சீரிஸ் ரக ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 24 ஆம் தேதியன்று ரியல்மி ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மியின் தலைமை செயல் அதிகாரி மாதவ் ஷெத் இதனை தெரிவித்துள்ளார். இருப்பினும் எந்த மாதிரியான மாடல் ரியல்மி 8 சீரிஸில் வெளியாக உள்ளது என்பது மறைமுகமாகவே உள்ளது. அதே நேரத்தில், 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா மார்ச் 24 அன்று வெளியாகவுள்ள போனில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். யூடியூபில் இது தொடர்பான வீடியோவை ரியல்மி நிறுவனம் வெளிட்டுயுள்ளது.இந்நிறுவனம் ரியல்மி 8 மற்றும் 8 புரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் 8 புரோ போனில் மட்டும் 108 மெகாபிக்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக டீஸ் செய்யப்பட்ட 8 மாடல் ஸ்மார்ட் போனில் 64 மெகாபிக்சல் தான் கேமரா என்பதை ரியல்மி உறுதி செய்திருந்தது.

Read More

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3000 ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டிய முதல் வீரராக விளங்குகிறார். தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், அஹமதாபாத்தில் நேற்று இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ், இஷான் கிஷண் ஆகியோர் புதுமுக வீரர்களாக களமிறங்கினார்கள். இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். மேலும் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகுர் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தார்கள். தொடக்க வீரர் இஷான் கிஷன், கேப்டன் விராட் கோலி ஆகியோரின் அதிரடி…

Read More

தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் சூழலில் தமிழக அரசியல் களத்தின் முக்கிய தலைவர்கள் இன்று பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்க உள்ளது. இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்து, பரப்புரை பயணத்தை தொடங்க உள்ளார்கள். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் பழனிசாமி எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணி அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். அதனை தொடர்ந்து, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 3 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.அதன் தொடர்ச்சியாக, அதே தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். கோவில்பட்டியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சீமான் திருவொற்றியூர்…

Read More

விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் 60’ இதைப்பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் நடிக்கவுள்ளார். மேலும் வாணிபோஜன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்ரன் ஏற்கனவே ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்று இருந்த நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்து. இந்நிலையில் பாபி சிம்ஹா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லா படங்களிலும் பாபி சிம்ஹா தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.…

Read More

மத்திய அரசு தற்போது ரேஷன் பயனாளிகளுக்காக புதிய மொபைல் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆப்பின் பெயர் ‘மேரா ரேஷன் ஆப் ‘என்பதாகும். தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ரேஷன்பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை தேசம் முழுவதும் வழங்குவதே ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் நோக்கமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் , புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் ‘ உதவுகிறது. தற்போது ‘மேரா ரேஷன் ஆப்’ ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். கூடிய விரைவில் 14 மொழிகளும் பல்வேறு வசதிகளுடன் அறிமுகப்படுத்த உள்ளார்கள். ‘மேரா ரேஷன் ஆப்’பின் சிறப்பு அம்சங்கள்: அருகில் உள்ள நியாய விலைக் கடை எங்கு இருக்கு என்பதை தெரிந்துகொள்ளலாம் ரேஷன் கார்டுகளுக்கு உணவு தானியங்கள் எவ்வளவு…

Read More

தேனீகள், குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்ற சிறிய பூச்சிகள் நம்மை கடித்தால் கூட நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நச்சுக்கள் மனிதர்களின் சருமத்தில் அழற்சியை உண்டாக்கும். அதனால் இந்த மாதிரியான பூச்சிக் கடிக்கு ஆரம்ப வைத்தியமாக சில வீட்டு வைத்திய முறைகள் பின்பற்றுவது மிகவும் நல்லது. வீட்டு வைத்திய முறைகள் நம் சரும அழற்சியை குறைக்க உதவும். பொதுவாக சின்னச் சின்ன பூச்சிக் கடியை நாம் சாதாரணமாக விட்டு விடுகிறோம். ஆனால் அதுவே பின்னாளில் நமக்கு எரிச்சல், சரும அழற்சி போன்றவற்றை உருவாக்க கூடும். ஒரு சில சிறிய பூச்சிகள் கூட நிறைய நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். எனவே பூச்சிக் கடியை நீங்கள் சாதாரணமாக எடுத்து கொள்ளவேண்டாம். கொசு, தேனீ, குளவிகள் மற்றும் சிலந்திகள் போன்றவை நாம் வாழும் இடங்களைச் சுற்றி அதிகமாகவே இருக்கும். இந்த பூச்சிகள் நம்மை அதிகமாக கடிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சிறு பூச்சிகள் மழைக்காலத்திலும் வெயில்…

Read More

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி இன்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், நாளை, நாளை மறுநாளும் விடுமுறை நாட்கள் அதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து நாளை, நாளை மறுநாள் (சனி, ஞாயிறு) விடுமுறை நாட்களாகும், அதனால் இந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. இதை அடுத்து வரும் 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. அரசியல் கட்சியினர் மொத்தம் 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இந்த நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். தமிழக தலைமை…

Read More

அகமதாபாத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தொடங்கவுள்ள டி20 போட்டியில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகரித்துள்ளது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி மூன்றில் ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இன்று 5 போட்டிகள் கொண்ட 20வது ஓவர் தொடர் தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 20வது ஓவர் தொடர் கொண்ட ஐந்து போட்டிகளும் நடைபெறவுள்ளது. இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கயுள்ளது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், ராகுல், இஷான் கிஷன், திவேதியா ஆகிய புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய…

Read More

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று உறுதியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி(மமக) இரு தொகுதிகளிலும் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் திமுக கூட்டணியில் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி, தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிடுவதென இரு கட்சிகளும் ஆலோசனை செய்து முடிவு செய்துள்ளது. தொகுதி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டுக்கொண்டனர். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, ”தலைமை நிர்வாக குழு மிக விரைவில் கூடி வேட்பாளர்கள் யார்…

Read More

நம்மில் பலருக்கு தலைவலியினால் சங்கடமான மற்றும் கவனத்தை சிதறடிக்கும் வலி தெரிந்திருக்கும். தலைவலியில் வெவ்வேறு வகையான தலைவலி உள்ளது. இதைப்பற்றி பார்ப்போம். உலக சுகாதார அமைப்பு, அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு முறையாவது தலைவலி ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டுகிறது. தலையின் எந்தப் பகுதியில் வலி என்று நம்மால் வரையறுக்க முடியும் என்றாலும், இந்த வலியின் காரணம், காலம் மற்றும் தீவிரம் தலைவலியின் வகையைப் பொறுத்து மாறுபடும். சில நேரங்களில் தலைவலிவுடன் பிடிப்பான கழுத்து,சொறி, தலைவலி,வாந்தி,குழப்பம்,தெளிவற்ற பேச்சு,100.4 ° F (38 ° C) அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் ஆகியவை தோன்றினால் இவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை.மேலும் இவர்கள் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். பத்து வகையான தலைவலிகளை பார்ப்போம்: 1.பதற்றம் தலைவலி நீங்கள் பதற்றமாக இருக்கும்போது, உங்கள் தலை முழுவதும் மந்தமாக, வலிக்கும் உணர்வை நீங்கள் உணர்வீர்கள். இது போன்ற உணர்வை பதற்றம் தலைவலி என்பார்கள். உங்கள் கழுத்து, நெற்றி,உச்சந்தலையில்…

Read More

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டன. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணிக்கப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு மாததிற்கு  இரு முறை பெட்ரோல் மற்றும்  டீசல் விலை நிர்ணயம் செய்யப்ப்பட்டது. இந்த விலை நிர்ணயம் முறை சுமார் 15 வருடமாக அமலில் இருந்தது. மத்திய அரசு சர்வதேச எண்ணெய் நிறுவனங்களிடம் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை  ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி  இருக்கிறார்கள். கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிகபடியான ஏற்றம் உண்டாகுவதை  காண முடிந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த…

Read More