தனுஷ் கட்டும் புதிய வீட்டின் பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். தனுஷ் நடித்த கர்ணன் படப்பிடிப்பு முடிந்தநிலையில், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகன் தனுஷ்யும் கதாநாயகி மாளவிகா மோகனனும் நடிப்பதாகவும், முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அந்தப்படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொள்ள நேற்று இரவு அமெரிக்கா செல்ல இருந்ததாகச் சொல்லப்பட்டது. அவெஞ்சர்ஸின் ஃபினிடி வார், எண்ட்கேம் உள்ளிட்டப் படங்களை இயக்கியதும் ரூஸோ சகோதரர்கள் தான். இந்நிலையில் தனுஷ் இன்று போயஸ்கார்டனில் தான் கட்டும் புதிய வீட்டுக்கான பூமி பூஜையில் ஈடுபட்டுள்ளார். அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். தனுஷ் புதிய வீடு பூமி…
Author: gpkumar
மியான்மரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. ” யாங்கோன் ” என்ற நகரத்தில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இப்பொழுதும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறதாம் . 1962 முதல் 2011 வரை என சுமார் 49 ஆண்டுகளுக்கு மியான்மரை ராணுவம்தான் ஆட்சி செய்தது. ராணுவத்தின் ஆட்சியில் உரிமைகளை இழந்து, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு , மக்கள் 2015-ஆம் ஆண்டு முதல் சுவாசிக்க தொடங்கிய சுதந்திர காற்று இப்பொழுது மீண்டும் பறிக்கப்பட்டுவிட்டது என்று மியான்மரின் யாங்கோன் நகரை சேர்ந்த பர்மிய திரைப்பட இயக்குநரும், தமிழருமான சுந்தர்ராஜ் கூறுகிறார் . தமிழர்களின் பிரச்சனைகள் மியான்மர் வாழ் தமிழர்களான இயக்குநர் சுந்தர்ராஜ் மற்றும் வழக்குரைஞரான அகத்தியன் ஆகிய இருவரும் வெளிப்படுத்திய பிரச்சனைகள். பல்வேறு காரணங்களுக்காக தமிழர்கள் பல…
நோயின்றி வாழும் மனிதர்கள் தான் பணக்காரர்களாக கருதப்படுகிறார்கள். எவ்வளவு வசதியாக இருந்தாலும் நாம் நோயில்லாமல் வாழ்ந்தால் தான் நல்லது. இதற்கு இயற்கையான மருத்துவ முறையில் என்ன செய்யலாம் என்று சிலவற்றைப் பார்ப்போம் . கொத்தமல்லி விதையை (தனியா) தண்ணீரில் கொதிக்கவைத்து ஆறியபின் அந்த தண்ணீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி இரவில் ஒரு டம்ப்ளர் குடித்து வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். வெங்காயத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டு வந்தால் பித்தநோய்கள் தீரும். தயிரை உடம்பில் தேய்த்தது குளித்து வந்தால் வேர்க்குரு வராது. வேர்க்குரு வந்தாலும் குணமாகிவிடும்.உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் இதய நோய் குணமாகும். மாதவிடாய்…
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” படத்தில் நடிகர் கதிரிக்கு அப்பாவாக நடித்த தங்கராசுவின் நிலைமையை பார்ப்போம். நாட்டுப்புற கலைஞரான தங்கராசுவின் திறமையை அறிந்த மாரி செல்வராஜ், இவருடைய முதல் படத்திலே தங்கராசுக்கு நடிக்க வாய்ப்பளித்தார். இந்த படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் பெரும் வெற்றியை தேடித்தந்தது,இருந்தாலும் தங்கராசுவின் நிலைமை மாறவில்லை. இவர் வசிக்க ஒரு நல்ல வீடு கூட இல்லாத நிலைமையில், அவதிபடுக்கிறார் . இதை அறிந்த தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்க்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். தங்கராசு சுமார் 40 ஆண்டுகளாக பெண்வேடம் அணிந்து நாட்டுப்புற கலைஞராக நடித்தவர். இவர் தன் மனைவி பேச்சிக்கனியுடன் மிகவும் சேதமடைந்த கூரை வீட்டில் வசித்து வருகிறார்.இந்த வீடு நெல்லை வண்ணாரப்பேட்டையில் இளங்கோ நகரில் உள்ளது. இவருடைய வீட்டுக்கு கதவு, மின்விளக்கு எதுயும் இல்லாதால் டீச்சர் டிரைனிங் முடித்த தனது மகளை…
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் 2வது நாளாக மக்கள் பெரும்திரலாக கூடி போராட்டம் நடத்திவருகின்றார்கள். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 642 இடங்களில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட மிக அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் பெரிய அளவில் ஆளும் ஜனநாயக கட்சியரினால் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது…
“சூது கவ்வும்” படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அசோக் செல்வனின் தீனி படத்தின் ட்டெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இவர் நடித்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மக்களுக்கிடையே பெரும்வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ‘தீனி’ திரைபட ட்டெய்லர் வெளியாகியுள்ளது . இப்படத்தில் அசோக் செல்வனுடன் நடிகைகள் ரீத்து வர்மா, நித்யா மேனன்,நாசர் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை அனி.ஐ.வி.சசி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இவர் மலையாளத்தில் ‘ பிரேமம்’ படத்திற்கும் இசையமைத்துள்ளார். திவாகர் மணி ஒளிப்பதிவில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (05.02.2021) வெளியாகியுள்ளது.இப்படத்தின் ட்ரெய்லரை தனுஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காமெடியும் , ஆழமான காதலும் இருப்பதாக கூறப்படுகிறது .அசோக் செல்வன் உடல் பருமனான, வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ,சமையலை ஒட்டிய காட்சிகளிலும் பின்னிப்பிணைந்து இருக்கிறார் என எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழக அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்குக்கு பிறகு ஜனவரி 19-ம் தேதியன்று10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பொதுத் தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன.இதனை தொடர்ந்து மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகு பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கிருமிநாசினியால் கைகளைச் சுத்தம் செய்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வகுப்பறையில் தனிமனித இடைவெளி,முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் பள்ளி மாணவர்கள் பின்பற்றி வருகின்றனர். வகுப்பறையில் ஒரு மேஜைக்கு இருவர் என்ற விதத்தில் 20 அல்லது 25 பேர் மட்டுமே உட்கார அனுமதிக்கப்பட்டுகிறார்கள். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும் என்று…
சிவகார்த்திகேயனின் ” டாக்டர் ” திரைபடத்தின் பணிகள் முடிவடைந்து வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் தயாரிக்கபட்டுள்ளது. அடுத்து சிவகார்த்திகேயன் ” டான் ” படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திரைபடக்குழு “டான்” படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயரை வெளியிட்டுயுள்ளது. டாக்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ரியங்கா அருள் மோகன், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைந்து நடிக்கிறார். லைகா தயாரிக்கும் ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநராக சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என்று படக்குழு தெரிவித்துள்ளது. முதல்முறையாக இயக்குநர் மற்றும் நடிகரும்மான எஸ்.ஜே.சூர்யா சிவகார்த்திகேயன் உடன் இணைந்து “டான்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டரைத் தொடர்ந்து டானுக்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சூரி – சிவகார்த்திகேயன் உடன் நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். ‘டான்’ படத்தில் தான்…
V House Productions present the official teaser of #Maanaadu (மாநாடு) #Rewind #रिवाइंड #రీవైన్డ్ #ರಿವೈoಡ್ #റിവൈൻഡ് #மாநாடு Cast: STR, Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, SJ Suryah, Premgi Amaren, Karunakaran Written & Directed – Venkat Prabhu Producer – Suresh Kamatchi Music Director – Yuvan Shankar Raja Director Of Photography – Richard M Nathan Editor – Praveen KL Art Director – Umesh J Kumar Action Director – Stunt Silva Costume Designer – Vasuki Bhaskar Lyrics – Madhan Karky Choreography – Raju Sundaram Audiography – T. Udayakumar Production Controller – Subramanian Narayanan VFX – Harihara Suthan Promo Stills – Sudharshan Stills – Mohan PRO…
ஏலே – முத்துக்குட்டி சேட்டை வீடியோ | சமுத்திரகனி | கபர் வாசுகி | ஹலிதா ஷமீம்
சுல்தான் – அதிகாரப்பூர்வ டீஸர் (தமிழ்) | கார்த்தி, ரஷ்மிகா | விவேக் மெர்வின் | பக்கியராஜ் கண்ணன் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பெருமையுடன் கார்த்தியின் # சுல்தானின் அதிகாரப்பூர்வ டீஸரை அளிக்கிறது, இது பக்கியராஜ் கண்ணன் இயக்கியது. # கார்த்தி, # ரஷ்மிகமண்டன்னா, நெப்போலியன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் இயக்கியவர்: பக்கியராஜ் கண்ணன் தயாரிப்பு வீடு: ட்ரீம் வாரியர் படங்கள் தயாரிப்பாளர்கள்: எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு நிர்வாக தயாரிப்பாளர்: அரவேந்திரஜ் பாஸ்கரன் DOP: சத்யன் சூரியன் இசை: விவேக் மெர்வின் ஆசிரியர்: ரூபன் தயாரிப்பு வடிவமைப்பாளர்: ராஜீவன் கலை: ஜெயச்சந்திரன் ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன் உரையாடல்கள்: ஹரிஹரசுதன் தங்கவேலு ஆடை வடிவமைப்பாளர்: உத்தாரா மேனன், பல்லவி சிங் பாடல்: விவேகா, தனிகோடி நடனம்: பிருந்தா, ஷோபி, தினேஷ், கல்யாண் புரோ: ஜான்சன்
2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு : நகர்புற தூய்மை திட்டத்துக்கு 1.41 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு. சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு ரூ.64,180 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு முயற்சி. கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும். மத்திய பட்ஜெட்டில் கொரோனா தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.. கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கும்,கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி. ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், கொரோனாவால் மிகப்பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்திருக்கும். உலகில், கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று இந்தியா. கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத நோய் தொற்று காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக…
📺 Puthiyathalaimurai News Live – நேரடியாக பார்க்க எங்கே? “Puthiyathalaimurai News Live” பார்க்க விரும்புகிறீர்களா? 🎥 உங்களுக்காக நேரடி இணைப்பு மற்றும் புதிய தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம். 👉 தற்போது புது தலைமுறை நியூஸ் நேரலை (Live Streaming) அதிகாரப்பூர்வ YouTube Channel மற்றும் Website மூலம் 24/7 இலவசமாக பார்க்க முடியும். 📰 புது தலைமுறை நியூஸ் – ஒரு அறிமுகம் புது தலைமுறை (Puthiyathalaimurai) என்பது தமிழ் மக்களுக்கு நம்பிக்கைக்குரிய 24×7 செய்தி சேனல் ஆகும்.2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சேனல், இன்று நேர்மையான செய்திகளுக்கான அடையாளமாக மாறியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, சினிமா என எல்லா துறைகளிலும் உண்மை செய்திகள், உடனடி அப்டேட்ஸ் வழங்குவதால் மக்களின் மனதில் தனித்த இடம் பெற்றுள்ளது. 🎥 Puthiyathalaimurai News Live பார்க்க வழிகள் 1. அதிகாரப்பூர்வ YouTube சேனல் புது தலைமுறை நியூஸ்…
மாஸ்டர் – குட்டி ஸ்டோரி வீடியோ பாடல் | தலபதி விஜய் | அனிருத் ரவிச்சந்தர் | லோகேஷ் கனகராஜ்
