ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரை விற்பனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். பேட்டரி கார் மூலம் ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

ஹூண்டாய் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஒருகோடியாவது காரில் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டு கையெழுத்திட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அவர் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் ஹூண்டாய் நிறுவனம் அதிக உற்பத்தி செய்து உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தியை கலைஞ்சர் கருணாநிதி துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்காசியாவிலேயே உற்பத்தியில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்க்காக தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டும் என்றும் கூறினார்.

See also  புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது.. அரசு திடீர் அறிவிப்பு..!