ஹீமோகுளோபின் என்றால் என்ன:-

  • உடலில் இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள முக்கியமான புரதமே ஹீமோகுளோபின் என்று அழைக்கப்படுகிறது. இது தான் உடலில் செல்களுக்கும் திசுக்களுக்கும் ஆக்ஸிஜன் எடுத்துச்செல்ல உதவுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு எடுத்து செல்லும் பொறுப்பை இந்த புரதம் ஏற்கிறது. இவை சீரான அளவில் இருக்கும் வரை உடல் ஆரோக்கியமானது பெருமளவு குறையில்லாமல் இருக்கும்.
  • ஹீமோகுளோபின் அளவு ஆண்களுக்கு 14- 18 மி.கிராம் அளவிலும், பெண்களுக்கு 12- 16 மி.கிராம் அளவிலும் வயது வந்த பெண்களுக்கு 12-16 மி.கிராம் அளவிலும் இவை இருக்க வேண்டும்.

ஹீமோகுளோபின் குறைய காரணம்:-

  1. இந்த குறைபாட்டை அதிகம் சந்திப்பது பெருமளவு பெண்கள் தான். காரணம் மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு சந்திப்பதால் இயல்பாகவே இக்குறைபாடு இருக்கும் என்றாலும் இதில் ஈடு செய்யும் வகையில் உணவு முறை இருக்க வேண்டும். அதே நேரம் அதிகப்படியான கருச்சிதைவு, உதிரப்போக்கு கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் இக்குறைபாடு உண்டாகும்.
  2. உதிரப்போக்கு நிற்கும் மெனோபாஸ் காலங்களிலும் உதிரபோக்கு அதிகரிக்கும் போது இக்குறைபாடு நேரிடக்கூடும். சீரான உணவை எடுக்காத போதும், உணவில் இரும்புச்சத்து குறைவாக இருக்கும் போதும், வைட்டமின் பி12 குறையும் போதும் இக்குறைபாடு நேரிடக்கூடும்.
  3. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறையும் போது ஹீமோகுளோபின் பற்றாக்குறை உண்டாகிறது. காயம் காரணமாக உண்டாகும் ரத்த இழப்பு, அதிகமுறை குறுகிய இடைவேளையில் ரத்ததானம் செய்தல், எலும்பு மஜ்ஜை நோய், (அஃப்ளாஸ்டி அனீமியா- புற்றுநோய்) சிறுநீரகம், மூல நோயால் ரத்த இழப்பு, மலம் கழிக்கும் போது வெளியேறூம் ரத்தம், அல்சர், நீரிழிவு, வைட்டமின் சி பற்றாக்குறை என ஒவ்வொன்றும் ஹீமோகுளோபின் குறைபாட்டை மேலும் அதிகரிக்க செய்துவிடக்கூடும். ரத்த சோகை வரையான பிரச்சனையை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு.

​ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கான அறிகுறிகள்:-

  • ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கான அறிகுறிகளை விரிவாக கொடுத்திருக்கிறோம். சுருக்கமாக பார்க்கலாம் எப்போதும் உடல் சோர்வு உணர்தல், மயக்கமான நிலையை கொண்டிருத்தல், தலைவலி, பசியின்மை, கை, கால்களில் விடாத வலி, நடப்பதிலும் படிக்கட்டு ஏறுவதிலும் சிரமம், இதயம் வேகமாகவோ அல்லது மிகபொறுமையாகவோ என ஒழுங்கற்று துடிப்பது,சருமத்தில் அதிகப்படியான வெளிர்வு தன்மை, கண்களும் வெளிறி போவது, பல் ஈறுகள் தசைகளில் பலவீனம், எந்த வேலையிலும் கவனமின்மை என அறிகுறிகள் வெளிப்பட தோன்றும்.
  • பெரும்பாலும் இந்த அறிகுறிகள் தோன்றும் போது அவை காய்ச்சலுக்கான அறிகுறி என்று நினைத்துவிடுவது உண்டு. ஆனால் தொடர்ந்து இந்த அறிகுறிகள் இருந்து மெதுவாக தீவிரமாகும் போது தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது
See also  தயிர் உடன் சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

​தவிர்க்க முடியுமா:-

  • உணவு முறையில் சீராக பின்பற்றினாலே இக்குறைபாடு நேராமல் பார்த்துகொள்ள முடியும். குறைபாடு அறிந்ததும் வாரம் மூன்று நாள்கள் வரை கீரை வகைகள் ,பீட்ரூட், பேரீச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை, அத்திப்பழம், அசைவம் சாப்பிடுபவர்கள் ஈரல், மண்ணீரல், முட்டை, எலும்பு சூப் , பழங்களில் கொய்யா, எலுமிச்சை, நெல்லி என மேற்குறிப்பிட்ட உணவு பொருளில் மூன்றையாவது தினசரி சேர்க்க வேண்டும். கூடவே மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளும் தொடர்ந்து எடுத்துகொண்டால் குறைபாடு நீங்கும்.
  • பெண் உறுப்பில் ரத்தக்கசிவு இருந்தால் அது இந்த புற்றுநோயின் தொடக்க அறிகுறியாகவும் இருக்கலாமாம்!
  • அன்றாட உணவில் இந்த வகை உணவுகளை அடிக்கடி சேர்த்துகொண்டாலே குறைபாடில்லாமல் தவிர்க்க முடியும்.