Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
149487 xhgyxxunac 1603286455

IPL-2021-RCB ஆர்சிபி மரண மாஸ் வெற்றி…தொடர்ந்து முதலிடம்!

  • ஐபிஎல் 14ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 38 ரன்கள் வித்தியாசத்தில் எதிர்பாராத வெற்றியைப்பெற்றுள்ளது. இந்நிலையில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்துவருகிறது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் இருவரும் ஆட்டத்தை ஆரபித்தனர்.
  • வருண் சக்ரவர்த்தி வீசிய சுழற்பந்தைத் தவறாக கணித்துகேப்டன் கோலி, 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டத்தை இழந்தார்.
  • அடுத்ததாக ராஜட் படிதரும் ஒரு ரன் சேர்த்து வருண் பந்தில் அவுட் ஆனார். இதனால், பெங்களூர் அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி ஏற்பட்டது.
  • தொடர்ந்து படிக்கல், கிளென் மேக்ஸ்வெல் இருவரும் கைகோர்த்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். கணிசமாக விளையாடிய படிக்கல் 25 (28) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
  • அடுத்தகட்டமாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சை டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல் இருவரும் சேர்த்து தெறிக்கவிட்டனர்.
  • மேக்ஸ்வெல் மூன்று சிக்ஸர்கள் உட்பட 78 (49) ரன்கள் குவித்தார். பின்பு கடைசிவரை களத்தில் இருந்த டிவிலியர்ஸ் 76 (34) ரன்கள் எடுத்து பந்துகளை பறக்கவிட்டார்.
  • குறிப்பாக, கடைசி மூன்று ஓவர்களில் டிவிலியர்ஸ், கைல் ஜேமிசன் 11 (4) ரன்கள் எடுத்து பேட்டிங்கை மிரட்டலாக கையாண்டதால், ஆர்சிபி அணி 18 பந்துகளில் 56 ரன்கள் குவித்தது.948156 rcb ipl 2021
  • கடைசியில், 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 204/4 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு எட்டமுடியாத இலக்காக கொடுத்தது.
  • கொல்கத்தா அணியில் துவக்க வீரர்களாக நிதிஷ் ராணா, ஷுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். கில் தரமாக விளையாடி 9 பந்துகளில் 21 ரன்ளை எடுத்து ஆட்டத்தை கைவிட்டனர்.
  • அடுத்து, நிதிஷ் ராணாவும் (18) ஆட்டத்தை இழந்ததால், போட்டி பெங்களூர் அணிக்கு சாதகமாக திரும்பியது. இதன் காரணமாக, பந்துவீச்சாளர்கள் சரியான முறையில் செயல்பட்டனர்.
  • இதனால், கொல்கத்தா அணியில் ராகுல் திரிபாதி 25 (20), இயான் மோர்கன் 29 (23), தினேஷ் கார்த்திக் 2 (5) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டத்தை கைவிட்டனர்.
  • அடுத்து ஷகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் கைகோர்த்தனர். 25 பந்துகளை எதிர்கொண்டு ஷகிப் 26 ரன்கள் மட்டும் அடித்தார். இருப்பினும், மறுமுனையில் ரஸ்ஸல் ரன்களை மழை போல் பொழிந்தார்.
  •  இதனால், கொல்கத்தாவிற்கு வெற்றி அடைய சிறிதளவு வாய்ப்பு இருந்தது. கடைசியில் ரஸ்ஸலும் 31 (20) ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதனால், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 166/8 ரன்கள் மட்டும் சேர்த்து 38 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச்சந்தித்தது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் கைல் ஜேமிசன் மூன்று விக்கெட்களையும், ஹர்சல் படேல், யுஷ்வேந்திர சாஹல் இருவரும் இரண்டு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினர்.