ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அலுவலகங்களில் காலியாக உள்ள மேலாளர், உதவி கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான கல்விதகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர் : AI Airport Service Limited

மொத்த காலிபணியிடங்கள்: 15

பணியின் பெயர் : Manager-Finance – 04
மாதச் சம்பளம்: ரூ.50,000
பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா
கல்வித்தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Cost Accountant -இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் : Officer-Accounts – 07

மாதச் சம்பளம்: ரூ.32,200
பணியிடம்: சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை
கல்வித் தகுதி: Inter Chartered Accountant, Inter Cost and Management Accountancy அல்லது MBA (Finance) போன்ற ஏதாவதொன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் : Assistant Accounts – 04

மாதச் சம்பளம்: ரூ.21,300
பணியிடம்: தில்லி, மும்பை
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திரையிடல்(Screening), நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.06.2021

மேலும் முழுவிவரங்களை அறிய http://www.airindia.in அல்லது http://www.airindia.in/writereaddata/Portal/career/937_1_AIASL-ADVT.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

See also  AC பஸ் சேவைகளை தொடங்க தமிழக அரசு அனுமதி