நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நண்பன், விண்ணைத்தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மனோஜ் பரமஹம்சா தனது டிவிட்டர் பக்கத்தில் நண்பன் படத்திற்கு பிறகு தளபதி விஜய்வுடன் இன்னொரு பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தளபதி விஜய் ஒரு அற்புதமான மனிதர். ‘தளபதி 65’ இந்தியாவே விரும்பும் ஏன் முழுதேசமும்  நேசிக்கு ஒரு படமாக இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

See also  ரஜினியின் 'அண்ணாத்த' படம் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Categorized in: