• பொன்னியின் செல்வன் எனும் நாவல் , எழுத்தாளர் கல்கியின் மாஸ்டர் பீஸ் நாவலாகவும் அனைவரும் விரும்பி படித்துவந்த நாவலாக இருக்கிறது. தற்போது பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படம் தயாராகி வருகிறது.
  • இந்த படத்தின் திரைக்கதை, வசனத்தை ஜெயமோகன் எழுத, கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
  • ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கிவருகிறார்.
  • மிக பிரமாண்டமாக இந்தத் திரைப்படம் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு தயாராகி வருகிறது.
  • இந்த படத்தின் சில காட்சிகளை மத்திய பிரதேசத்தில் படமாக்க திட்டமிட்டிருந்தவர்கள், கோவிட் வேகமாக பரவி வருவதால் அந்தத் திட்டத்தை கைவிட்டனர்.
  • சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
  • இந்நிலையால், பொன்னியின் செல்வன் படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றிருப்பதாகவும், 2022-ல் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் என்று சுல்தான் புரமோஷனில் கலந்து கொண்ட கார்த்தி கூறியுள்ளார்.
  • இதையடுத்து, மணிரத்னம் இயக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’, வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியபடுவதிற்க்கில்லை. தற்போது கார்த்திக் வெளியிட்டு உள்ள இந்த தகவலானது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
See also  1000 படங்களின் ஐஎம்டிபி தரவரிசையில் சூரரை போற்று 3 ஆம் இடம்

Categorized in: