- காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி கொரோனா அதிகமாக பரவிவரும் 12 மாநில முதலமைச்சர்கைகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
- கொரோனாவானது இந்தியாவில் இரண்டாவது கட்டமாக பரவிருக்கின்ற காரணத்தினால் தற்போது கொரோனா பாதிப்பு தினசரி ஒரு லட்சத்தைக் கடந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.
- அந்த வகையில் நேற்றுமட்டும் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.
- டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- மேலும் இதனால் இரவு நேர ஊரடங்காக டெல்லி, பஞ்சாப், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்திலும் பாதிப்பு தினசரி 5 ஆயிரத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையால், இதனை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- இதனை தொடர்ந்து முழு ஊரடங்கு போடும் நிலையமை குறித்து மோடி இன்று காணொலி காட்சி மூலம் பனிரெண்டு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.
gpkumar
இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

