Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிரேம், லீலாவதி, ராஜேஸ்வரி, செல்வராஜ், சிராஜ் உள்ளிட்ட 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்த 4 பேரின் உயிரிழப்புக்கு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறை தான் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக விசாரித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரமும் 7 பேரின் மரணத்திற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று விளக்கமளித்தார். உயிரிழந்தவர்கள் உடல் ரீதியான பிரச்சனை உள்ளவர்கள் என்றும், அதில் சிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் கூறினார். மேலும், பொது பிரிவில் சிகிச்சைபெற்று வந்த நோயாளிகளில் 3 பேர் திடீரென உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்த கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்தார் பின்னர், 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Advertisement

 

Previous Post
cardamom

தினமும் ஏலக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால் குழந்தை பாக்கியம் பெறலாம்...

Next Post
covid 19 in india

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்தை தாண்டியது.

Advertisement