577 குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கிய கொரோனா!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்று இரண்டாவது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில், இதுவரை கொரோனாவுக்கு 3.11 லட்சம் பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கொரோனாவால் உறவினர்களையும் பெற்றோர்களையும் இழந்து மக்கள் பரிதவிப்பது நெஞ்சை பதற வைக்கிறது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனாவால் 577 குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள் என்ற தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்க டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் முன்வந்து இருக்கிறது.

தற்போது அனைத்துக் குழந்தைகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவர்களது தேவைகள் ஆராயப்பட்டு, அவர்களது பாதுகாப்பும், நலமும் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 577 குழந்தைகள் குறித்த தகவல்கள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. இதுபோல் பதிவாகாத தகவல்கள் அதிகமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் தகவல் கிடைத்துள்ள குழந்தைகளின் நலனை மாவட்ட நிர்வாகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 Shares:
You May Also Like
பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
makkamishi song lyrics
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…