- Advertisement -
SHOP
Homeலைஃப்ஸ்டைல்தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?

- Advertisement -

கோடைக்காலத்தில் நாம் எல்லோரும் வெயில் தாக்கத்தைத் தணிக்க குளிர்ச்சி தரக்கூடிய உணவுப் பொருட்களைத் தேடுவோம். அப்படி நம் உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய உணவு பொருட்களில் ஒன்று தான் தயிர். இதை பலரும் மதிய உணவின் இறுதியில் விரும்பி சாப்பிடுவார்கள். தயிர் புத்துணர்ச்சி அளிப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களையும் அளிக்கிறது.

தயிரில் வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12 மற்றும் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம்,பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால், செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் சரும பிரச்சனைகளையும் உருவாக்கும். அதனால் தயிர்சாப்பிடும்போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அப்படி எந்தெந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பதை பார்ப்போம்.

மீன்:

மீன் மற்றும் தயிர் இரண்டிலும் அதிக புரதம் உள்ளது. ஒரே நேரத்தில் அதிக புரதச்சத்துக்களைக் கொண்ட இவ்விரண்டு உணவு பொருட்களையும் சாப்பிட கூடாது. நம் உடல் அதிகப்படியான புரதத்தை எடுத்துக் கொள்ளும் போது அஜீரண கோளாறு மற்றும் தோல் பிரச்சினைகள் உருவாகும். மீனை போல் முட்டையிலும் அதிக புரதம் உள்ளது. அதனால் முட்டையையும் தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

மாம்பழம்:

தயிர் சாப்பிட்ட பின் மாம்பழத்தை சாப்பிடுவது அல்லது இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவது நம் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும். மேலும், இந்த கலவையானது சிலருக்கு திடீர் உணவு எதிர்வினைகள் அல்லது தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

மாம்பழமும், வெங்காயமும் சூட்டை கிளப்பக் கூடியது. ஆகையால் இதனை தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாது.

பால்:

பாலிலிருந்து தான் தயிர் உருவாகிறது. இருப்பினும் தயிரையும், பாலையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு பால் மற்றும் தயிரை இணைப்பது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

பால் நொதித்தல் மூலம் தயிர் தயாரிக்கப்படுகிறது, ஏனெனில் புரதத்தின் இரு ஆதாரங்களும் கொழுப்புகளில் அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் இந்த இரு உணவுகளை சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

எண்ணெய் உணவு:

நெய் ஏற்றப்பட்ட ரொட்டிகள் அல்லது தயிரைக் கொண்ட சீஸி ஃப்ரைஸ் போன்ற எண்ணெய் உணவுகள் நம் உடலின் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் சில நேரங்களில் அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் நம்மை இது சோம்பேறியாக உணர வைக்கும். எனவே எண்ணெயில் வறுத்த உணவு , பொறித்த உணவு என்று எதையும் தயிருடன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

- Advertisement -
- Advertisement -
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -
Related News
- Advertisement -