Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய மருந்து

டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் சேர்ந்து கொரோனா சிகிச்சைக்கு உதவும் டிஆர்டிஓ வின் புதிய கொரோனா தடுப்பு மருந்தான 2-DG ஐ பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

டிஆர்டிஓ வின் இன்மாஸ் ஆய்வக விஞ்ஞானி கண்டுபிடித்த 2-DG தடுப்பு மருந்து பவுடர் வடிவில் உள்ளது. இந்த பவுடரை நீரில் கலந்து பருகினால் 2 அல்லது 3 தினங்களுக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்று சரி ஆகிவிடும் என்று ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டதாக டிஆர்டிஓ கூறியுள்ளது.

இந்த மருந்தின் மூலம் ஆக்ஸிஜன் தேவையும் குறைவதாக தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் டிஆர்டிஓ உடன் சேர்ந்து 2-DG மருந்தை தயாரிக்கிறது.

Advertisement

Previous Post
ADMK fund

தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி - அதிமுக அறிவிப்பு

Next Post
chennai high court

கீழமை நீதிமன்றங்களின் பணிகள் மறு உத்தரவு வரும் வரை இயங்காது - உயர்நீதிமன்றம் அறிவிப்பு

Advertisement