• மத்திய அரசின் சிறிய சேமிப்பு திட்டங்களில் தபால் அலுவலக மாத வருமான திட்டமும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.
  • இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் நமக்கு ஒரு நிலையான வருமானம் கிடைக்கும்.
  • இந்தத் திட்டத்தில் இணைய ஒரு தனிநபர் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கைத் திறந்து, அதில் மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
  • இந்த முதலீடுகளின் அடிப்படையில் நாம் பணம் சம்பாதிக்கலாம். இந்த திட்டதின் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • மேலும், நம்முடைய முதலீட்டிற்கு அரசு 100 சதவீதம் உத்தரவாதம் தருகிறது. இந்திய குடிமகன் அனைவரும் தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நமக்கு மாத வருமானம் கிடைக்கும்.
  • அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கணக்கைத் திறக்க முடியும். இதற்காக, நாம் ஐடி ஆதாரத்தை வழங்க வேண்டும்.
  • மேலும் வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வழங்கினால் போதும். இத்துடன் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோவும் வழங்க வேண்டும்.
  • இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஒரு தனிநபர் கணக்கில் ரூ .4.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதேநேரம் கூட்டுக்கணக்காக இருந்தால் அதில் அதிகபட்சமாக ரூ .9 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
  • இந்த கூட்டுக் கணக்கில் மூன்று பேர் சேர்ந்து கூட முதலீடு செய்யலாம். ஆனால் அதிகபட்ச முதலீட்டு ரூ .9 லட்சம் மட்டும் தான்.
  • இந்த ஆண்டு தபால் அலுவலக மாத வருமான திட்டத்தின் வட்டி விகிதத்தை அரசாங்கம் அதிகரித்துள்ளது. அதன்படி அரசாங்கம் தற்போது 6.6 சதவீதம் வரை வருடாந்திர வட்டியை நிர்ணயித்துள்ளது.
See also  விண்வெளி பயிற்சி நுழைவு தேர்வில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்..!