Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
குழந்தைகளை தாக்கும் மூன்றாம் அலை கொரோனா

குழந்தைகளை தாக்கும் மூன்றாம் அலை கொரோனா

ஹைலைட்ஸ்:

  • மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும்.
  • கொரோனா B.1.617 என்ற வகைதான் மிகவும் மோசமானதாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது.
  • கொரோனவை அழிக்க தடுப்பூசிகளை மேம்படுத்துவது அவசியம்.

மூன்றாவது அலை கொரோனா வைரஸ் பற்றி பொதுவான தகவல் மற்றும் சிக்கல்கள்:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவிடம் நேற்று கொரோனா மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக அரசு இப்போதிருந்தே அனைத்துக்கும் தயாராகி வருகிறது. ஏனெனில் அது எப்போது வரும் என்பது பற்றி கணிக்க முடியாது.

விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கொரோனா உருமாற்றங்கள், மேற்கொண்டு நிறைய மாற்றங்களை இந்தியாவில் பரவலாக ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வதாலேயே, கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வகைகளில், B.1.617 என்ற வகைதான் மிகவும் மோசமானதாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது.

அண்மையில் அதிகம் பேசப்பட்ட ஆந்திராவில் பரவிய உருமாறிய கொரோனா வகை, ஒருசில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றது.

கொரோனா முதல் அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய உருமாற்றம், நுரையீரலை அழிக்க 10 நாள்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது அலையில் போது ஏற்பட்ட கொரோனா, 5 – 7 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. இந்த இடைவெளி, மூன்றாவது அலையில் 2 – 3 நாள்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் பரவும் கொரோனா உருமாற்றம் பிற வகைகளை விட மிக குறுகிய காலத்தில் நுரையீரலை பாதிக்கிறது. இந்த கொரோனா உருமாற்றம், 15 மடங்கு வேகமாக செயல்படுகிறது.

வயதானவர்களையும், இளைஞர்களையும் முதல் இரண்டு அலைகள் அதிகமாகபாதிப்படைய செய்தது. வருகின்ற மூன்றாவது அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

இந்திய மக்கள் தொகையில், 30 சதவிகிதம் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இப்போதுவரை கண்டறியபடவில்லை. இவர்களை வைரசுக்கு எதிராக மாற்றுவது என்பது கடினம்.

18 வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் 70% மக்களை இந்திய மக்கள் தொகையில் கொரோனாவிற்கு எதிரானவர்களாக மாற்ற இயலும்.

இதன் மூலம் கொரோனாவின் தாக்குதல் மற்றும் அதன் வீரியம் குறைக்கப்பட்டும், அவர்களை காப்பாற்றவும் முடியும். எனவே கொரோனவை அழிக்க தடுப்பூசிகளை மேம்படுத்துவது அவசியம்.

மேலும் கொரோனாவின் தடுப்பூசி பற்றிய ஆய்வுகள் முக்கியம். அப்போதுதான் கொரோனவை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.