• உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருவாரூர் மாவட்டம் நன்னீலம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.
  • வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
  • திருவாரூர் மாவட்டத்தில் சட்ட பேரவை தேர்தலை ஒட்டி 14 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஸ்ரீ பிரியா தலைமையில் போலீசார் நேற்று இரவு வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.போலீசார் நடத்திய சோதனையில் 1.58 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
  • உரிய ஆவணம் இல்லாத பச்சத்தில் அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் நன்னீலம் தேர்தல் பறக்கும் படை மூலமாக நன்னீலம் சட்ட பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
See also  பிரதமரின் உஜ்வாலா இரண்டாம் கட்ட திட்டம்