ஜின்கோவிட் டேப்லெட் ஜின்கோவிட் அபெக்ஸ் டேப்லெட் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் உடலில் வைட்டமின் குறைபாடுகள் ஏற்படும் போது, அந்த நபருக்கு மருத்துவர்கள் ஜின்கோவிட் மாத்திரையை பரிந்துரைக்கின்றனர். இந்த மாத்திரையில் வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் துத்தநாகம் போன்றவற்றின் உயர் கலவை உள்ளது. உடலின் நரம்பு மண்டலத்தின் பயனை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, ஜின்கோவிட்டில் உள்ள செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ ஆரோக்கியமான உயிரணு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, அதே நேரத்தில் வைட்டமின் சி உங்கள் உடலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதை பழுதுபார்க்க உதவுகிறது. இதய நோய், நீரிழிவு நோய், காசநோய் மற்றும் வாத நோயாளிகள் மற்றும் கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் ஊட்டச்சத்து நிரப்பியாக ஜின்கோவிட் மாத்திரைகள் பயன்படுத்தப் படுகின்றது. இன்றையக் கட்டுரையில் ஜின்கோவிட் மாத்திரையின் பயன்கள், நன்மைகள் மற்றும்…
Author: sowmiya p
பொருத்தங்கள்: 1.. தினப் பொருத்தம் 2. கணப்பொருத்தம் 3. மாகேந்திரப் பொருத்தம் 4. ஸ்திரீ தீர்க்கம் 5. யோனிப் பொருத்தம் 6. இராசிப் பொருத்தம் 7. இராசி அதிபதி பொருத்தம் 8. வசியப் பொருத்தம் 9. ரஜ்ஜிப்பொருத்தம் 10. வேதைப் பொருத்தம் 11. நாடிப் பொருத்தம் 12. விருட்சப் பொருத்தம் மேலே குறிப்பிட்ட திருமணத்திற்கு பல பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. அதில் மிக முக்கியமானதாக திருமணம் செய்ய உள்ள ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரம் பொருத்தம் அவசியம் பார்க்கப்படுகிறது. அதில் பெண்ணின் நட்சத்திரம் அவள் வாழப்போகும் புகுந்த வீட்டில் உள்ள உறவினர்களுக்கு எந்த பிரச்னையும் ஆகாது என்பதை உறுதி செய்யப்படுகிறது. சில நடத்திரங்கள் வாழப்போகும் வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப்போகாததாக இருக்கும். அவற்றை இங்கு பார்ப்போம்… நட்சத்திர பொருத்தம்: பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் இருந்தால் மாமனாருக்கு ஆகாது. பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரம் இருந்தால் மாமியாருக்கு ஆகாது. பெண் நட்சத்திரம் கேட்டையாக இருந்தால் மூத்த மைத்துனருக்கு…
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:- தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. நூல்வகைகள்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்: “நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப் பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம் இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.” இந்தப் பாடல் குறிப்பிடும் நூல்கள் நாலடியார் நான்மணிக்கடிகை இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று) இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று) கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று) களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று) ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று) ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று) திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று) திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று) முப்பால் (திருக்குறள்) திரிகடுகம் ஆசாரக் கோவை பழமொழி சிறுபஞ்சமூலம் கைந்நிலை முதுமொழிக் காஞ்சி ஏலாதி இந்தப் பாடலில் கைந்நிலை என்பது…
ஜோதிடத்தில் ஒவ்வொரு தினமும் பஞ்சாங்கத்தில் ஹோரை நேரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. இந்த ஹோரை நேரம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், அந்த நேரங்களை சரியாக பயன்படுத்தினால் நம் வாழ்க்கையில் வெற்றி தான்…. எந்த ஹோரையில் என்ன செய்ய வேண்டும்? ஜோதிட பஞ்சாங்கத்தில் மிக முக்கியமான அம்சம் கிரகங்கள். ஒரு நாளில் ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு குறிப்பிட்ட நேரம் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. அதோடு எந்த கிழமையில் எந்த கிரகம் ஆதிக்கம் பெற்று விளங்கும். எந்த ஹோரையில் சுப நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும் என அனைத்தும் ஹோரையின் படி தான் நடக்கிறது ஹோரை என்றால் என்ன? சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என வரிசையாக மொத்தம் 7 ஹோரைகள் உள்ளன. இந்த வரிசையிலேயே ஹோரை நேரங்கள் வரும். காலையில் சூரிய உதயம் ஆன முதல் அன்று எந்த கிழமையோ, அந்த கிழமைக்கான உரிய ஹோரை தொடங்கும்.…
கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம் இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள். தேவையான பொருட்கள்: மீன் – 1/2 கிலோ உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் கிரேவிக்கு…:– வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 3 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 3 (நீளமாக கீறியது) மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் -…
செதிரிசீன் பயன்பாடுக்கான / Cetirizine Tablet மற்றும் பிற நிலைமைகள் சிகிச்சை சுட்டிக்காட்டப்படுகிறது இயங்கும் மூக்கு, எக்ஸிமா, தும்மல், அலர்ஜி அறிகுறிகள், தோல் ஒவ்வாமைகள், தோல் ஒவ்வாமை, தோல் ஒவ்வாமை எதிர்வினைகள், ஒவ்வாமை அறிகுறிகள், அரிப்பு, நீர் கலந்த கண்கள். இயங்கும் மூக்கு எக்ஸிமா தும்மல் அலர்ஜி அறிகுறிகள் தோல் ஒவ்வாமைகள் தோல் ஒவ்வாமை தோல் ஒவ்வாமை எதிர்வினைகள் ஒவ்வாமை அறிகுறிகள் அரிப்பு நீர் கலந்த கண்கள் பக்க விளைவுகளை: அனைத்து உள்ளடங்கிய பொருட்களிலிருந்து இருந்து ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் ஒரு பட்டிய லில் உள்ளது செதிரிசீன் பயன்பாடுக்கான / Cetirizine Tablet. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும். வறட்சி…
நாட்டுப்பற்று, தன்னலமின்மை, அஞ்சாமை, எளிமை, கடுமையான உழைப்பு, நேர்மை ஆகியவற்றின் இமயமாக திகழ்ந்து, தாய் நாட்டின் வளர்ச்சிக்கு பணி செய்வதற்காக தனது வாழ்நாள் முழுவதையும் ஒப்படைத்த தியாகத்தின் ஒளிவிளக்கு தான் நமது பெருந்தலைவர் காமராஜர். பிறப்பு : அப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தில் விருதுப்பட்டி என்ற ஊரில் 1903ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தார். தற்போது அந்த ஊர் விருதுநகர் என்ற நகரமாகத் விளங்குகிறது. இவரது தந்தையின் பெயர் குமாரசாமி நாடார் மற்றும் இவரது தாயாரின் பெயர் சிவகாமி அம்மையார் ஆகும். காமராஜரின் சிறு வயதிலேயே அவரது தந்தை காலமாகிவிட்டார். இதனால் காமராஜர் தனது தாய்மாமா கருப்பையா நாடாரின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தார். இளமையும், விடுதலைப் போராட்ட ஈடுபாடும் : காமராஜர் குடும்ப சூழல் காரணமாக தனது ஆறாம் வகுப்பிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். பின்னர் அவரது மாமா கருப்பையா நாடார் நடத்திவந்த துணிக்கடையில் பணி செய்து வந்தார். துணிக்கடையில்…
கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள், லேசான அறிகுறி தென்படுபவர்கள் என எல்லோருக்கும் மருத்துவர்கள் கொடுத்த பொதுவான மாத்திரை எதுவென்றால் இந்த டோலோ 650 தான். அதை எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும், அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம். கோவிட்-19 தொற்றுக் காலத்தில் உலக அளவில் அதிகம் விற்றுத் தீர்ந்த மருந்து இதுதானாம். உலக அளவில் விற்ற மாத்திரைகளின் அளவை அடுக்கி வைத்தால், உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை விட பல நூறு மடங்கு உயரமாக இருக்குமாம். உலக அளவில் மட்டுமல்ல, இந்தியாவில் எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது தெரியுமா? கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டதட்ட 650 கோடி (டன்) அளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது. பயன்படுத்துவதால் என்ன பயன்? பருவ காலத்தொற்றுக்கள், தலைவலி, காய்ச்சல், உடல் வலி போன்ற சின்ன சின்ன நோய்க்கான முன் அறிகுறிகள் தோன்றும்…
உங்கள் துறையில் ஒரு நிபுணராக உங்களை நிலைநிறுத்தக்கூடிய சக்திவாய்ந்த சந்தைப்படுத்தல் தந்திரமாகும். இது உங்கள் பார்வையாளர்களுடன் இணைக்கவும், புதிய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், உங்கள் லாப வரம்பை அதிகரிக்கவும் அனுமதிக்கும். Webinar என்றால் என்ன? (வரையறை மற்றும் அதன் பொருள் என்ன): முந்தைய webinar வரையறையில் குறிப்பிட்டுள்ளபடி, webinar என்பது ஆன்லைனில் நடத்தப்படும் கருத்தரங்கு ஆகும். பொருத்தமான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமின்றி மெய்நிகர் சந்திப்பை நடத்த இது உங்களை அனுமதிக்கிறது. வெபினார் மூலம், உங்கள் பார்வையாளர்களுடன் உங்கள் விளக்கக்காட்சியைப் பகிரவும். உங்கள் பார்வையாளர்கள் தங்கள் வீட்டின் வசதியை விட்டு வெளியேறாமல் பங்கேற்பதன் பலனைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கணினி அல்லது மொபைல் சாதனத்தைப் பயன்படுத்தி உங்கள் வெபினாரை வெறுமனே பார்க்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வெபினர்கள் வணிகம் தொடர்பானவை மற்றும் அவை அதிகாரத்தை கட்டியெழுப்பும் அல்லது உறவை கட்டியெழுப்பும் தந்திரமாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக நீங்கள் சர்வதேச, தொலைதூரக்…
தமிழ் மாதங்கள் 12 என்று அனைவரும் அறிவோம். ஆனால் ஆங்கில மாதம் பிப்ரவரியில் 4 ஆண்டுகட்கு ஒருமுறை லீப் ஆண்டில், ஒரு நாளைச் சேர்ப்பார்கள். ஆனால் நானுறு ஆண்டிற்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில், பிப்ரவரிக்கு நாளைச் சேர்க்க மாட்டார்கள்! ஆனால் நம் தமிழ் மாதங்களில் அப்படியெல்லாம் இல்லை. ஏன்? ஏனென்றால் தமிழ் முன்னோர்கள் ஆங்கிலேயர்களை விட மிகப் பெரிய அறிவாளிகள். அரைகுறை அறிவோடு உருவாக்கப்பட்டது ஆங்கிலேய நாட்காட்டி. தமிழ் முன்னோர்கள் மிகத் துல்லியமாக பூமி சூரியனைச் சுற்றும் கால அளவைக் கணித்தனர். அதாவது 365 நாட்கள் 15 நாழிகை 31 விநாடி 15 தற்பரை!!!!!! ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள் (Minutes), ஒரு விநாடி என்பது 24 நொடிகள் (Seconds) மற்றும் ஒரு தற்பரை என்பது 0.4 நொடி! அத்துணை நுட்பம்!!! அதாவது 365 நாட்கள் 6 மணி நேரம் 12 நிமிடம் 30 நொடிகள் (365 Days…
tamil letter writing format to friend-தமிழ் எழுத்து வடிவம் : (கொரோனா வைரஸ் பற்றி நண்பருக்கு கடிதம் எழுதுவது) [அனுப்புனர் பெயர்] [முகவரி] [அஞ்சல் குறியீடு] [கடிதத்தின் தேதி] [தலைப்பு: பொதுவாக தடிமனாக, கடிதத்தின் நோக்கத்தை சுருக்கமாக] – விருப்பமானது அன்புள்ள [பெறுநரின் பெயர்], எப்படி இருக்கிறீர்கள் நண்பர்களே, நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், நேற்றிலிருந்து நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன், நேற்றிலிருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன், கல்கோட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 75 பேர் இறந்தனர், நீங்கள் சமீபத்தில் படிக்கும் போது கல்கோட்டிற்கு சென்றிருந்தீர்கள், உங்கள் தந்தை வீட்டில் வருத்தமாக இருக்கிறார். எனக்கும் கவலையாக இருக்கிறது, அதனால் இந்தக் கடிதத்தை மிகவும் கவனமாக எழுதுகிறேன். விடுதியை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகமூடி அணிய வேண்டும். மேலும் ஒரு சானிடைசரை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள், உங்களை நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள், சீக்கிரம் உங்கள் படிப்பை முடித்துவிட்டு…
பதினாறு வயதுடைய கோவலனுக்கும் பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர். கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில் மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில் வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக் கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான். மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம்’ என விலை கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்கின்றான். கோவலன் செல்வம் கரைகின்றது. மாதவியோடு மனம் வேறுபடுகின்றான். மாதவியைப் பிரிந்து கண்ணகியை வந்தடைகின்றான். இழந்த பொருளை மறுபடியும் ஈட்ட நினைக்கிறான். கண்ணகி தன் காற்சிலம்புகளைக் கழற்றிக் கொடுக்கிறாள். கோவலன் இரவில் கண்ணகியை அழைத்துக் கொண்டு இழந்த பொருளை ஈட்டும் கருத்தோடு மதுரை செல்கிறான். மாதரி என்ற ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக்கிச் சிலம்பை…
பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில் நமது கனவில் வரும் விடயங்களுக்கான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம். இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்: நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள். ஒருவருக்கு அவர்களின் இறந்து போன தாய்-தந்தையர் கனவில் தோன்றுவார்களேயானால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்து அல்லது இடையூறைச் சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்திருக்கிறார்கள் என்று பொருள். இது பலரின் வாழ்வில் ஏற்பட்ட அனுபவ உண்மையாகும். தான் இறந்துவிட்டதுபோல் ஒருவருக்குக் கனவு வருமானால், அது நன்மைகளையே குறிப்பிடும் என எடுத்து கொள்ளலாம். சுக வாழ்க்கை உண்டாகும். உங்களின் உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல்…
Tamil Names English Names அபேட் பியர் Abate Pear அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம் Apple அம்பிரலங்காய் Ambarella சருக்கரை பாதாமி Apricot ஸ்ட்ராபெரி Arbutus Unedo ஏரோவுட் Arroeeood சீத்தாப்பழம் Annona முற்சீத்தாப்பழம் Annona muricata வெண்ணைப்பழம் Avocado லொவிப்பழம் Batoko Plum வாழைப்பழம் Banana பஞ்சலிப்பழம், சம்பு Bell Fruit வில்வப்பழம் Bael fruit அவுரிநெல்லி Bilberry கெச்சி Bitter Watermelon சிவப்பு ஆரஞ்சு Blood Orange நாகப்பழம் Blackberry நாவற்பழம் கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி Black currant அவுரிநெல்லி Blueberry சீமைப்பலா, ஈரப்பலா, கொட்டைப்பலா Breadfruit ஆனைக்கொய்யா Butter fruit பன்னீர் திராட்சை Black Grapes கடார நாரத்தை Buddha’s hand முந்திரிப்பழம் Cashew Fruit விளிம்பிப்பழம், தமரத்தங்காய் Carambola சேலா(ப்பழம்) Cherry சீத்தாப்பழம் Cherimoya மஞ்சள் முலாம்பழம் Cantaloupe சீமையிலுப்பை Chickoo கடாரநாரத்தை Citron நாரத்தை Citrus Aurantifolia கிச்சலிப்பழம் Citrus Aurantium கடரநாரத்தை Citrus medica…
