• கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது.
  • அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கான இன்று செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது.
  • இன்று தொடங்கி 23 ஆம் தேதி வரை நடக்கும் இந்த செய்முறை தேர்வை 1.5 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்.
  • பொதுவாக இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், உயிரி தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது.
  • மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், வரும் மே 5 -ஆம் தேதி பொதுத் தேர்வு துவங்க உள்ளது. மே 31-ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
  • மே 3-ஆம் தேதி நடக்க இருந்த மொழிப் பாடத் தேர்வு, மே 31ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
  • பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் கட்டமாக இன்று செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான செய்முறை பயிற்சி வகுப்புகளும் அனைத்து பள்ளிகளிலும் நேற்று நடத்தப்பட்டன.
  • தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்க உள்ளார்கள்.
  • மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்த வித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
See also  Flipkart-ல் மொபைல்கள், டிவி,லேப்டாப் மீது ரூ.1500 முதல் ரூ.50000 வரை தள்ளுபடி