ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்களுக்கு டாடா நுகர்வோர் சேவை (TCS) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து Off Campus Drive நடத்தப்பட உள்ளது. கல்வித் தகுதி: BCA / B.Sc / B.Voc வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் தேர்வு முறை: தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2021 மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த pdf லிங்கை கிளிக் செய்யவும். https://www.tcs.com/careers/smart-hiring-IT-drive
Author: gpkumar
ஹைலைட்ஸ்: கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13 ரேஷன் பொருட்கள் அடங்கி உள்ளது. தொகுப்பு பையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படமோ, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படமோ இடம் பெறவில்லை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜீன் 3-ஆம் தேதி இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்த தீவிரத்தின் காரணமாக இந்தியாவில் தினம்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் இந்தியாவில் தினமும் 3000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பால் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் குறிப்பிட்டக்காலத்திற்கான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 10-ம் தேதிலிருந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இந்த கொரோனா சிறப்பு ரேஷன் தொகுப்பு பையில் 13…
ஹைலைட்ஸ்: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவார்கள். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வருகிறார்கள். முதலமைச்சர் வேண்டுகோளின் பேரில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது திமுக எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது ஒரு மாத கால ஊதியத்தை கொரோனா நிவாரண…
Kancheepuram District Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant and Copyist Attender & Others காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எட்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்புக்கு காஞ்சிபுரம் பணியிடமாக கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பியுங்கள். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Kancheepuram District Court வேலையின் பெயர் : Office Assistant and Copyist Attender & Others கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு வேலையிடம் : Kancheepuram தேர்வு முறை : Interview மொத்த காலிப்பணியிடம் : 103 மாத சம்பளம் : Rs. 15,700 to 50,000 விண்ணப்பிக்க கடைசி நாள் : 06/06/2021 இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.…
ஹைலைட்ஸ்: முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. முருங்கை கீரையில் பாலைவிட நன்கு மடங்கு கால்சியம் உள்ளது. நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க, முருங்கை கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட வேண்டும். முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை மரத்தின் கீரை, பூ , காய், வேர், பட்டை ஆகிய அனைத்திலும் நிறைய சத்துக்கள் உள்ளது. நம் உடலில் இரத்தணுக்களின் அளவு குறைவாக இருந்தால், முருங்கைக்கீரையை சாப்பிட்டு இயற்கையான முறையில் இதனை அதிகரிக்கலாம். மேலும் முருங்கை கீரை உண்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகளை பார்ப்போம். கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை உருவாக்கும். பெண்களுக்கு பிரசவத்தின் போது இரத்தம் அதிகம் வெளியேறும். அதனால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை நெய் சேர்த்து வதக்கி சாப்பிட…
ஹைலைட்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவிலிருந்து ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்சிஜனை, விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் அனுமதி வழங்கியது. இந்த ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காணிப்பு குழுவினர் ஆலையை ஆய்வு செய்து, பிறகு ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். தொடர்ந்து இரவு, பகலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலையத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த…
ஹைலைட்ஸ்: சென்னை, கோவை, மதுரை உட்பட 14 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதார துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை காக்க, கூடுதலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் திறக்கப்பட்ட உள்ளது. இந்த ஆலைகளில் உதவியாளராக பணிபுரிய ஐடிஐ-யில் ஃபிட்டர் பயிற்சி முடித்தவர்கள், அதிக அளவில் தேவைப்படுவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா இரண்டாவது அலை மக்களை அச்சுறுத்தும் வகையில், உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தமிழகம் முழுவதும் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழக்கிறார்கள். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு, கூடுதல் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் தொடங்க…
ஹைலைட்ஸ்: தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். எந்த வகையிலும், என் பதவியையோ, என் பெயரோ தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது. நான் தலைமை செயலாளர் பதவியில் இருக்கும் வரை என் நூல்களை வாங்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பள்ளிக் கல்வித்துறைக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் பணி நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களை வைத்தும் சில நூல்களை எழுதி உள்ளேன். இவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக நான் பள்ளிக் கல்வித்துறைக்கு கடிதம்…
ஹைலைட்ஸ்: உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. நரம்பு சம்பந் தப்பட்ட பிரச்சனைகளுக்கு மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாங்காய் என்ற பெயரை கேட்டாலே வாயில் எச்சில் ஊறும். அதிலும் மாங்காயுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சுவையாக இருக்கும். மாங்காய் சாப்பிட்டால் சூடு என்பார்கள். மாம்பழத்தை விட மாங்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. நாம் இப்போது மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க மாங்காய் பெரிதும் உதவுகிறது. மாம்பழத்தில் தான் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் இருக்கும். மாங்காயில் கலோரிகள் இல்லை. எடையை குறைக்க விரும்புவோர் அச்சமின்றி மாங்காயை சாப்பிடலாம். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் இருந்தால், மாங்காயை சாப்பிடலாம். மாங்காய் சாப்பிட்டால் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். கர்ப்பிணி பெண்களுக்கு காலையில் மிகுந்த சோர்வும், வாந்தியும் ஏற்படும்.…
ஹைலைட்ஸ்: நடைப்பயிற்சி செய்வதால் நுரையீரலில் ஆக்சிஜன் கொள்ளளவு பல மடங்கு அதிகரிக்கும். நாம் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் நாம் அனைவருக்கும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவது மிகவும் நல்லது. ஒருவர் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கும். இதன் விளைவாக இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இவர்களுடைய இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். நாம் தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவித்து இருக்கின்றன. இந்தவகையில் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்ப்போம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவதால் நாம் உடலின் ரத்த ஓட்டம் சீராகும். நடைப்பயிற்சி கலோரிகள் எரிக்க உதவுகிறது. நாம் உடலின்…
ஹைலைட்ஸ்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு. தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கான பதில் குறித்து அதிமுகவினர் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 67 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், கடந்த 7 ஆம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், இன்று காலை மீண்டும் இக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கட்சி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு…
ஹைலைட்ஸ்: புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று கொண்டதை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்றனர். இதனைத்தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இறையன்பு ஐஏஎஸ் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சுற்றுலா துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2019-ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார். பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார் இறையன்பு. இவர் நாகை மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐஏஎஸ், இரண்டாவது செயலாளராக விருதுநகர்…
ஹைலைட்ஸ்: கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.4000. சாதாரண நகரப் பேருந்துகளில் மகளிர் அனைவருக்கும் இலவசப்பயணம். ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழா எளிமையாக நடந்தது. பதவியேற்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பிறகு மு.க.ஸ்டாலினை, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் முதலமைச்சருக்கான இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்தார். தலைமை அலுவலகத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார். 1. கொரோனா நிதியுதவியாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ .4000 வழங்கப்படும். முதல் கட்டமாக இம்மாதமே ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். 2. ஆவின் பால் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. இது வரும் மே 16 ஆம் தேதி அமுலுக்கு வருகிறது. 3. சாதாரண…
ஹைலைட்ஸ்: கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சம். இந்தியாவில் தொடர்ந்து ஒரு 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரேநாளில் 930 பேர் கொரோனாவால் உயிரிழப்பு. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களுக்கிடையே அச்சம் அதிகரித்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4லட்சத்தை கடந்து விட்டது. இந்நிலையில் தினசரி உயிழப்பும் 4 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி கடந்த ஒரு வாரத்தில் உலக கொரோனா பாதிப்பில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு 46% ஆக பதிவாகியுள்ளது. உலக அளவு கொரோனா உயிரிழப்பில் இந்தியாவின் உயிரிழப்பு 25% ஆக பதிவாகியுள்ளது. இன்று…
