ஹைலைட்ஸ் : ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 வழங்கும் திட்டம். தமிழகத்தில் உள்ள 2,07,66,950 அரிசி அட்டை தாரரக்ளுக்கு முதல் தவணை நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்குதல். இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போலவே, ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் திட்டத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தனது முதல் கையெழுதிட்டார். குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் ஏ.ஆர்.சக்கரபாணி செய்தியாளர்களிடம் இத்திட்டத்தை செயல்படுத்தப்படுவது குறித்து பேசினார். தமிழகத்தில் உள்ள 2,07,66,950 குடும்ப…
Author: Pradeepa
ஹைலைட்ஸ் : இன்று முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக ரூ.100 கோடியே 43 லட்சத்துக்கு மது பாட்டில்கள் விற்பனை. டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி இன்றி கடைகளின் முன் நீண்ட வரிசையில் காத்திருத்தனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தமிழக அரசு இன்று முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்த இருந்த நிலையில் சனி மற்றும் ஞாயற்றுக்கிழமைகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு தினங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்கள் மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும்…
ஹைலைட்ஸ்: மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும். கொரோனா B.1.617 என்ற வகைதான் மிகவும் மோசமானதாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. கொரோனவை அழிக்க தடுப்பூசிகளை மேம்படுத்துவது அவசியம். மூன்றாவது அலை கொரோனா வைரஸ் பற்றி பொதுவான தகவல் மற்றும் சிக்கல்கள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவிடம் நேற்று கொரோனா மூன்றாவது அலைக்கு இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அதற்காக அரசு இப்போதிருந்தே அனைத்துக்கும் தயாராகி வருகிறது. ஏனெனில் அது எப்போது வரும் என்பது பற்றி கணிக்க முடியாது. விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கொரோனா உருமாற்றங்கள், மேற்கொண்டு நிறைய மாற்றங்களை இந்தியாவில் பரவலாக ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்வதாலேயே, கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வகைகளில், B.1.617 என்ற வகைதான் மிகவும் மோசமானதாக இந்தியாவில் பார்க்கப்படுகிறது. அண்மையில் அதிகம் பேசப்பட்ட ஆந்திராவில் பரவிய உருமாறிய கொரோனா வகை, ஒருசில பகுதிகளில் மட்டுமே இருக்கின்றது. கொரோனா…
தமிழகத்தில் வரும் 10-ம் தேதி இருந்து இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி கொண்டு இருக்கிறது. இதனால் தமிழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் 144 ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாடுகள் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தனியார் அலுவலகங்கள் செலயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மளிகை கடை, தேனீர் கடை, இறைச்சி கடை மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செய்யப்படும். ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே செயல்படும். அரசு, தனியார் பேருந்துகள், டாக்ஸிகள், வாடகை ஆட்டோகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், காப்பிட்டு நிறுவனங்கள், ATM ஆகியவை 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், உயிரியல்…
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. அரசியல், சினிமா, துறையை சார்த்த பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமா நடிகர் பாக்யராஜ் அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் பாகியராஜ் அவரின் ஒரே மகன் சந்தனு பாகியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் எனது பெற்றோருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் படி எனது பெற்றோர் பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். மேலும் எங்களுடன் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்திக்கொண்டனர். கடந்த 10 நாட்களில் எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நலம்பெற வேண்டிக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருமையான ஆட்சியை பிடித்துள்ளது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மே 4 ஆம் தேதி நடைபெற்றது. சட்டப்பேரவை திமுக கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 கூட்டணி கட்சி உறுப்பினர்களை சேர்த்து மொத்தம் 133 உறுப்பினர்களின் ஆதரவு ஸ்டாலினுக்கு கிடைத்தது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 9.10 மணிக்கு மு.க. ஸ்டாலின் அவருக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் நடைபெற்றது. ஸ்டாலின் அவருடன் சேர்ந்து 33 அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவிற்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நீதிபதிகள் என 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.…
அமைச்சர் பதிவில் 2 பெண்கள் 2 சிறுபான்மையர்கள் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 1. ஸ்டாலின் – முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்) 2. துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர் 3. கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் 4. பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர் 5. பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர் 6. எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர் 7. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத் துறை அமைச்சர் 8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் – வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் 9. தங்கம் தென்னரசு – தொழில்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறை அமைச்சர் 10. எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர் 11. முத்துசாமி – வீட்டுவசதித்துறை அமைச்சர் 12. பெரியகருப்பன்…
ஹைலைட்ஸ்: 5ஜி சேவை பற்றி இந்தியா முடிவு. 5ஜி சேவை சோதனைக்கு மத்திய அரசு அனுமதி. சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்தகூடாது. இந்தியாவில் இதுவரை 4G சேவை மட்டுமே செயல்பாட்டில் இருந்து வருகிறது. இனி 5G சேவை பற்றி இந்தியா எடுத்த முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு 5G யை பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருபினும் அதே சமயத்தில் சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்தகூடாது என்றும் சீன நிறுவனங்களிடம் உதவி கேட்டக்கூடாது என்றும் 5G சேவை சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. அந்தவகையில் இந்தியா சீனாவின் Huawei ZTE ஆகிய நிறுவனங்களை ஒதுக்கி தள்ளுவது இந்திய மக்களுக்கும் உலகிற்கும் நல்லது என அமெரிக்கா எம்பிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவு பார்க்கும் நிறுவனங்கள் என்றும் அவர்கள்…
ஹைலைட்ஸ் : IPL 14 சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கியது. வீரர்கள், பயிற்சியாளர்கள் என 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. ஐபிஎல் போட்டி 14ஆவது சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதி ஆரபமாகி பரபரப்பாக நடைபெற்று வந்தது. அந்த போட்டியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால், மற்ற போட்டிகள் காலவரையறையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்னும் 31 போட்டிகள் நிலுவையில் உள்ளன. பிசிசிஐ ஆனது இந்த நிலுவை போட்டிகள் அனைத்தையும் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன் நடத்தப்படும் என கூறப்படுகிறது. வருகின்ற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. இதற்குள், மற்ற ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சாத்தியமற்றது எனப் பல கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிகின்றனர். மைக்கேல் ஆதர்டான்…
கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை காற்றை போல வேகமாக பரவி வருகிறது. பிரபல நகைசுவை நடிகர் ‘பாண்டு’ கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிர் இழந்தார். பாண்டு அவருடைய மனைவி குமுதா இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சை பலன் இன்றி இன்று காலை உயிர் இழந்தார். அவருடைய மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். தமிழ் சினிமா துறையில் சிறந்த நகைசுவை நடிகரான இவர் 1975 ஆம் ஆண்டு ‘மாணவன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் 100 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். 74 வயது ஆன இவர் சின்னத்தம்பி, காதல் கோட்டை , வாய்மையே வெல்லும், வெற்றி கொடி கட்டு, சந்தோசம், லூட்டி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.…
புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அமெரிக்காவின் ஸ்பெஸ் X நிறுவனம் தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் 60 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்திய நேரப்படி நேற்று இரவு இந்த செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பெஸ் X நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள்களின் பகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டு ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது. இந்த பால்கன் 9 ராக்கெட் பூஸ்டரை கொண்டு ஸ்பெஸ் X நிறுவனம் மறுசுழற்சி முறையில் 8 முறை ராக்கெட்டை அனுப்பி உள்ளது. உலகம் முழுவதும் செயற்கை கோள்களை அனுப்பி வரும் ஸ்பெஸ் X நிறுவனம் இதுவரை ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றான ரேஷன் கார்டு மூலம் மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டு தற்போது ஸ்மார்ட் கார்டு அக மாறியுள்ளது. இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை குறைவான விலையில் பெற்று கொள்கின்றனர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டு மூலம் பல்வேறு சலுகைகளை வழகியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு போதுமான சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், கிருமி நசுனி கொண்டு கை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்க குடும்ப தலைவர் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்க கைரேகை வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால்…
மிக பெரிய பொது துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கி வருகிறது. SBI வங்கி வாடிக்கையாளர்களின் நிலையை அறிந்துகொள்ள முயற்சியில் வீட்டில் இருந்தே ஆவணங்களை அப்டேட் செய்ய தபால் மற்றும் ஆன்லைன் மூலம் அனுப்பும் வசதியை உருவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்கள் வங்கிகளுக்கு செல்வது சிரமமாக உள்ளதால் SBI வங்கி இந்த சேவையை ஏற்படுத்தியுள்ளது. மே மாத இறுதிக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஒய்சி(KYC) ஆவணங்களை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் KYC அப்டேட் செய்வதற்க்கான ஆவணங்களை தபால் மற்றும் ஆன்லைன் மூலம் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான கால அவகாசம் மே 31 ஆம் தேதி…
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா தொற்றை தடுக்க மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு மே 6 ஆம் தேதி காலை 4.00 மணி முதல் மே 20 ஆம் தேதி 4.00 மணி முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. புதிய கொரோனா கட்டுப்பாடுகள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள்,…
