Author: gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.24 உயர்ந்து ரூ.33,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 4,235 க்கு விற்கப்படுகிறது உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்புகிறார்கள். அமெரிக்க டாலர்கள்,பங்குச்சந்தை,ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது தொழில்துறை தேக்கம் பற்றி பீதி நிலவி வரும் நிலையில் தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கதத்துடன் காணப்படுகிறது. ஏற்கனவே 2021-22ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது . ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.3 உயர்ந்து ரூ.4,235-க்கு விற்கப்படுகிறது.…

Read More

தேர்தல் பிரசாரத்திற்காக திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை சென்றிருந்தார். திருவண்ணாமலையில் இன்று நடந்த பிரசாரத்திற்காக கல்லூரியில் தங்கியிருந்தார். தற்போது அவர் தங்கிருந்த கல்லூரியில் சோதனை நடக்கிறது. சோதனை நடக்கும் இடங்களில், வெளி நபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் உள்ளே இருப்பவர்கள் யாரையும் வெளியே அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்றும், பேட்டி தேர்தலை எதிர்கொள்ள தைரியம் இல்லாமால் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறுகிறார். இந்த செயல் கண்டிக்கத்தக்க செயல் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டித்து வருகிறார். திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர் திமுகவின் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலையில் போட்டியிடும் எ.வ.வேலு அவரின் வீடு, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அவருக்கு சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் என…

Read More

தமிழகத்தில் கடந்த ஒரு வரமாக பள்ளி மற்றும் கல்லூரி, நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஆனால் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் முழு ஊரடங்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு இல்லை, மினி ஊரடங்குதான் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிட்ட தெரு மற்றும் வீடு போன்ற பகுதிகளில் மட்டும் ஊரடங்கு செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீச தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு…

Read More

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகளை நேரடியாக சம்மந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கே சென்று வாக்குகள் சேகரிக்கும் பணி இன்று காலை சென்னையில் தொடங்கியது. சென்னையில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகளை இன்று முதல் 31-ம் தேதி வரை 7 நாள்களுக்கு வீடுகளுக்கு சென்று வாக்குகள் பெறப்பட உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதற்காக மாநகராட்சி சார்பில் 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மாநகராட்சி சார்பில் ஒரு குழு நாள் ஒன்றுக்கு 15 பேரிடம் தபால் வாக்குகள் பெற உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் இவர் வாக்கு ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் மொத்தம் 7300 பேர் அஞ்சல் வாக்களிக்க தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். இதில் 80 வயதானவர்கள் 6,992 பேர், மாற்றுத் திறனாளிகள் 308 பேர் என்று சென்னை மாநகராட்சி…

Read More

முதல் முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தமிழ் நாட்டிற்கு வருகிறார். தமிழ் நாட்டில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. மேலும் அனைத்து கட்சி தலைவர்களும், தற்போது ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் முக்கிய அரசியல் பிரபலங்கள் தங்களது காட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, முதல் முறையாக நாளை மறுநாள் தமிழகத்திற்கு வருகிறார். கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திங்கள் நகரில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Read More

சிவகாசி அருகே அப்பையநாயக்கன்பட்டியில் இருக்கும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் வெடி விபத்து ஏற்பட்டுயுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். மேலும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேறு யாரவது சிக்கி உள்ளார்களா என தேடும் பணியை தீவிரப்படுத்தி உள்ளார்கள். வெடி விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில் இந்த பட்டாசு ஆலை ஆனந்த் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. வெயில் காலம் என்பதால் இந்த வெடி விபத்து நிகழ்ந்ததாக தொழிலாளர்கள் கூறுகிறார்கள். இந்த பட்டாசு ஆலைக்குள் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அங்கு பதற்றம் நிலவிவருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த ஒன்றரை மாதத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது. கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்தார்கள். நிறைய பேர் படுகாயங்களுடன் இன்னும் சிகிச்சை…

Read More

ஐந்து நிறங்களில் இரண்டு வகையான புதிய பைக்குகளை மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது பிரபலமாக இருக்கும் இருசக்கரம் வாகனம் தயாரிக்கும் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இன்டர்செப்டார் 650 (Interceptor 650) என்ற பெயரிலும் , கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650)என்ற பெயரிலும் ஐந்து நிறங்களில் புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குககளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புது வகையான ராய் என்ஃபீல்டு வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு பல புதிய சிறப்பு அம்சங்களை இந்த புதிய பைக்குள் அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஆனால் இந்த புதிய பைக்கிள் இஞ்சின் போன்ற அடிப்படை அமைப்புகளை மாற்றி அமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இன்டர்செப்டார் 650 என்ற புதிய பைக்கின் விலை ரூ.2,75,000 என நிர்ணித்துள்ளது. இரண்டாவது கான்டினென்டல் ஜிடி 650 என்ற பைக்கின் விலை ரூ.2,91,000 என்றும் நிர்ணித்துள்ளது.இந்த இரண்டு வகையான வாகனங்கள்…

Read More

சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளஓட்டு போடுதல், வாக்கு இயந்திரத்தில் மோசடி, வாக்குச்சாவடிகள் கைப்பற்றுதல் போன்றவற்றை தடுக்க வேண்டும்.மேலும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கிற்கு வரும் திங்கள்கிழமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்திற்கு நேர்மையாக, நியாயமாக தேர்தல் நடக்கிறது என வாக்காளர்கள் திருப்தியடையும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30ஆம் தேதி வரை இடைநிறுத்தம் செய்துவதாக மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. இதைப்பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை வீசல் காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறை சர்வதேச சரக்கு விமானங்களுக்கும், விமான போக்குவரத்துக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சரக்கு விமானங்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தாது. அவசரக் காலத்தில் கொரோனா வைரஸ் பரவலைப் பொருத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்க கூடும். கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்திருந்தது. அதன்பின்னர் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரக் கடந்த ஆண்டு…

Read More

கடந்த 24 நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து கொள்ள மத்திய அரசு சார்ப்பில் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து கொண்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 24 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11-க்கு விற்கப்பட்டது. அதேப்போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.86.45-க்கு விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று குறைந்து இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்த ஆண்டு ஆரம்பத்தில் கடுமையாக உயர்ந்து வந்த நிலையில், கடந்த 24 நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று விலை குறைந்திருப்பது வாகன ஓட்டிகளை…

Read More

கொரோனா கால கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23–ந் தேதி அன்று கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வங்கி சேவைகள் முடங்கியதோடு, வங்கி கடன்களுக்கான வட்டியை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டியாக கூட்டு வட்டித் தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா காலத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 முதல் ஆகஸ்ட் 31 வரை ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது. அந்த கால கட்டத்தில் வட்டியை செலுத்தாமல், ஒத்திவைப்பு சலுகையை பெற்றவர்களுக்கு கூடுதல் வட்டி விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு தாக்கலை அசோக்பூஷண் மற்றும் நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி மற்றும்…

Read More

Anthony Rotolo, a professor from Syracuse University is offering the Dr. Who Class, an adventure for students who want to go through space and time exploring the cultural impact of the BBC series Dr. Who Rotolo calls the course an “un-class” as it is not officially a course offered by the university, although students can register. The property, complete with a 30-seat screening room, a 100-seat amphitheater and a swimming pond with sandy beach and outdoor shower, was asking about $40 million, but J. Lo managed to make it hers for $28 million. As the Bronx native acquires a new…

Read More

வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்தின் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைக்க பிரபல பாலிவுட் போஸ்டர் டிசைனர் ராகுல் நந்தாவை அழைத்து வந்துள்ளாராம். அஜித்தின் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறதாம். அஜித் நடித்து வரும் வலிமை படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் 90 சதவீத காட்சிகளை படமாக்கிவிட்டார்கள். அடுத்த மாதம் இந்த படக்குழு ஒரு முக்கிய பைக் ஸ்டண்ட் காட்சியை படமாக்க ஸ்பெயினுக்கு கிளம்புகிறதாம். ஸ்பெயினில் 10 நாட்கள் தான் ஷூட்டிங் நடத்த உள்ளர்கள். இதை முடிந்துவிட்டால் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவடைந்து விடும் என்கிறார்கள். வலிமை படம் பற்றி ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த அப்டேட்டும் இல்லை என்பதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையாவது வெளியிடுங்கள் என்று ரசிகர்கள் கேட்டும் பலனில்லமல் இருந்தது. அஜித் ரசிகர்கள் போனி…

Read More

நேற்று மாலை சினிமா துறைக்கான 67வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்துள்ளது. வெற்றிமாறனின் ‘அசுரன்’ படம் சிறந்த தமிழ் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ் தேர்வு செயப்பட்டுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருது ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்காக விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக இரண்டு விருதுகள் பார்த்திபனுக்கு கிடைத்துள்ளது. மேலும் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கே.டி. என்கிற ‘கருப்புதுரை’ படத்திற்காக நாக விஷாலுக்கு கிடைத்துள்ளது. தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் இருந்த கங்கை அமரன், நான் விருதுகள் கிடைக்க போராடவில்லை, அவர்களாகவே தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், அசுரனுக்கு சிறந்த படத்திற்கான விருதையும் கொடுத்துள்ளார்கள் என்று கூறினார். இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும்…

Read More