Advertisement
Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use

கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது.

கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்- ஏ வாக மாற்றம் அடைகிறது. இது கண் பார்வையை தெளிவாக்குகிறது. மேலும் வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் வராமல் இருக்கும். இதற்கு காரணம் விட்டமின் ஏ தான். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவாக எடுத்து கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் கேரட்டில் நிறைந்து காணப்படும் பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ஒரு கேரட் தினமும் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கலாம். இதன் மூலம் குடல் புண்கள் ஏற்படாது, இதய நோய்களும் வராது.

வைட்டமின் ஏ, சி, கே போன்ற உயிர்ச்சத்துக்கள், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்கள் கேரட்டில் அதிக அளவு உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கல்லீரலுக்கு மிகவும் சிறந்தது. கேரட்டை மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும், பற்களில் இருக்கும் கரைகளையும் நீங்கும்.

திப்பியில்லாமல் கேரட்டை நன்றாக அரைத்து ஜுஸாகக் குடித்தால் வயிற்றுப் போக்கு, மூல உபத்திரம், வயிற்றுவலி விரைவில் குணமடையும். பால் விரும்பாத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம்.

வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. இது பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. சருமத்தில் அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் செய்து சாப்பிடலாம்.

சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குறைக்கவும், அந்த இடத்தில் உண்டாகும் புண்னை குணபடுத்தயும் கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம். இதன் மூலம் நமக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

தினமும் கேரட் ஜுஸ் குடித்து வந்தால், கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும்போது ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்கலாம். கேரட்டை சிறிது வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அதன் மொத்த சத்தையும் நம் உடல் நன்றாக பெரும்.

 

Previous Post
vaccine

வெவ்வேறு டோஸ் தடுப்பூசி எடுத்துகொண்டவர்கள் கவலைப்பட வேண்டாம் - அரசு மருத்துவ ஆலோசகர்

Next Post
children

குழந்தைகளை ஆட்டி படைக்கும் கொரோனா..!

Advertisement