தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஆகஸ்ட் 9 ஆம்தேதியில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு மீன்பிடிக்க…
Author: gpkumar
தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இந்த பாடப்புத்தகங்களில் தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் வரும் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. பாடநூல் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமிக்கப்பட்டதை அடுத்து, பள்ளிப் பாடப்புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் “பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள்” என்ற பாடப்பகுதியில், தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் என்ற பெயரிலிருந்து ஐயர் என்பதை நிக்கி உ.வே.சாமிநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பதை மீனாட்சி சுந்தரனார் எனவும், நாமக்கல் கவிஞர்…
ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைக் வென்ற அமெரிக்காவின் மைக்கேல் பெலப்ஸ், அதி சிறந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் போன்ற உலகின் தலை சிறந்த வீரர்கள் பலரும் தங்கள் பதக்கங்களை வாயில் வைத்து கடிப்பது போன்ற புகைப்படத்தை நாம் பார்த்திருக்கிறோம். ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பதைப் பற்றி பார்ப்போம். அந்த காலங்களில், பணப்பறிமாற்றத்திற்கு பதிலாக தங்கத்தை பறிமாற்றம் செய்வது வழக்கமாக வைத்து கொண்டு உள்ளார்கள். இதனால் தங்கக் காசின் உண்மைத்தன்மையை அறிய வியாபாரிகள் அதை கடித்துப் பார்த்து சோதிப்பார்கலாம். தங்கம் ஒரு மிருதுவான உலோகம் என்பதால் அதனை லேசாக கடித்தால் கூட தடம் பதிந்துவிடும். அதற்காக, ஒலிம்பிக் சாம்பியன்களும் தங்களுக்கு அளித்த பதக்கத்தின் உண்மைத்தன்மையை அறிய இப்படி கடிக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். அவர்கள் புகைப்படத்திற்காகத்தான் அவ்வாறு செய்கிறார்கள் என்பது தான் உண்மை. 1912-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெல்லும் வீரர்களுக்கு சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட…
வெங்காயம் மற்றும் பூண்டின் பயன்பாடு சமையலறையில் இன்றியமையாதது. நம் அன்றாட உணவில் வெங்காயம், பூண்டு ஆகிய இரண்டு உணவு பொருட்களை சேர்த்து சமைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் நிறைத்து உள்ளது. இவை நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது. மேலும் பூண்டு, ஆற்றல் வாய்ந்த பல வகையான சல்பர் கலவைகளை கொண்டுள்ளது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பூண்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் நாம் அன்றாட உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தில் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 20 பூண்டு – 20 (பல் பூண்டு) புளி – ஒரு எலுமிச்சை பழம் அளவு நல்லெண்ணெய் – 1 குழிகரண்டி அளவு தக்காளி – 1…
ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டண உயர்வு இன்று (ஆகஸ்ட் 1 முதல்) அமலுக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளில் ஒரு மாதத்தில் மூன்று முறை கட்டணமில்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்க்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கட்டணம் 15 ரூபாயில் இருந்து 17 ஆக உயர்கிறது. அதேப்போல் பணம் அல்லாத மற்ற பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணமாக இருந்த நிலையில் தற்போது அது 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, இன்று முதல் ஏடிஎம் கட்டணம் மற்றும் பணம் அல்லாத பரிவர்த்தனை கட்டணம் அனைத்து வங்கிகளிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் கட்டணம் அதிகரிப்பு வங்கி வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.…
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களும், பள்ளி அளவில் தேர்வு எழுதாத தனித்தேர்வர்களும் ஆகஸ்ட் 6ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு ஏற்றவாறும் தேர்வுத் தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தவறாமல் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும். இவர்கள்…
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் சானு இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்திருக்கிறார். இவருக்கு அடுத்து குத்துச் சண்டை போட்டியில் லாவ்லினா இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில், வட்டு எறிதல் போட்டியில் இந்தியா வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெள்ளி பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஒலிம்பிக்கின் வட்டு எறிதல் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த குரேஷிய வீராங்கனை 63.75 சராசரி தான் பெற்று இருக்கிறார். ஆனால், வட்டு எறிதல் குரூப் பி பிரிவில் இடம்பெற்ற இந்தியா வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 64 சராசரி பெற்று இருக்கிறார். இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் இறுதிப் போட்டியிலும் இதே அளவில், அதாவது 64 சராசரியுடன் வட்டு…
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து இருந்தது. இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும், கொரோனா சூழலால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் 75 % கல்விக் கட்டணம் செலுத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் 85% கல்விக் கட்டணத்தை 6 தவணைகளாக வசூலிக்கலாம் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலால் வேலை இழந்தவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை குறித்து பள்ளிகளில் முறையீடு செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. RTE சட்டத்தில் நிரப்பப்படாத இடங்களை கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு ஒதுக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கட்டணம்…
இந்தியாவில் நண்பர்கள் தினம் (2021 இனிய நண்பர்கள் தினம் ) 2021 ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று கொண்டாடப்படும். கோவிட் -19 அச்சுறுத்தலுக்கு இடையே வெளியே சென்று நட்பு தினத்தை கொண்டாடுவது சவாலானதாக தான் இருக்கும். நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2021ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதியிலே முதல் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆதனால் நண்பர்கள் இத்தினத்தை வரவேற்க ஆர்வத்துடன் இருக்கிறார்கள். பொதுவாக நண்பர்கள் மற்றொரு குடும்பத்தைப் போன்றவர்கள் என்று கூறலாம், அதனால்தான் இது இந்தியாவிலும் உலகெங்கிலும் பகிரங்கமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச நண்பர்கள் தினம் 2021 ஜூலை 30 அன்று அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது, ஆனால் இந்தியா மற்றும் பங்களாதேஷ் போன்ற பல நாடுகளில், ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவது ஒரு பாரம்பரியமாகும். நண்பர்கள் தினம் எப்போது…
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளின் பக்கம் வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டும் சில மாதங்கள் பள்ளிகளுக்கு சென்றனர். கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த காரணத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் இந்த கல்வி ஆண்டு…
புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த காய் சிறந்த மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. புடலங்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. பீர்க்கங்காய், சுரைக்காய், பாகற்காய் போன்று புடலங்காயும் நாட்டுக்காய் வகையை சார்ந்தது. புடலங்காய் கூட்டு, புடலங்காய் வேர்க்கடலை சேர்த்த பொரியல், புடலங்காய் தொக்கு என பல வகை டிஷ்கள் செய்து சாப்பிடலாம். நாய்ப்புடலை, கொத்துப்புடலை, பன்றி புடலை, பேய்ப்புடலை என பல வகை புடலங்காய்கள் இருந்தாலும், பலரும் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதில்லை. இவர்கள் புடலங்காயை மறந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். புடலங்காயை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதைப் பற்றிப் பார்ப்போம். புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், வயிற்றுப்புண், தொண்டைப்புண் போன்றவைகள் குணமாகும். அஜீரண கோளாறு பிரச்சனை…
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி(Kalvi Television) மூலம் வகுப்பு வாரியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு செய்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க வருகிறார்கள். அவ்வாறு அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வித் தொலைக்காட்சியை பார்க்கிறார்களா…
தினமும் காலை உணவை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும். காலை உணவு அன்றைய பொழுதை புத்துணர்ச்சியுடன் கழிக்க உதவும். காலை உணவு எடுத்து கொள்வதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு சில உணவு பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் எந்த உணவு சாப்பிடக்கூடாது, எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். சாப்பிடக்கூடாத உணவுகள்: தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. தக்காளியில் இருக்கும் டேனிக் அமிலம், இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து கரைய முடியாத ஜெல்லை உருவாக்குகிறது. இதனால் வயிற்றில் கற்கள் கூட உருவாகும். மேலும் இதனால் அல்சர் போன்ற பிரச்சினைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் வெறும் வயிற்றில் தக்காளி ஜூஸ், தக்காளி சாஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதிலிருக்கும் மக்னீசியம்…
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு பிப்ரவரி முதல் அமலுக்கு வரும் என்று நேற்று தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் MBC (V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் விநியோகம் நேற்று தொடங்கியது. இந்நிலையில் மாணவர்கள் நேற்று முதல் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இச்சூழலில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் இன்று MBC(V) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புகளில் சேர நேற்று பதிவு செய்த மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று பதிவு செய்த மாணவர்கள் NAME OF THE COMMUNUTY என்ற காலத்தில் திருத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். MBC-ஐ மூன்றாக…
